Total Pageviews

Tuesday, May 28, 2013

நல்லவேளை நான் உங்க உயிரை காப்பாத்திட்டேன்



ராணுவ நோயாளி : டாக்டர்! ஏன் இப்படித் தினமும் அடிபட்ட இடத்தில் கீறிக்கீறிப் பார்க்கிறீர்கள்? எனக்கு வலி தாங்க முடியவில்லையே!

டாக்டர் : அடிபட்ட இடத்தில் இருக்கும் குண்டை அகற்ற வேண்டாமா? இன்னும் அது கிடைக்கவில்லையே!

நோயாளி : முன்னமே சொல்வதற்கென்ன? அது என் சட்டைப் பையில்தான் இருக்கிறது.

---------------------------

அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?

மகன்: எங்க ஸ்கூல்’ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு.

அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.

-----------------------------

புதிதாக பள்ளிக்கு வந்த ஆசிரியை:  இந்த வகுப்பில் யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம். நான் ஒன்றும் கோபித்து கொள்ள மாட்டேன்.

மாணவர்கள் மவுனமாக அமர்ந்திருந்தனர். அப்போது வாண்டு பாபு மட்டும் நாற்காலியின் மீது ஏறி நின்றான்.
ஆசிரியை: பரவாயில்லையே தைரியமாக எழுந்து நிற்கிறாயே...

வாண்டு பாபு: இல்லை டீச்சர் நீங்க மட்டும் தனியாக நிக்கறீங்க. எனக்கு நொம்ப கஷ்டமாக இருந்தது. அதனால் தான் துணைக்கு நானும் நிக்கிறேன்!

----------------------------------------

 ஆசிரியர் : மூன்றாம் உலகப் போர் வந்தால் என்னஆகும் ?

  மாணவன்: (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்.
 
-------------------------
மகன் : அப்பா.... நான் கணக்குல 100 மார்க் வாங்கினா நீங்க என்ன சொல்வீங்க?

அப்பா : அப்படியா.. நீ மட்டும் அப்படி வாங்கிட்ட, சந்தோஷத்துல எனக்கு ஹார்ட் அட்டாக் வந்தாலும் வந்துடும்.

மகன் : நல்லவேளை நான் உங்க உயிரை காப்பாத்திட்டேன். கணக்குல 30 மார்க் தான் எடுத்தேன்!


=================

ஒரு சிறு மாறுதல் செய்யவேண்டும்..!



ஒரு செல்வந்தர் அபாயகரமான நோயிலிருந்து ஒரு மருத்துவரால் காப்பாற்றப்பட்டார்.
 
மருத்துவ மனையிலிருந்து புறப்படும்போது…

செல்வர் ; டாக்டர்.. நீங்கள் என் தெய்வம்.. எனக்கு உயிர் கொடுத்தவர்.. உங்களுக்கு மருத்துவக் கட்டணம் என்ற பெயரில் ஒரு சிறு தொகையைக் கொடுத்து உங்களை சிறுமைப் படுத்த விரும்பவில்லை..  

நான் நேற்று எழுதிய உயிலில் உங்கள் பெயரைக் குறிப்பிட்டு ஒரு சில்  சொத்துக்களை எழுதியுள்ளேன்.. இது என் காணிக்கை.

மருத்துவர் ; இதை ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள்..? சரி.. இனி தாங்கள் சாப்பிடவேண்டிய மருந்துப் பட்டியல் ஒன்று தந்தேன் அல்லவா..? அதைக் கொஞ்சம் கொடுங்கள்..

செல்வர் ; ஏன் டாக்டர்..?

மருத்துவர் : ஒரு சிறு மாறுதல் செய்யவேண்டும்..!!!

இனி மேல் சீனியே சேர்த்துக்கொள்ளக் கூடாதுன்னு





சீனி வாசன்  என்ற உங்கள் பெயரை ஏன் வாசன் என்று மாற்றிக்கொண்டிர்கள்,
டாக்டர்  இனி மேல் சீனியே  சேர்த்துக்கொள்ளக் கூடாதுன்னு சொல்லிட்டாருல்ல !
--------------------

பல்ப் – எடிசன்
ரேடியோ – மார்கோனி
பை-சைக்கிள் – மேக் மில்லன்
போன் – க்ராஹாம் பெல்
க்ராவிடி – நியூட்டன்
கரண்ட் – பாரடே
எக்ஸாம் – அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!
------------------------------

காதலில் எத்தனை முறை தோற்றாலும் பெரிய விசயமல்ல!
ஒரு முறை ஜெய்த்து பார்த்தால்தான் தெரியும்! தோல்வியே எவ்வளவோ
பரவாயில்லை என்று!!
-------------------------------------------

”ஊசிபோட்ட பிறகு எதுக்கு டாக்டர்  ஏன் ஸ்கேன் பண்ணனும்னு சொல்றீங்க? இல்ல’ உள்ள போன ஊசி இப்ப எங்க இருக்குன்னு பாக்க ஆசையா இருக்கு…
-----------------------------------------

ஏன் சிஸ்டர் திடீர்னு எனக்கு ஆப்ரேஷன் வேண்டாம்னு டாக்டர் சொல்லிட்டார்?
“டாக்டருக்கு திடீர்னு வேற இடத்தில் இருந்து பணம் வந்துட்டதாம்!
 -------------------------------------------------------------

நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொல்லி வச்சுரவா?





டீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா?

மாணவன் : சார். மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்ஸ்!

-----------------------------

பேராண்டி : ஏன் பாட்டி, என் மேல இவ்வளவு பாசமா இருக்க?

பாட்டி   நீதாண்டா பேராண்டி, நாளைக்கு எனக்கு கொல்லி போடணும்!

பேராண்டி:  போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொல்லி வச்சுரவா?

------------------------------------------------------------
அம்மா! எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா?

சரோஜா! ஏன் கேக்குற?

அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?

======================================


------------------------------------------------------------
அம்மா! எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா?

சரோஜா! ஏன் கேக்குற?

அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?

======================================

Thursday, May 16, 2013

அதுக்குதான் என் மனைவி பயப்படறா !'



காதலன்: டே! செல்லம், மீயூசிக் சேனல்ல அடிக்கடி நீ எனக்கு
எஸ்.எம்.எஸ் செய்யறத எங்க அப்பா பார்த்து தொலைச்சுட்டார்..'

காதலி: 'அய்யையோ! என்ன சொன்னார்?'

காதலன்: 'ஏகப்பட்ட கிராமர் மிஸ்டேக் செய்யறியாம்....
நல்ல டீச்சரைப் பார்த்து டியூஷன் போகச் சொன்னார்!'
-----------------

ஒருவர்: பேயை கண்டா நாய் குறைக்கும்னு சொல்றாங்களே, அது உண்மையா...?

மற்றவர் ஏன், கேட்கறீங்க..?

ஒருவர்: இல்லை, என் மனைவி பார்த்தா நாய் குறைக்குது...
----------------

ஒருவர்: அடுத்த ஜென்மத்திலாவது நாயா பொறக்கணும்னு சலிச்சுக்கிறீங்களே.

மற்றவர் ஏன் சார் ?'

ஒருவர்:'அதுக்குதான் என் மனைவி பயப்படறா !'
-------------------

 எங்க ஏரியாவுல தண்ணிப் பஞ்சம் அதிகம் !'

'அப்படியா ?'

'ஆமாம், ஒருநாள் விட்டு ஒருநாள்தான்

பால்காரரே வருவாருன்னா பார்த்துக்கோயேன் !'

-------------------

அவருக்கு நான் ரொம்ப கடன்பட்டிருக்கேன் !'

'எந்த விசயத்துல ?'

'பண விசயத்துலதான் !'

----------------------------------

ஜாக்கெட் பிட் இலவ சமாம்...!



 நம்ம தலைவர் ஏன் உடம்பு இளைக்கிற மருந்தை வாங்கிட்டு,  சாப்பிடாம இருக்காரு ?

நாளைக்கு அவருக்கு கட்சில எடைக்கு எடை தங்கம் தரப்போராங்களாம்

-----------------

மேடையில தலைவர் இப்படிப் பேசியிருக்க கூடாது.....

என்ன பேசினார் ?

தலைக்கு நூறு ம்ற்றும் குவட்டர் வாங்கிக் கொண்டு லாரியில் ஏறி வந்திருக்கும்

குடி மகான் களேன்னு சொல்லிட்டாரு......
----------------------

ஒருவர்: நீங்க யாரு என்ன சொன்னாலும் ஆமான்னு சொல்லுவீங்களா ?

மற்றவர்: ஆமா!
-----------------

Manager : டெலிவரி ஆயிடுச்சா ?'

 Female Staff: 'என்ன சார் நீங்க.. அதுக்கு இன்னும் மூணு மாசம் இருக்கே !'

'Manager : அட, நம்ம ஆபிஸ் சரக்குகளைப் பத்திக் கேட்டேம்மா !'
------------------------

அந்த பிராந்தி கடையில ஏன் இவ்வளவு பெண்கள் கூட்டம்?

இரண்டு பிராந்தி பாட்டில் வாங்கினா. ஒரு ஜாக்கெட் பிட் இலவ சமாம்...!
----------------------------

அதை தடுக்க எந்த சட்டமும் எனக்கு இங்கு இல்லை



காதலி: நம்ம காதல் புனிதமானது சிவா !'

காதல்ன் : 'அப்ப கல்யாணம் அது இதுன்னு சொல்லி, அந்தப்
புனிதத்தைக் களங்கப்படுத்தக் கூடாது, சரியா !
-----------------------------


இந்த மாதிரி காதலன் கிடைக்க நான் குடுத்துவெச்சிருக்கணும் !'

'ஏன்... கட்டின புடவையோட வந்தா போதும்னு சொல்லிட்டானா ?'

'அட,கட்டின புருசனோட வந்தாலும் பரவாயில்லைன்னு சொல்லிட்டான் !'
---------------------------
நீவிரும்புற பெண்ணே உனக்கு மனைவியா அமைவா தம்பி'

'மாலா, ராதா,  ரோசி, ப்ரியா, சரிகா, காயத்ரி..இவங்கள்ல யாருன்னு குறிப்பா சொல்ல முடியுமா ஜோசியரே...?'
---------------------------------

 நான் தினமும் சாப்பாட்டுக்கு முன் கடவுளை வணங்குவேன், நீங்கள் ?

நான் வணங்கவதில்லை !. என் மனைவி நன்றாகவே சமைப்பாள்.
----------------------------

காவலாளி: இந்த குளத்தில் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.

பெண்: ஆடை அவிழ்ப்பதற்கு முன்னே சொல்லியிருக்க கூடாதா?

காவலாளி: அதை தடுக்க எந்த சட்டமும்  எனக்கு இங்கு இல்லை
-------------------------------

உடனே சேனலை மாத்திடுவார் !'



தலைவரே !.. எதிர்க்கட்சி தலைவருக்கு நீங்களே உங்க சொந்தச் செலவுல ஏன் சிலை வக்கிறீங்க ?

நடுரோட்ல உன்னை நிறுத்திக் காட்டறேன்னு சாவால் விட்டிருக்கேனே!

_______________
 

நம்ம தலைவருக்கு மூணு மனைவி இருக்கிறதா எதிர்க்கட்சித் தலைவர்
தரக்குறைவா பேசிட்டாரு !'

'அது தரக் குறைவு இல்லைய்யா, 


தாரக்குறைவு. 

நம்ம தலைவருக்கு மொத்தம் நாலு மனைவி !'

----------------
 

தலைவரே உங்க சொத்து விவரத்தை ஏன் வெளியிட மாட்டேங்கிறீங்க ?'

அப்புறம் என்னை வெளியில விடமாட்டாங்க !

------------------

 'நம்ம தலைவருக்கு விளம்பரமே பிடிக்காது !'

'அப்படியா ?'

'ஆமா. உடனே சேனலை மாத்திடுவார் !'
---------------
 

பிறந்த நாளுக்கு நம்ம தலைவர், கைதிகளுக்கு இனிப்பு
குடுக்க போனப்ப, வார்டனுக்கு ஏதுக்கு ரெண்டு லட்டு அதிகமா குடுத்தாரு?

'தலைவர் பழசை மறக்காதவர்'

-----------------

அவர் பார்க்கிறது எங்க கல்யாண வீடியோ சி . டி !


உங்க வீட்டுக்காரர் டி.வி. சீரியலைப் பார்த்து, ஏன்  அழுவுறாரு ?'

'நீங்க வேற.... அவர் பார்க்கிறது எங்க கல்யாண  வீடியோ    சி . டி !   [Vedio C.D]
-----------------------
 ரயில் வரும்போது ஏன் கேட்டை மூடிடறாங்க தெரியுமா?

தெரியாதே!

அட....இதுகூடப் புரியாம இருக்கியே மக்கு....

ரயில் ஊருக்குள்ள போயிடாம இருக்கத்தான்.
---------------------

சொந்த ஊர் எது ?

அந்த அளவுக்கு வசதி இல்லீங்க.... சொந்த வீடுதான் இருக்கு !

------------------------

 'நடிகரெல்லாம் நாடாளா முடியுமா எனக் கேட்கும் எதிர்க் கட்சித் தலைவருக்கு சவால் விடுக்கிறேன்'

'நாங்கள் நாடாள்வது இருக்கட்டும் உங்களால் ஒரு பாட்டுக்கு அசினுடன் ஸ்பீடா டான்ஸ் ஆட முடியுமா?'

-----------------------------------------

நோயாளி:என்னால வாய திறக்க முடியல டாக்டார்

ம்ருத்துவர் :சரி! சரி! உங்க மனைவியை வெளியில வெயிட் பண்ண சொல்றேன்

---------------------

'நம்ம கல்யாணத்துல எங்க வீட்ல  யாருக்குமே விருப்பமில்லை !'

'உனக்கு ?'

'இதென்ன கேள்வி.. நானும் எங்க வீட்லதானே இருக்கேன் !'
----------------------


ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...