Total Pageviews

Saturday, July 11, 2015

சந்தோசமான செய்தியை தாங்க கூடிய சக்தி !



மனைவி:- இனி ஒரு நிமிஷம் கூட என்னால, உங்களோடு சேர்ந்து வாழ முடியாது! அதனால நான் தற்கொலை பண்ணிக்கப் போறேன்,,,!

கணவன்:- அந்த நிமிஷமே நானும் என் உயிரை விட்ருவேன்!

மனைவி:- நீங்க எதுக்காக சாகணும்?

கணவன்:- எந்த ஒரு அதிக சந்தோசமான செய்தியையும் தாங்க கூடிய சக்தி என் இதயத்திற்கு இல்லேண்ணு டாக்டர் சொல்லி இருக்கார்!

மனைவி:- ? ? ? ? ? ? ? ? ?

***************************************

மனைவி: டிபன் வேணுமா?  சாப்பாடு வேண்டுமா ?

கணவன்: ஏதாவது சாய்ஸ் இருக்கா?

மனைவி: ரெண்டு இருக்கு!

கணவன்: என்னன்ன?

மனைவி: சாப்பாடு வேணுமா? வேண்டாமா?

********************************

கணவன்: நெஞ்சு வலிக்குது டாக்டருக்கு போன் பண்றியா!

மனைவி: உங்க செல்போன் பாஸ்வேர்ட் சொல்லுங்க?

கணவன்: இப்ப நெஞ்சு வலி பரவால்ல, போன் பண்ணவேண்டாம். !

****************************

ஐயா. .. ரெண்டு கண்ணும் தெரியலே சாமி.. .ஒரு பத்து ரூபா பிச்சை போடுங்க சாமி!.

ஏண்டா பொய் சொல்றே.. . உனக்குத்தான் ஒரு கண் நல்லா தெரியுதே !

யோவ்..அப்போ  ஒரு 5 ரூபாவாவது போட்டு போய்யா !

************************

 கணவன் : ஆஹா…நான் உதைச்சி ஸ்டார்ட் ஆகாத வண்டி நீ உதைச்சதும் ஸ்டார்ட் ஆகிடிச்சே…!.

மனைவி:  ஹி..ஹி…உங்கம்மாவ நெனச்சு உதைச்சேங்க.. அவ்ளோதான். !!

***********************

அனிதா: எதற்கெடுத்தாலும் எதிர்வாதம் பண்ணுவாளே உன் மாமியார்…இப்ப எப்படி இருக்காள்..?

புனிதா: பக்கவாதம் வந்து படுத்துட்டாள்…!

*************************

பெயில்- bail !



தொண்டர்: "தலைவரே.. உங்க பையன் 
பரிட்சையிலே 'பெயிலா' யிட்டான்னு சொன்னா, எல்லோருக்கும் ஸ்வீட் கொடுக்க சொல்லறீங்க..!.."

தலைவர் : "ம்ம்..'பெயில்' (bail) கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம்னு எனக்கு தாண்டா தெரியும்..!.."
 
தொண்டர்:  அனுபவம் பேசுது !
******************************
 
ராமு : “பொண்டாட்டிக்கு ஆசையா ஒரு புடவை வாங்கித்தர முடியலைடா” என்ன வாழ்க்கை!
 
சோமு : “ஏன்டா, காசு இல்லையா?”

ராமு : போடா! பொண்டாட்டியே இல்லைடா”!
 
********************
 
மனைவி:- என்னங்க! இனி மேல் உங்ககம்பெனியில் இருந்து இரவு வெளியே தங்கற மாதிரி வேலை கொடுத்தாங்கன்னா மாட்டேன்னு சொல்லிடுங்க...! நீங்க இல்லாம என்னாலநிம்மதியா தூங்க முடியலீங்க!

கணவன்:- அடிக்கள்ளி! என் மேல உனக்கு அவ்ளோ பிரியமா..?

மனைவி:- ஒரு மண்ணும் இல்ல! தினமு‌ம் உங்களோட புலி உறுமற மாதிரியான குறட்டை சத்தத்தைக் கேட்டு தூங்கி பழகிட்டதனால,
அந்த சத்தம் இல்லாம தூக்கமே வரமேட்டேங்குது! அதான்!

கணவன்:-? !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
***************************

வந்தவர் : பணம் தரணும் அப்பா இருக்காங்களா?
 
சிறுவன்: நீங்க தரணுமா? அப்பா தரணுமா?
 
வந்தவர் : நான்தான் தரணும்..!
 
சிறுவன்: எங்கிட்டே குடுங்க, நான் குடுத்துடறேன்..!!
 
வந்தவர் : உங்க அப்பா தரணும்னா?
 
சிறுவன்: வெளியூர் போயிருக்காரு, எப்ப வருவார்னு தெரியாது…!!!
 
********************************

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...