Total Pageviews

Wednesday, September 24, 2014

குடிக்க ஏதாவது கொடேன் !





கணவன்: ”என்னமோ மாதிரியிருக்கு. குடிக்க ஏதாவது கொடேன்”

மனைவி : சூடாவா? இல்ல ஜில்லுன்னு வேணுமா?

கணவன்:”தலையை வலிக்கிற மாதிரியிருக்கு. சூடாவே கொடு”.

மனைவி :காபியா? இல்லே டீயா?

கணவன்: ம்.. காபியே கொடு.

மனைவி :பில்டர் காபி வேணுமா? அல்லது புரூ காப்பியா?

கணவன்:பில்டர் காபி தான் எனக்குப் பிடிக்கும். அதையே கொடு.

மனைவி :நரசுஸ் காபித் தூள்ல போடவா? இல்ல காபி டேயா?

கணவன்:நரசுஸ் தூள்லேயே போடு.

மனைவி :ஸ்டிராங்கா வேணுமா? இல்லேன்னா லைட்டா வேணுமா?

கணவன்:ஸ்டிராங்காவே இருக்கட்டும்.

மனைவி :சர்க்கரை போட்டு வேணுமா? இல்லேன்னா போடாமலா?

கணவன்:சர்க்கரை போட்டே கொடு.

மனைவி :கிளாசுலே வேணுமா? இல்ல டம்ளரில தரவா?

கணவன்: ”சே! ஒங்கிட்ட போய் காபி கேட்டேன் பாரு, என் புத்தியைச் செருப்பால
அடிக்கணும்”

மனைவி :”ஒன் செருப்பாலயா? இல்ல, என் செருப்பாலயா?”

-----------------

நர்ஸ் கையால ஊசி !






மேனஜர் : ஏம்பா! டைப்பிஸ்ட் வேலைக்கு வந்திருகின்றயே ! … அனுபவம் ஏதும் இருக்கா..?

நிமிஷத்துக்கு 50 பொண்ணுங்களுக்கு எஸ்.எம்.எஸ் டைப் பண்ணுவேன் சார்..!

===================================================

நோயாளி : டாக்டர்,  எனக்கு, போதை ஊசி போடணும் டாக்டர்…”

டாக்டர் : “என்னது… போதை ஊசியா?”

நோயாளி : “நர்ஸ் கையால ஊசி போட்டுக்கிட்டா, அது போதை ஊசிதானே டாக்டர்..!”

========================================================
பெண் : பூனை எல்லா பாலையும் குடிச்சிருச்சு!

ஆண் : அது வரைக்கும் என்னம்மா பண்ணிக்கிட்டு இருந்தே..?

பெண் : இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமா-னு பார்த்துக்கிட்டே இருந்தேம்பா.!

============================================================
ஓருவர் : என் பையன் செஞ்ச காரியத்தால வெளியே தலை காட்ட முடியலை..!

மற்றொருவர் : அப்படி என்ன செஞ்சுட்டான் சார்..?

ஓருவர்  என்னோட ‘விக்’ கை குப்பையிலே போட்டுட்டான்..!

=============================================================

மனைவி என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?

கணவன் : டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்!

------------------------------
நோயாளி:என்னால வாய திறக்க முடியல டாக்டர் !

மருத்துவர்:சரி! சரி! உங்க மனைவியை வெளியில வெயிட் பண்ண சொல்றேன் !


உங்களுக்கு தலைவலி இருக்கா ?

இருக்கு டாக்டர் ! வெளியேதான் வெயிட் பன்றா !
.
--------------------------------

ஆபீஸ் வேலை !







ஓருவர்  நீ ஆபீஸ் வேலையை வீட்டிலேயும் பார்ப்பியாமே...

மற்றொருவர்: ஆமாம், தூங்கறதுதானே!

*******************



சார் உங்களுக்கு சொந்த ஊர் எது ?



அந்த அளவுக்கு வசதி இல்லீங்க....



சொந்த வீடுதான் இருக்கு !



--------------------------------------



நேத்து நீங்க ஏன் ஆபீசுக்கு லீவு போட்டீங்க ?'



'சொன்னா சிரிக்க கூடாது.



எங்க பாட்டி செத்துப் போய்ட்டாங்க !



நெஜம்மா...!'

------------------------------------



போலிஸ் : விபத்து எப்படி நடந்தது?



ஓட்டுனர்: அதுதான் ஐயா எனக்கும் தெரியல? 

அப்ப நான் தூங்கிக்கிட்டிருந்தேன்!!!



போலிஸ்:!!!!!



-----------------------------------


Tuesday, September 23, 2014

என் வயிறு ஒழுகுதான்னு



வன் : எங்க அம்மாவுக்கு ஏன் சாப்பாடு போடலை?
 
மனைவி:அவங்கதாங்க இனிமே நான் வாயே திறக்கப்போறதில்லைனு சொல்லிட்டாங்களே !
 _________________


நோயாளி : சிஸ்டர், எனக்கு வயித்தில ஆபரேஷன் பண்ணியாச்சில்ல?
சிஸ்டர் : ஆமா,
நோயாளி : தையல் எல்லாம் ஒழுங்கா போட்டாச்சா?
சிஸ்டர் : போட்டாச்சு !
நோயாளி : ஒரு தம்ளர் தண்ணி கொடுங்க.. என் வயிறு ஒழுகுதான்னு குடிச்சுப் பாக்கனும். 

-------------------------------

நோயாளி : (டாக்டரிடம்) அடிக்கடி என் கனவிலே யானை வருது டாக்டர் பயமா இருக்குது!

டாக்டர் : ஒரு மாத்திரை தர்றேன் சாப்பிடுங்க. கூடவே யானை பாகனும் வருவான்பிறகு பயமே இருக்காது !


-------------------------------------------

  அப்பு : ''இந்த ஊர்லயே எங்க கிளினிக் தான் சகல வசதிகளும் நிறைஞ்ச கிளினிக்.''
சுப்பு: ''எப்படிச் சொல்றீங்க?''
அப்பு : ''நீங்களே பாருங்களேன். பக்கத்திலேயே தந்தி ஆபீஸ் இருக்கு!. எதிரிலேயே புரோகிதர் வீடு இருக்கு! . இவ்வளவு ஏன் சுடுகாடு கூட நடக்கிற தூரத்துலதான் இருக்கு!''
சுப்பு: !!!!! 

------------------------

''ஆபீஸ்ல எனக்கு மாத சம்பளத்துக்கு பதிலா தினக்கூலி தந்தா நல்லாயிருக்கும்!''

''எதுக்கு?''

''என் மனைவிகிட்ட எனக்கு ஒண்ணாந்தேதி மட்டும்தான் மதிப்பு இருக்கு!''

Thursday, September 11, 2014

நேத்தே டிபன் ரெடி !





வந்தவர்: ஏங்க அந்தப் பொடியனை வேலைய விட்டு எடுத்துட்டீங்க?

ஹோட்டல் முதலாளி: பின்ன என்னங்க, சாப்பிட வந்தவங்க "டிபன் ரெடியா?"ன்னு கேட்டா "நேத்தே ரெடி"ங்கறான்!

ooooooooooooooooooo

'ரேடியோ போட்டால்தான் என் குழந்தை தூங்கும்''

''டி.வி. போட்டாதான் என் குழந்தை தூங்கும்''!

''முதுகுலே ரெண்டு போட்டால்தான் என் குழந்தை தூங்கும்.''!

ooooooooooooooooooo

நண்பன்: ஏண்டா, உன் தாத்தா ரொம்ப நாளா கோமாவிலே இருந்துட்டு இப்போ எழுந்துட்டாராமே. முதல்லே என்ன கேட்டாரு?

மற்றவன்: நம்ப தியாகராஜ பாகவதர் படம் எந்த தியேட்டர்ல ஓடுதுன்னு கேட்டாரு!

oooooooooooooooooooo

ஏம்பா, நான்தான் இந்த பத்திரிகைக்கு ஆயுள் சந்தா கட்டி இருக்கேனே, 


இப்போ திடீர்னு வருட சந்தா கேட்டா எப்படி?

பின்ன என்ன? நீங்க எழுபது வருடத்துக்கு முன்னாடியே ஆயுள் சந்தா கட்டி இருக்கீங்க! 


இவ்வளவு வருடம் உயிரோடு இருப்பீங்கன்னு நாங்க கண்டோமா!!

 சரி பணத்தை எடுங்க?''

ooooooooooooooooooo

தினம் ஒரு ஸ்வீட் !





முதலாளி.. எனக்கு கல்யாணமாயிருச்சு.. கொஞ்சம் சம்பளத்தை சேர்த்துக் கொடுங்க..!

முதலாளி : கம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நான் நஷ்ட ஈடு தர இயலாது..!


***********************

 
"வக்கீல் சார்... வர்ற இருபதாம் தேதி உங்க ராசியைச் சனி பிடிக்குது."

"ஒரு ஆறு மாசம் வாய்தா வாங்க முடியாதா ஜோசியரே?"


*******************************

நீங்க சமயத்துல செஞ்ச உதவிக்கு என் தோலை செருப்பா தைச்சுப் போடணும் சார்....

வெரிகுட்! என் செருப்பு அளவு எட்டு. மறந்து பெரிசா தைச்சுடாதீங்க....

xxxxxxxxxxxxxxxxx

மாப்பிள்ளை வீட்டார்: பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம் !.

பெண் வீட்டார்: பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்..! 


*****************************

 
எங்கம்மாவுக்கு சர்க்கரை வியாதி இருப்பது என் மனைவிக்கு இன்னும் தெரியாது..

தெரிஞ்சா கவலைப் படுவாங்களா..?

இல்லே.. தினம் ஒரு ஸ்வீட் செஞ்சு வெறுப்பேத்துவா...!

அது கட்டை எறும்பு !




ஒருவர் : நாய் வியாபாரம் பண்ணிங்களே இப்ப எப்படி இருக்கு ?

மற்றவர் : கைய கடித்துருசு கடிக்சிருச்சு !


********************************************

எலெக்ட்ரிக் ஒயர்ல மூணு எறும்பு போச்சி. 

ரெண்டு எறும்பு ஷாக் அடிச்சி செத்துப் போச்சி. ஒண்ணு மட்டும் சாகலை. ஏன் ?

அது கட்டை எறும்பு !


********************************************


இந்த கடிகாரம் சரியான நேரத்தைக் காட்டுமா ?

அது காட்டாது, நாம் தான் பார்க்கவேண்டும்.

********************************************


நீண்டநாள் உயிரோடுவாழ வழி என்ன ?

வேறென்ன சாகாமல் இருப்பதுதான்

********************************************


"ஏம்பா சர்வர் , சாம்பார்ல பல்லி விழுந்திரூக்கே, இதுக்கு என்ன அர்த்தம்?"

சாரி சார் எனக்கு பல்லி விழும் பலன் தெரியாது



********************************************

தெருவில போற எல்லோரும் அந்த ஆள்கிட்ட டைம் கேட்டுட்டு போறாங்களே ஏன் ?

அவர் வாட்ச்மேனாம் !


********************************************


தொலைபேசியில்: டாக்டர்! என் கணவர் ஒரு பேனாவை விழுங்கிவிட்டார்.

இன்னும் சில நிமிஷங்களில் வந்துவிடுகிறேன்

அதுவரை நான் என்ன செய்வது ?

பென்ஸிலை உபயோகியுங்கள்.!


**********************************************

ஸ்கூல் தலைமை ஆசிரியர்..!


தாய் ; மகனே எழுந்திருப்பா..ஸ்கூலுக்கு நேரமாச்சு..

மகன் ; போம்மா..எனக்கு அந்த ஸ்கூலுக்கு போகவே பிடிக்கல்லே..

தாய் ; அப்படிச் சொல்லாதே..நீ வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டாமா..?

சரி..ஏன் உனக்கு அந்த பள்ளி பிடிக்கல்லே? ரெண்டு நியாயமான காரணம் சொல்லு..நான் விட்டுடறேன்..

மகன் ; 1. படிக்கற பசங்களுக்கும் என்னை பிடிக்கல..
               2. வாத்தியார்களுக்கும் என்னைப் பிடிக்கலே.!

தாய் ; இதெல்லாம் எல்லாரும் சொல்றது தான்..சமத்தா கிளம்புடா கண்ணா..!

மகன் ; நான் ஏன் பள்ளிக்கூடம் போகணும் ?
நீ ரெண்டு நியாயமான காரணம் சொல்லு.. நான் போறேன்..

தாய் ; சனியனே..1. உனக்கு 53 வயசு ஆகுது..
                                    2. நீதாண்டா அந்த ஸ்கூல் தலைமை ஆசிரியர்..!!!!

**********************************************************


வெற்றிகரமான கணவன் யார்?

தன் மனைவி செலவழிப்பதைவிட அதிகம் சம்பாதிப்பவன்..!

வெற்றிகரமான மனைவி ??

அப்படி ஒரு மனிதனைத் தேடிப்பிடித்து திருமணம் செய்து கொள்பவள்..!!

************************

என் வ‌லி த‌னி வ‌லி !



ந‌ண்ப‌ர் 1: ந‌டிக‌ருக்கும் ம‌ருத்துவ‌ருக்கும் என்ன‌ ஒற்றுமை ?

ந‌ண்ப‌ர் 2: தெரிய‌லையேடா?
 
ந‌ண்ப‌ர் 1:இரண்டு பேருமே ஏதோ ஒரு தியேட்ட‌ர்ல‌ யாரையாவ‌து போட்டு அறுத்துகிட்டு இருப்பாங்க‌.
 
****************
ந‌ண்ப‌ர் 1: நேற்று என்னோட‌‌ க‌ச்சேரிக்கு நீங்க‌ வ‌ருவீங்க‌ன்னு ரொம்ப‌ எதிர்பார்த்தேன் ?
 
ந‌ண்ப‌ர் 2: வ‌ர‌னும்னுதான் நெனைச்சேன் சார், ஆனா அதுக்குள்ள‌ வேற‌ ஒரு கஸ்டம் வந்திருச்சு !

*******************
 
தோழி 1 : உன் வீட்டுக்கார‌ர் காலையில‌ கோல‌மெல்லாம் போடுறாராமே?
 
தோழி 2 : உன‌க்கு அத‌ யார் சொன்னாடி?
 
தோழி 1 : என் வீட்டுக்கார‌ர்தான், காலையில‌ கோல‌ம் போடும்போது பார்த்தாராம்.

***************

டாக்ட‌ர் : அந்த‌ நோயாளி ர‌ஜினி ரசிக‌ர்னு நினைக்கிறேன்?
 
ந‌ர்ஸ் : எப்ப‌டி சொல்லுரீங்க‌ டாக்ட‌ர்.
 
டாக்ட‌ர் : ஊசி போட்டு முடிச்ச‌தும் "என் வ‌லி த‌னி வ‌லின்னு சொல்றாறே.
 
*********************
காத‌ல‌ன் : உங்க‌ அப்பாக்கு க‌ட‌ன் த‌ர்ற‌தும் உன‌க்கு முத்த‌ம் த‌ர்ற‌தும் ஒன்னுதான்?

காத‌லி : எதனால‌ அப்ப‌டி சொல்றீங்க‌?

காத‌ல‌ன் : ரெண்டு பேருமே திருப்பிக் கொடுக்க‌ற‌து இல்ல‌யே !
.
***********************

குடிகார‌ர் 1 : குடி குடியை கெடுக்கும்கிற‌து ச‌ரியாப் போச்சு?

குடிகாரர் 2 : எதனால‌ப்பா?

குடிகார‌ர் 2 : க‌ல்யாண‌ம் ஆன‌ உட‌னேயே எம் பொண்டாட்டி என்ன‌ குடிக்க‌ கூடாதுன்னு சொல்லிட்டா !
 
*****************.

ம‌னைவி : ந‌ம‌க்கு க‌ல்யாண‌ம் முடிஞ்சி இன்னியோட‌ ப‌த்து வ‌ருச‌ம் ஆகுது?
 
க‌ண‌வ‌ன் : என‌க்கு அதெல்லாம் ம‌ற‌ந்து போச்சு.
 
ம‌னைவி : இது கூட‌வா?
 
க‌ண‌வ‌ன் : ஆமாண்டி, ந‌ல்ல‌ விச‌ய‌ங்க‌ளை ம‌ட்டும் தான் நான் ஞாப‌க‌ம் வ‌ச்சிக்குவேன் !
 
*************.


காத‌ல‌ன் : க‌ண்ணே உன‌க்காக‌ இம‌ய‌ம‌லைய‌ கூட‌ தாண்டுவேன்?

காத‌லி : ச‌ரி அது கெட‌க்க‌ட்டும்? இப்ப‌ எதுக்காக‌ காலை நொண்டுரீங்க‌ !

காத‌ல‌ன் : உங்க‌ வீட்டு கேட்டை தாண்டும் போது த‌டுக்கி விழுந்த்திட்டேன்.

****************

மாந்தோப்பில் நின்றிருந்தேன் !


பைனல்ஸ்ல தான் நம்ம டீம் தோத்துப் போச்சே, 
 அப்புறம் எதுக்கு பாராட்டு விழா நடத்துறாங்க?”
“”டாஸ் வின் பண்ணுச்சே”
****
“”நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், அவள் மாம்பழம் வேண்டும் என்றாள்”
“”நல்லவேளை நீ டாஸ்மாக்ல நிக்கல !
•••••
“”உங்க பையனுக்கு பல் பிடுங்கினதுக்காக  400 ரூபாய் கொடுக்கணும்”
“”ஒரு பல் பிடுங்க 100 ரூபாதானே சொன்னீங்க டாக்டர்?”
“”ஆமா, ஆனா உங்க பையன் கத்துன கத்துல என் மூணு பேஷண்ட் ஓடிட்டாங்களே”
•••••
 “”எதுக்கு என் மேஜையில் இருந்த டேபிள் வெயிட்டை கீழே தள்ளிவிட்டே?”
 
“”உங்ககிட்ட காரியம் ஆகணும்னா வெயிட்டா எதையாவது தள்ளணும்னு வெளியே சொன்னாங்க சார்”
••••
“”தலைவர் ஏன் கோபமாயிருக்கார்?”
 
“”சாகும் வரை உண்ணாவிரம் இருக்க போறேன்னு தலைவர் சொன்னதும், “உங்க கடைசி ஆசை என்ன’ன்னு ஒரு நிருபர் கேட்டுட்டாராம்”
•••••
“”அவ்வளவு சொத்தையும் எப்படிடா அழிச்ச?”
 
“ரப்பர வச்சுத்தான்”
 
“என்னடா சொல்ற”
 
“”ஒரு ரப்பர் ஃபேக்டரி ஆரம்பிச்சேன். சரியா ஓடலை. எல்லா சொத்தும் அழிஞ்சு போச்சு”
•••••

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...