Total Pageviews

Monday, September 14, 2015

போலீஸ் வந்திருக்கு!!


கணவன்: பக்கத்து விட்டு அம்மணிக்கு தீபாவளி பலகாரம் கொடுத்தாயா ?

மனைவி: ஆமாங்க!! நிறைய கொடுத்தேங்க!!

கணவன்: வெளியே வந்து பாரு! போலீஸ் வந்திருக்கு!! கொலை முயற்சின்னு கம்ப்ளெயிண்ட் பண்ணி இருக்காங்க!!...

*********************
பெண் வீட்டார் :  எதுக்கு  வரதட்சணை பணத்தை கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடியே கேட்கிறீங்க..?.."

"மாப்பிள்ளை வீட்டார் : ” "மாப்பிள்ளையை ஜாமீனில் எடுக்க தான்..!,,"

*********************
ஜவுளி கடைக்காரர்: "ஐயாயிரம் புடவை வாங்கிட்டு, பத்தாயிரம் ரூபாய்க்கு பில் கேட்கிறீங்களே.. ஏம்மா ..?.."

பெண்: "பில்லை காட்டினா தான் புடவை ரூபாய் 10,000 /- பக்கத்துக்கு வீட்டுக்காரி நம்புவா...!.

*********************
ஒருவர் : வீட்டுக்குள்ளே தங்கத்தை புதைச்சு வச்சிருக்கேன்! அதை நீயே வச்சுக்கோ!!ன்னு வீட்டுக்காரன் சொன்னதை நம்பி வீட்டை வாங்கினதுனால, ஜெயிலுக்கு வர வேண்டியதாப் போச்சு!

மற்றொருவர் : எப்படிங்க?

ஒருவர் : அவன் வீட்டுக்குள்ளே புதைச்சு வச்சிருந்தது அவன் பொண்டாட்டி தங்கத்தை!!

*********************

தங்கம், வைரம், முத்து, பவளம் !


வருமானவரி அதிகாரி: உங்க வீட்டுல இருக்குற தங்கம், வைரம், முத்து, பவளம் எவ்வளவு இருக்குன்னு உடனடியா எங்களுக்கு தெரின்சாகனும் !

பெண் : தங்கம் - 55 கிலோ !  வைரம் 3 கிலோ ! முத்து 22 கிலோ ! பவளம் பிறந்த உடனே செத்து போச்சு !

வருமானவரி அதிகாரி: என்னம்மா சொல்றே!

பெண்  : தங்கம் எங்க வீட்டுக்காருங்க! முத்து எங்க முதல் மகனுங்க!  வைரம் 3 மாத குழைந்தங்க!  பவளம் 2 வருடத்திற்க்கு முன் பிறந்த உடனே செத்து போச்சு !

*********************
பெண் : இவ்வளவு இடம் இருக்கும் போது எதுக்கு நின்னு கிட்டே சாப்பிடுறீங்க?

ஆண் : பொண்டாட்டியோட சம்பாத்தியத்துல உட்கார்ந்து சாப்பிடுறான் பார்னு யாரும் என்னைக் கேவலமா பேசிடக் கூடாதுன்னு தான்!

*************************

பெரியவர் : உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சும்மா! நீ எனக்கு மருமகளா வந்தா கடைசி காலத்துல கஞ்சி ஊத்துவியாம்மா?

பெண் : தப்பு தப்பா பேசாதீங்க ! கடைசி காலத்துல பால் தான் ஊத்துவாங்க !

**************

Monday, August 3, 2015

சேரனா , பாண்டியனா!



மனைவி – “ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டே போகுதே.
 அவளுக்குச் சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா?“

கணவன் – “அழகா லட்சணமா ஒரு மாப்பிள்ளை கிடைக்கிறவரை காத்திருக்கட்டுண்டி. !

மனைவி – “எங்கப்பா அப்படியா காத்திருந்தார்?“

*********************

மனைவி - "ஏங்க என்ன பொண்ணு பார்க்க வரும் போது நான் கட்டியிருந்த புடைவை கலர் ஞாபகம் இருக்கா?? "

கணவன் : "இல்லையேமா"

மனைவி: "ம்ம்... தெரியும், என் மேல உங்களுக்கு எந்த அக்கறையும் இல்லை..."

கணவன் "அது இல்லடா செல்லம் தண்டவாளத்துல தலை வைக்க போறகிறவன் வருகிற இரயில் சேரன் எக்ஸ்பிரஸா, பாண்டியன் எக்ஸ்பிரஸான பாத்துட்டு இருப்பான்..."

***************************

கணவன் – “இந்தத் தீபாவளிக்கு உனக்குப் பட்டுப் புடவை வாங்கலாம்ன்னு இருக்கேன் !“

மனைவி – “அப்படியா! எதை வச்சி சொல்லுறீங்க?“

கணவன் – “உன் வளையலை வைச்சுத்தான் சொல்லுறேன் !

*********************************

 மனைவி – “நீங்க எனக்கு ஒரு பட்டுப் புடவை வாங்கித்தர்ற மாதிரி நேற்று கனவு கண்டேன்“

கணவன் – “இன்னைக்கு அதைக் கட்டிக்கிறதா கனவு கண்டுவிடு. சரியாய்ப் போயிடும்...“

******************************

Saturday, July 11, 2015

சந்தோசமான செய்தியை தாங்க கூடிய சக்தி !



மனைவி:- இனி ஒரு நிமிஷம் கூட என்னால, உங்களோடு சேர்ந்து வாழ முடியாது! அதனால நான் தற்கொலை பண்ணிக்கப் போறேன்,,,!

கணவன்:- அந்த நிமிஷமே நானும் என் உயிரை விட்ருவேன்!

மனைவி:- நீங்க எதுக்காக சாகணும்?

கணவன்:- எந்த ஒரு அதிக சந்தோசமான செய்தியையும் தாங்க கூடிய சக்தி என் இதயத்திற்கு இல்லேண்ணு டாக்டர் சொல்லி இருக்கார்!

மனைவி:- ? ? ? ? ? ? ? ? ?

***************************************

மனைவி: டிபன் வேணுமா?  சாப்பாடு வேண்டுமா ?

கணவன்: ஏதாவது சாய்ஸ் இருக்கா?

மனைவி: ரெண்டு இருக்கு!

கணவன்: என்னன்ன?

மனைவி: சாப்பாடு வேணுமா? வேண்டாமா?

********************************

கணவன்: நெஞ்சு வலிக்குது டாக்டருக்கு போன் பண்றியா!

மனைவி: உங்க செல்போன் பாஸ்வேர்ட் சொல்லுங்க?

கணவன்: இப்ப நெஞ்சு வலி பரவால்ல, போன் பண்ணவேண்டாம். !

****************************

ஐயா. .. ரெண்டு கண்ணும் தெரியலே சாமி.. .ஒரு பத்து ரூபா பிச்சை போடுங்க சாமி!.

ஏண்டா பொய் சொல்றே.. . உனக்குத்தான் ஒரு கண் நல்லா தெரியுதே !

யோவ்..அப்போ  ஒரு 5 ரூபாவாவது போட்டு போய்யா !

************************

 கணவன் : ஆஹா…நான் உதைச்சி ஸ்டார்ட் ஆகாத வண்டி நீ உதைச்சதும் ஸ்டார்ட் ஆகிடிச்சே…!.

மனைவி:  ஹி..ஹி…உங்கம்மாவ நெனச்சு உதைச்சேங்க.. அவ்ளோதான். !!

***********************

அனிதா: எதற்கெடுத்தாலும் எதிர்வாதம் பண்ணுவாளே உன் மாமியார்…இப்ப எப்படி இருக்காள்..?

புனிதா: பக்கவாதம் வந்து படுத்துட்டாள்…!

*************************

பெயில்- bail !



தொண்டர்: "தலைவரே.. உங்க பையன் 
பரிட்சையிலே 'பெயிலா' யிட்டான்னு சொன்னா, எல்லோருக்கும் ஸ்வீட் கொடுக்க சொல்லறீங்க..!.."

தலைவர் : "ம்ம்..'பெயில்' (bail) கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம்னு எனக்கு தாண்டா தெரியும்..!.."
 
தொண்டர்:  அனுபவம் பேசுது !
******************************
 
ராமு : “பொண்டாட்டிக்கு ஆசையா ஒரு புடவை வாங்கித்தர முடியலைடா” என்ன வாழ்க்கை!
 
சோமு : “ஏன்டா, காசு இல்லையா?”

ராமு : போடா! பொண்டாட்டியே இல்லைடா”!
 
********************
 
மனைவி:- என்னங்க! இனி மேல் உங்ககம்பெனியில் இருந்து இரவு வெளியே தங்கற மாதிரி வேலை கொடுத்தாங்கன்னா மாட்டேன்னு சொல்லிடுங்க...! நீங்க இல்லாம என்னாலநிம்மதியா தூங்க முடியலீங்க!

கணவன்:- அடிக்கள்ளி! என் மேல உனக்கு அவ்ளோ பிரியமா..?

மனைவி:- ஒரு மண்ணும் இல்ல! தினமு‌ம் உங்களோட புலி உறுமற மாதிரியான குறட்டை சத்தத்தைக் கேட்டு தூங்கி பழகிட்டதனால,
அந்த சத்தம் இல்லாம தூக்கமே வரமேட்டேங்குது! அதான்!

கணவன்:-? !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
***************************

வந்தவர் : பணம் தரணும் அப்பா இருக்காங்களா?
 
சிறுவன்: நீங்க தரணுமா? அப்பா தரணுமா?
 
வந்தவர் : நான்தான் தரணும்..!
 
சிறுவன்: எங்கிட்டே குடுங்க, நான் குடுத்துடறேன்..!!
 
வந்தவர் : உங்க அப்பா தரணும்னா?
 
சிறுவன்: வெளியூர் போயிருக்காரு, எப்ப வருவார்னு தெரியாது…!!!
 
********************************

Friday, June 5, 2015

ஆட்சி மாற்றம் !



ஏம்பா, இவ்வளவு குப்பையும், கூலமாக, துர்நாற்றமாக உள்ள இந்த வீட்டில் இருப்பவர் யாரப்பா ?

நம்ம சுகாதாரத்துறை அதிகாரிதான் !

************************

செய்தி : ஆட்சிக்கு வந்த நாலாவது  ஆண்டில்  41வது முறையாக வெளி நாடுகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பயணம் !

நிருபர் : அடிக்கடி வெளி நாடுகளுக்கு சுற்று பயணம் செய்கின்றீர்களே ஏன்?

அமைச்சர் : இந்த முறை ( 5 ஆண்டுகளில்)  இன்னும் 19 நாடுகளின் சுகாதாரத்தை அறிந்து கொண்டு,
 அடுத்த முறை மக்கள் எம்மை தேர்ந்தெடுத்தால்  உலகத்திலேயே சுகாதரத் துறையில் நம்பர் 1 நாடாக மாற்றுவேன் என உறுதியளிக்கிறேன்!

நிருபர் : கடந்த முறையும் இதே தான் சொன்னீர்கள், இந்த முறையும் இதையே சொல்கிறீகளே !

அமைச்சர் : எனக்கு ஒரு சொல்! ஓரு வார்தை! மாறி மாற்றி பேசுபவன் நானல்ல!

************************************

விருந்தாளி :  உன் மகன் என்னப்பா செய்கிறார் ?

தந்தை : அதுக்கெல்லாம் தண்ணி தெளிச்சி அனுப்பி ரெம்ப நாளச்சி !

அப்போது வந்த மகன் :  எனக்கு தெளிச்ச தண்ணிய செடிகளுக்கு தினமும் தெளிச்சிருந்தா இன் நேரம் பெரிய மரமாகி இருக்குமேயப்பா !

***********************************

கணவர்: இது மாதிரி என்கிட்டே தொடர்ந்து சண்டை போட்டுக்கிட்டே இருந்தால், ஒரு நாள் மிருகமா மாறப் போறேன். ஜாக்கிரதை !.

மனைவி: நான் எலியைப் பார்த்தெல்லாம் பயப்பட மாட்டேன்!

*************************************

தலைவர்: ஆளே இல்லாத இடத்துக்குப் போய் கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்கணுமே…எங்கய்யா போகலாம்..?

தொண்டர் : நம்ம கட்சி ஆபிசுக்குப் போகலாம் தலைவரே…!

******************************

நிருபர் : 5 வருடத்திற்க்கு ஒரு முறை கட்சி மாறினாலும் எப்போதும் மந்திரியாகி விடுகீறீர்களே!  எப்படி !

மந்திரி:  மக்கள் 5 வருடத்திற்க்கு ஒரு முறை ஆட்சி மாற்றத்தை விரும்பும் போது நான் என்ன செய்ய முடியும் ! இதைத் தவிர !

Wednesday, June 3, 2015

புனிதம் !



காதலி : நம்ம காதல் புனிதமானது சிவா !'

காதலன் : 'அப்ப கல்யாணம் அது இதுன்னு சொல்லி, அந்தப்புனிதத்தைக் களங்கப்படுத்தக் கூடாது, சரியா !

*************************

பிறந்த நாளுக்கு நம்ம தலைவர், கைதிகளுக்கு இனிப்பு கொடுக்க போனப்ப, வார்டனுக்கு ஏதுக்கு ரெண்டு லட்டு அதிகமா குடுத்தாரு? ஏன் தெரியுமா  ?

'தலைவர் பழசை மறக்காதவர்' அதான் !

*******************

ராமு : உங்க சம்சாரத்துக்கு நீங்க மரியாதை தர்ற மாதிரி அவங்க உங்களுக்குத் தருவாங்களா ?'

சோமு : 'ம்...... ’அவ மரியாதை’ தருவா ?'

*******************************

டாக்டர் : ஆப்ரேசன் முடியறவரைக்கும் நீங்க அரிசியே சேர்த்துக்கக் கூடாது !'

நோயாளி : 'ஆபரேசனுக்கு அப்புறம் டாக்டர் ?'

டாக்டர் : ''நீங்க சாப்பிட வேண்டிய அவசியமிருக்காதுன்னு  நினைக்குறேன் !

**************************
தலைவரே !.. எதிர்க்கட்சி தலைவருக்கு நீங்களே உங்க சொந்தச் செலவுல ஏன் சிலை வக்கிறீங்க ?

நடுரோட்ல உன்னை நிறுத்திக் காட்டறேன்னு சாவால் விட்டிருக்கேனே?  அதான் !

************************


30 நாட்களும் முப்பது விதமான உப்புமா செய்வதெப்படி !

  "வக்கீல் சார்... என்னய எம் பொண்டாட்டிட்டருந்து காப்பாத்துங்க சார்... காப்பாத்துங்க...!!" "ஏம்ப்பா... என்ன நடந்துச்சி...!...