Total Pageviews

Saturday, November 28, 2015

பயணிகளின் கனிவான கவனத்திற்கு !

பயணிகளின் கனிவான
கவனத்திற்கு
கடலூரிலிருந்து
பாண்டிச்சேரி வழியாக
சென்னை செல்லும்
படகு நான்காவது
பிளாட்பாரத்திலிருந்து
இன்னும் சற்று நேரத்தில் புறப்படத் தயாராக உள்ளது!
பயணிகள் அனைவரும்
தயாராக இருக்குமாறு
கேட்டுக் கொள்ளப்
படுகிறார்கள்!!"



Thanks to Sountha Manuel

Friday, November 27, 2015

விவசாயம் பண்ணப் போறேன்!



இளைஞன் : வன்முறை இல்லாத ஒரு தலைமுறையை உருவாக்க முடிவு பண்ணியிருக்கேன் சார்!

முதியவர் : வெரிகுட்! வெரிகுட்!! அதுக்கு நான் என்ன உதவி பண்ணனும்?

இளைஞன் : உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும். அவ்வளவு தான் சார்!

********************************

என்னடா மாப்ளே.... நம்ம தெரு ஜோசியருக்கு திடீர்னு மவசு கூடிருச்சு !!

எப்பவும் பெண்கள், கூட்டம் கூட்டமா போறாங்க !!! " அப்படி என்ன நல்லாவா குறி சொல்றாரு ???!! "
,
"ஆமாம் மச்சான்.. இப்பல்லாம் அவர் ஜோசியம் சொல்லிப்புட்டு கூடவே.. அடுத்த வாரம் மழை பெய்யுமா ? குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை உருவாகுமா ? இல்லையா ?  மழை வருமா ? வராதான்னு !  சொல்லிப்புடுறாராம்!!!! ??? அதான் !

***********************************

சாப்பாட்டு பந்தியில் ராமு : “உங்களை நான் இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே…!”

சோமு : சாப்பாட்டை வாய்க்குள் திணித்துக் கொண்டே “அட, நீங்கள் ரெண்டாவது பந்தியில சாப்பிட்டுக் கொண்டிருந்த போது உங்க எதிர்ல உட்கார்ந்திருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேனே…” நாந்தான் அது !

ராமு : “ஏங்க..! நீங்க மொய் வைக்கலை…?” .

சோமு : அட… போங்க தம்பி ! மாப்பிள்ளைப் பய எனக்கு பத்திரிகையே வைக்கல… ! நான் ஏன் அவனுக்கு மொய் வைக்கணும்?”

ராமு  : அடப்பாவிப்பயலே ஓசில சாப்பிட வந்தவனாடா நீ..

*********************************

காவல் துறை அதிகாரியிடம் பெண் ஒருவர் : என்னைக் கண்டபடி திட்டி வாரம் ஒரு முறை மொட்டைக்கடிதம் வருது சார்!”

“காவல் துறை அதிகாரி : உங்களுக்கு யார் மேலாவது சந்தேகமா இருக்கா ?”

“பெண்  : நேர்ல திட்டுவதற்க்கு பயந்துகிட்டு !  என் புருசனே மொட்டை கடிதாசி எழுதுறாறோன்னு சந்தேகப்படறேன், சார்!”

***************************************

ராமு: மழை எப்போ நிக்கும்?

சோமு : ஏண்டா மாப்ள ! வயல்ல இறங்கி வேலை பார்க்க போறியா?

ராமு: இல்ல மாமு, மழை நின்னுடுச்சுன்னா,  ரோட்ட உழுது விவசாயம் பண்ணப் போறேன்!

************************************

முப்பது வருஷம் இளமையா இருக்க வழி இருக்கா?" 300 வது நகைச்சுவை பதிவு !




பிரதமர் : கடையில் என் படங்களை மட்டும் விற்க்கின்றாயே ! ஏன்?  மற்ற தேசத்தலைவர்கள் படங்களை எல்லாம் விற்க்க மாட்டாயா?

படம் விற்பவர் : தேசத்தலைவர்கள் / சினிமா நட்சத்திறங்கள் எல்லாப்படங்களும் விற்று தீர்ந்து விட்டது ! தங்கள் படத்தை தவிர !

*******************************************

வந்தவர் : உங்க கடைய இன்னும் எப்படி ஆக்ரமிப்புல இடிச்சு காலி பண்ணாம இருக்காங்க??

கடைக்காரர் : என்னய்யா சொல்றே??

வந்தவர் :  ஆமாங்க.. நீங்கதானே சொன்னீங்க ! திருச்சி மெயின்ரோடுல கடை வச்சிருக்கேன்னு..! அதான் !

******************************************

ராஜா : என் பையன் பண்ண காரியத்துனால என்னால வெளியே தலை காட்ட முடியலை !

மந்திரி : அப்படி என்ன பண்ணிட்டான்..?"

"ராஜா : என்னோட விக்கை எடுத்து அவன் போட்டுக்கிட்டுப் போய்ட்டானே!

********************************
பேஷன்ட்: டாக்டர், நான் தெரியாம சாவியை முழுங்கிட்டேன்.

டாக்டர்: எப்போ நடந்தது?

பேஷன்ட்: அது ஆச்சு மூணு மாசம்.

டாக்டர் கோபமாக: இம்புட்டு நாள் என்ன செஞ்சீங்க?

பேஷன்ட்: டூப்ளிகேட் சாவி உபயோகப்படுத்தினேன்,

டாக்டர் கோபமாக : இப்ப ஏன் வந்தீங்க ?

பேஷன்ட்:  இப்போ அதுவும் தொலைஞ்சி போச்சு !

***************************

நடிகை : இன்னும் முப்பது வருஷம் இளமையா இருக்க வழி இருக்கா?"

டாக்டர் : "எதுக்கு?"

நடிகை : ஒரு மெகா சீரியல்ல கதாநாயகி வாய்ப்பு கிடைச்சிருக்கு!

***********************************


Thursday, November 26, 2015

காந்தி படம் சேகரிக்கப் போறேன்.. !




நண்பர்1:நான் சாப்பிடாம என் மனைவி சாப்பிடவே மாட்டாடா மச்சி ! என் மேல அவ்ளோ பாசம் அவளுக்கு!

நண்பர் 2: சில பேரு காக்காவுக்கு சோறு வைக்காம கூடத்தான் சாப்பிட மாட்டாங்க...! அதுக்காக காக்கா மேல காதல்னு எடுத்துக்க முடியுமா?

நண்பர் 1: ???? ...

*************************************

ராமு: சோமு, அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி வருதில்ல... அதனால நான் காந்தி படமா சேகரிக்கப் போறேன்.. !

சோமு: நல்ல விஷயம்.. அதுக்கு நான் என்ன பண்ணனும்?

ராமு: உன்கிட்ட இருக்கற காந்தி படம் போட்ட 50, 100, 500, 1000 ரூபாய் நோட்டெல்லாம் எனக்குத் தந்தா ரொம்ப யூஸ் புல்லா இருக்கும்!

சோமு: !!!!





சந்தோஷம் தான்! ...




ஜோசியர் : உங்களுக்கு ஒரு தோஷம் இருக்கு... 

கல்யாணம் ஆனா அது நிச்சயமா காணாமப் போயிடும் !

ராமு: அப்படி என்ன தோஷம்?

ஜோசியர்: வேறென்ன சந்தோஷம் தான்! ...

**************************************

ரமா: ஆனாலும் இந்த கீதாவுக்கு பணத் திமிர் அதிகம் தான்...

பாமா: ஏன் என்ன பண்ணினா?

ரமா: தீபாவளிக்கு ‘பருப்பு' வடை சுட்டு, எல்லா வீட்டுக்கும் கொடுத்து விட்ருக்கா... ...

பாமா: ஏன் ?

ரமா: பருப்பு ஒரு கிலோ 180/-  உளூந்து ஓரு கிலோ 170/- நல்லெண்ய் 1 லிட்டர் 220/- ரூபாய்.

*****************************

நண்பர் 1: மனைவி, மழை - இந்த ரெண்டுக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா?

நண்பர் 2: தெரியலையேப்பா...

நண்பர் 1: இந்த ரெண்டுமே இல்லாதப்போ எப்ப வரும்ன்னு ஏங்குவோம்.... வந்தா ஏண்டா வந்ததுதுன்னு புலம்புவோம்....!

********************************

Wednesday, November 18, 2015

பென்சன் வாங்குறார் !


வேலைவாய்ப்பு அதிகாரி:  நீ பதியறதுக்கு, உன்னோட அப்பா, தாத்தாவையும் கூட்டிட்டு வந்திருக்கியே! ஏன்?"

கல்லூரி மாணவர் : அப்பாவுக்குப் பதிவை புதுப்பிக்கணும் ! எங்க தாத்தாவுக்கு முதல் இண்டர்வியூ வந்திருக்கு!" அதான் !
---------------------------------------------------

அந்த ஆள் எப்பவும் மத்தவங்க கையைத் தான் எதிர்பார்ப்பாரு..."

"ஏன்...?"

"அவருதான் கைரேகை ஜோசியம் பார்க்கறவராச்சே...!"

***************************************
தரகர் : பொண்ணு புண்ணியம் பன்னியிருக்குங்க! "மாப்பிள்ளைப் பையனுக்கு மாத வருமானம் இருபதாயிரம் !.

மாப்பிள்ளை வீட்டை விட்டு எங்கேயும் போக வேண்டியதில்லை."

பெண்னின் தகப்பனார் : அப்படியா, என்ன வேலை?"

தரகர் : "ரிட்டயர்டு ஆகிப் பென்சன் வாங்குறார் !

*****************************

டாக்டர் இவ்வளவு மருந்தையும் ரெண்டே நாள்ல சாப்பிட்டு முடிக்கணும்னு சொல்றீங்களே, ஏன்?"

ரெண்டு நாளைக்கு அப்புறம் கெட்டு போயிடும்! எக்ஸ்ப்ரி டேட் முடிஞ்சுடும் !
-------------------------------------------------------------------------------------------

Tuesday, November 17, 2015

மழை விட்டு விட்டு பெய்யும் !




கணவன்: நமக்கு, டாக்டர் செலவு மட்டும் எனக்கு மாசம் 1000/- ரூபாய் ஆகுது.

மனைவி: டாக்டரோட செலவைப் போய் நீங்க ஏன் பண்றீங்க?

**************************************

எஜமானி:  நம்ம ஊர்ல 24 மணி நேர LOCAL நியூஸ் சானல் வரப்போகுதாம்.......

வேலைக்காரி: அதுக்காக என்னைய வேலையை விட்டு நீக்கிவிடாதீங்கம்மா.... !

****************************************

பாலு : வெளிநாட்டிலிருந்து உன் பையன் என்ன வாங்கி வந்தான்"

சீனு : "நாலு செண்ட் தான்"

பாலு : "ஏன்..ஒரு ஏக்கர் வாங்கிட்டு வரச் சொல்லி இருக்கலாமே..!

************************************
ராமு : "டைம் இஸ் கோல்டுன்னு சொன்னா, நீ ஏன் ஒத்துக்க மாட்டேங்குற?"

சோமு: அதை அடமானம் வைக்க முடியாதே !

******************************************

கீதா: ஏன்டி.. டிவியில மழை விட்டு விட்டு பெய்யும்னு சொல்றாங்களே... ஏன் ?  தொடர்ந்து பெய்யாதா?

சுதா: வானத்துல மழைத் தண்ணி கம்மியா இருக்காம் ! அதான் நம்ம ஊர்ல கரண்ட் விட்டு விட்டு வர்ற மாதிரி மழையையும் விட்டு விட்டு பெய்யுமாம் !

********************************************

.

ஒரு கிறுக்கு ! முறுக்கு சாப்பிடுது !




காவல் அதிகாரி: உங்களை கைது செய்கிறேன்...  வாங்க ஆஸ்பத்திரிக்கு...!

அரசியல்வாதி: எதுக்கு?

காவல் அதிகாரி: எப்படியும் ஜெயிலுக்குப் போனதும் நெஞ்சுவலின்னு, ஆஸ்பத்திரிக்குத்தானே போகப் போறீங்க. அதான் !.

********************************

இஞ்ஜினீயரிங் வகுப்பறையில்... ஆசிரியர்: என்னடா போயும் போயும் மெக்கானிக்கல் இஞ்ஜினீயரிங் கிடைச்சுருக்கே அப்படீன்னு யாரும் வருத்தப்படவேண்டாம், என்னோட நண்பர் ஒருவர் திருச்சியில 25,000 ரூபாய் வாங்கிண்டு இருந்தார், இன்னிக்கு மும்பைல 1 லட்சம் வாங்கிட்டுருக்கார் !

மாணவர்: என்ன கடனா?

ஆசிரியர்: ஹே............................... ! சம்பளம் தான் !


********************************

காதலன்: நீ முறுக்கு சாப்பிடும் அழகைப் பார்த்து எனக்கு ஒரு கவி சொல்ல தோணுது.

காதலி: ம்ம்.. 'என்னங்க.. சொல்லுங்க' உங்க வாயால என்னைப் புகழ்ந்து சொல்லும் கவி கேட்க ஆசையாய் இருக்குங்க !

காதலன்: ஒரு கிறுக்கு ! முறுக்கு சாப்பிடுது !

*******************************

"சென்னையிலே இந்த மழைக்காலத்திலும் தண்ணிக் கஷ்டமாமே?"

ஆமா! குடிகாரங்க பெருத்துப் போயிட்டாங்கலே!"

******************************

தொழிலாளி : ஐயா, எனக்கு ஏழு குழந்தைகள்... உற்பத்திக்கு ஏத்த படி சம்பளம் கூட்டிக் கொடுங்க !

முதலாளி : "அந்த உற்பத்திக்கெல்லாம் சம்பளம் கூட்டித் தரமுடியாது... பேக்டரியிலேயே உற்பத்தியைக் கூட்டினவங்களுக்குத்தான் சம்பளம் கூட்ட முடியும்."

******************************


Saturday, November 14, 2015

மழைக்கால நகைச்சுவை !



முதலாளி :  வேலைகாரரைப்பார்த்து, டேய் வேலா.. தோட்டத்துக்கு போய் எல்லா செடிகளூக்கும் தண்ணீர் ஊற்று !

வேலா: முதலாளி ஏற்கனவே மழை பெய்துக்கொண்டிருக்கிறது !

முதலாளி: அதனாலென்னா குடை பிடித்துக்கொண்டுபோய் தண்ணீர் ஊற்று..???

***************************************

புயல் மழையில் ஒருத்தன் பீட்ஸா வாங்க கடைக்குச் போறான்.

கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா...?

வந்தவர்: பின்ன.. இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பீட்ஸா வாங்க அனுப்புவாங்க...!??

அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்புனா...

******************************
பல்கலைக் கழகத்தில் மாணவர்களிடையே தலைவரை பேசவிட்டது, தப்பா போச்சுது…!

அப்படி என்ன பேசினார்?

பள்ளிக்கூடத்துப் பக்கம் மழைக்குக் கூட ஒதுங்காத நானே பல கோடி சம்பாதிக்கும்போது,

பல்கலைக் கழகத்தில் படிக்கும் நீங்கள் பல்லாயிரம் கோடி சம்பாதிக்க வேண்டாமா?ன்னு பேசிட்டார்..!

***********************************
 ராமு : ஏதோ ….உங்களை மாதிரி சிலர் இருக்கிறதனாலதான் கொஞ்சம் மழை பெய்யுது ! “

சோமு : ”அப்படியா… நான் அவ்வளவு நல்லவனா ?

ராமு :  இல்லை ! உங்களை மாதிரி இல்லைனா !” ” நிறையவே மழை பெய்யும் ! “

*************************************
"நாங்கள் ஏழு பேர்கள் ஒரே குடையின் கீழ் நடந்து சென்றோம். ஆனால், ஒருவர்கூட நனையவில்லை."

"அதெப்படி?" " அந்த நேரத்தில்தான் மழையே பெய்யவில்லையே!

*****************

சென்னையில் பலத்த மழை !



# சென்னையில் பலத்த மழை செய்தி #

சன் டிவி : சென்னையில் கடும் மழை !  மக்கள் அவதி !  ஸ்டாலின் கண்டனம் !

ஜெயா டிவி : சென்னையில் நல்ல மழை !  வறட்சி நீங்கியது! ஏறி குளங்கள் நிறைந்தது!மக்கள் மகிழ்ச்சி !

கலைஞர் டிவி: (பொதுமக்களில் ஒருவர்) " மழை பெயிஞ்சுகிட்டே இருக்கு! ...அதுக்கு இந்த அம்மா ஒண்ணுமே செய்ய மாட்டேன்குறாங்க!! "

கேப்டன் டிவி : இரு ஆட்சியிலும் முடங்கி கிடந்த சாலை பணிகளால், சென்னை சாலைகளில் கடும் வெள்ளம் ! மக்கள் அவதி !

வசந்த் டிவி : தமிழக காங்கரஸ் கட்சியினர் ராகுல் காந்தியின் உத்தரவின் பேரில் நிவாரண பணிகளில் தீவிரம் !

பொதிகை டிவி : (ரமணன் ) நாளை சென்னையில் பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காண படும் ..சில இடங்களில் மிதமான மழையும்!  , ஒரு சில இடங்களில் பலத்த மழையும் , ஒரு சில இடங்களில் மிக பலத்த மழையும் பெய்ய கூடும் !

Friday, November 6, 2015

தீபாவளி நகைச்சுவை 4 !



வந்தவர் : ஐயா இல்லீங்களா...?

பெண் : என்ன விசயம்!

வந்தவர்:  தீபாவளி இனாம் வேணும்!

பெண் :  ஐயாவும் தீபாவளி இனாம் வாங்கத்தான் அடுத்த தெருவுக்குப் போயிருக்காரு !

******************************

மனைவி : என்னங்க இது தீபாவளியும் அதுவுமா இப்படி குடிச்சிட்டு வந்து நிக்கறீங்களே?

கணவர் : பின்ன நீ செஞ்சு வச்ச பலகார‌த்தை எ‌ல்லா‌ம் சா‌ப்‌பிட‌ணு‌ம்னா வேற எ‌ன்ன ப‌‌ண்றது சொ‌ல்லு?

***************************

மனைவி : கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தீங்களே. .. ஜோடிப் பொருத்தம் எப்படி ?

கணவர் : ஒரு செருப்பு கூட என் காலுக்குப் பொருந்தலை !

***************************

மனைவி  : எதுக்கு தீபாவளி சமயத்துல பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடறீங்க?

கணவர் : தீபாவளிப் பலகாரமெல்லாம் என் ஒருத்தனால செய்ய முடியாதே !

****************************  
 

தீபாவளி நகைச்சுவை 3 !


ட்டு:    "301, தலை தீபாவளிக்கு வர்ற எங்க மாப்பிள்ளையை.............."

காவலர் :  "வரவேற்கணுமா ஏட்டய்யா..?"

ஏட்டு: சும்மா மிரட்டி திருப்பி அனுப்பிடணும்..!"

**************************

மாமனார்    : கண்டிப்பா அடுத்த வருஷம் தீபாவளிக்கு மோதிரம் போடுறேன் மாப்ளே..."

மாப்பிள்ளை :  அப்போ மோதிரம் போட்ட பிறகே நான் ஊருக்குக் கிளம்பறேன் மாமா!"

************************

ராமு : "என்னடா இந்த வருஷம் உனக்கு தலை தீபாவளி தானே.. மாமனார் வீட்டுக்குப் போகலையா?"

சோமு : "அட! நீ வேற.. தலை தீபாவளிக்குப் போன என் மாமனாரே இன்னும் அவர் மாமனார் வீட்டுலத்தான் இருக்காருடா..."

*********************

தொண்டன் 1 : "நம்ம தலைவர் இன்னமும் புதுமாப்பிள்ளையாவே இருக்காரா... எப்படி?"

தொண்டன் 2 : "ஒவ்வொரு தீபாவளிக்கு முன்னாடி ஒரு திருமணத்தைப் பண்ணி தலை தீபாவளி கொண்டாடிடுறாரே!"

****************************

ராமு : "ஹைய்யா.. தீபாவளி வரப்பேகுது ஜாலின்னு கத்திக்கிட்டே போறாரே யாரு அவரு.."

சோமு : "பட்டாசுக்கடைக்காரரா?" "இல்லை... பிக்பாக்கெட் திருடன்."

************************

நம்பிக்கை துரோகம் !


செய்தி:  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  அரசு ரூ.400 கோடிக்கு மதுபானம் விற்க, இலக்கு நிர்ணயித்துள்ளது.

ரமேஷ் : என்னடா மாப்பிளே தீபாவளிக்கு ஊருக்கு போகலாயா ?

சுரேஷ் :  இல்லடா மாப்பிளே,  நம்மல நம்பி, அரசாங்கம் மதுபானம் விற்க இலக்கு நிர்ணயித்துள்ளது. 

அதுக்கு நாம நம்பிக்கை துரோகம் செய்யக்கூடாது !

 

தீபாவளி போனஸ் !




தீபாவளி  செலவுக்கு காசில்லாம தவிச்சேன்....

அடிச்சான் பாரு பிரைசு...செம தூள். ... தேங்கூ பி எம் டபல்யூ...

பரிசை வாங்கிய உடனை சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் இத படிக்கிற  எல்லா உறுப்பினர்க்கும் முதல்ல தீபாவளி போனஸ் குடுக்கனும் !


Thanks to R.P.Karthik

கடன் வாங்க ஆரம்பிச்சுட்டேன்....



ராமு : நான் செத்த பிறகு நாலு பேராவது என்னைப் பற்றி பேசணும்ன்றதுக்காக........

கீதா : எல்லோர் கிட்டேயும்... கருணை காட்ட ஆரம்பிச்சுட்டீங்களா?

ராமு  : ம்ஹும்! எல்லார் கிட்டேயும்..... கடன் வாங்க ஆரம்பிச்சுட்டேன்....

********************************

சோமு: கடவுளே! எனக்கு ஒரு ரூம் நிறைய தங்கம் கொடு......

ராமு: எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு.......

கீதா: எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு........

சோமு - ராமு: ?!?!?!?!?!?

*****************************

"சோமு: நான் வனஜாவை லவ் பண்ற விஷயத்தை ஊர்ல இருக்கற எல்லார்ட்டயும் சொல்லிட்டேன்"

"ராமு: அப்புறம் ஏன் சோகமா இருக்கே?"

""சோமு: இன்னும் வனஜாகிட்டே சொல்லலையே?"

***************************

இன்சல்டேசன் பீஸ் !


நர்ஸ் மீனா : டாக்டர், அந்த நோயாளி  நம்ம நர்ஸ் விமலாதேவிய அவனோட செல்போன்ல பல கோணத்துல போட்டோ புடிச்சி வெச்சிருக்கான்!

டாக்டர் : பாஸ்போர்ட் சைஸ் போட்டோவு ஒன்றுக்கு நூறு ரூபாயும்,  ஃ புல் சைஸ் போட்டோவுக்கு ஒன்றுக்கு இருநூறு
ரூபாயும் சேர்த்து பில் போட்டிடுங்க..!

********************************
நோயாளி : நரஸ், டாக்டர் கன்சல்டேசன் பீஸ் ருபாய் 200 தானே வாங்குவார், நீங்க 300 ருபாய் கேட்குறீங்க !

நர்ஸ் : நீங்க வெளியில் உட்காருட்ந்து, டாக்டர இன்சுல்ட் பண்ணதால இன்சல்டேசன் பீஸ் ருபாய் 100 சேர்த்து போட்டார் ! 

*************************

ரமா : வேலைக்காரியை கட்டி பிடிச்சுக்கிட்டு அழுவுறாரே உன் புருஷன், ஏன்?

உமா : வேலைக்காரிகிட்டே எல்லாம் சிரிச்சுப் பேசாக்கூடாதுன்னு சொன்னேன், அதான்!

*************************

உமா: ‘‘என்ன… உன் கணவர் உனக்கு மிஸ்டுகால் கொடுக்கறாரு..?’’

ரமா: ‘‘நான்தான் சொன்னேனே… அவரு என்கிட்டே பேசறதுக்கே பயப்படுவார்னு !

**********************

Wednesday, November 4, 2015

வல்லரசு ! 2020ல் வல்லரசு !

வல்லரசா மாற்றுவது எப்படி என்று யோசிக்கிராங்க போல....டல்லரசாக மாற்றாமல் இருந்தால் சரி...

Monday, November 2, 2015

பேசும் படங்கள் !


மரம் !

மரம் மட்டும் இப்படி வளர்ந்துச்சுன்னா பய புள்ள தினசரி 1000 மரம் நடுவானே !
னே !

பயிற்சி !

இங்கு அமைச்சர் பதவிக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது...



Sunday, October 11, 2015

வலைபதிவர் திருவிழா 11.10.2015 புதுகை !


வலைபதிவர் திருவிழா நடந்தது  - புதுகை !


கூடமோ                       :  செழுமை !


வறவேற்பு,உபசரிப்பில் திரு.முத்து நிலவனின்:  புதுமை !

செயல்பாடுகளில்     :  மேன்மை!

மேடையிலே               : பசுமை! மற்றும் குளுமை !

விழாக்குழுவினர் உடையோ : செம்மை!

தமிழிசை பாடல்களோ    :       அருமை!

விழாக்குழுவினர் அனைவரும்   : மென்மை!

செய்ததோ வந்திருந்த பதிவர் அனைவருக்கும்: நன்மை !

எழுத்தாளர் திரு இராமகிருஷ்ணன் பேச்சோ :  நுண்மை !

பேசுவது  அவரவர்     : உரிமை!

குழிப்பணியாரமோ   : வெண்மை !

வந்தவர்களில் பாதி  : முதுமை !

மீதி                                    : இளமை ! 


விழாவை சீரும் சிறப்பாக நடத்தியது விழாக் குழுவினரின்: திறமை!


மொத்ததில் இந்த வலைபதிவர் திருவிழா நமக்கு எல்லாம் : பெருமை !

நான் சொல்லுவது அனைத்தும்:உண்மை!உண்மை ! உண்மை!

மதுரை சித்தையன் சிவக்குமார்-9965244410




ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...