Total Pageviews

Thursday, September 6, 2012

உலகத்திலேயே வாழக் கூடாதுன்னு


ஆசிரியர்: பொய் சொல்லக்கூடாது, பிறர் பொருள் மேல் ஆசை வைக்கக் கூடாது,பிறர் மனம் நோகப் பேசக் கூடாது.



மாணவன்: இந்த உலகத்திலேயே வாழக் கூடாதுன்னு சொல்லிடுங்க சார்...
---------------------------


ஆசிரியர்: பள்ளிக்கூடத்திற்கு 'கட்' அடித்து விட்டு சினிமாவுக்கு போனியாமே, நாளை உன் அப்பாவைக் கூப்பிட்டு வா...


மாணவன்: அவர் படம் பார்க்கலே சார்... கதையை நான் சொல்றேன்...
--------------------------------

ஆசிரியர்: எது கேட்டாலும் தெரியாதுன்னு சொல்ற ஒரு பையன் நேற்று ஒரு கேள்விக்கு சரியாகப் பதில் சொல்லி விட்டான்...


மாணவன்: என்ன கேட்டீங்க...?


ஆசிரியர்: ஆந்தைக்கு பகல்ல கண் தெரியுமான்னு கேட்டேன். தெரியாது...ன்னுட்டான்.
-----------------------------------


ஆசிரியர்: நீ இவ்வளவு மார்க் வாங்குவேன்னு நான் நினைக்கல ரமேஷ்...
 

மாணவன்: என் உங்களைச் சந்தோஷப் படுத்தனுமின்னுதான் பிட் வைத்து எழுதினேன் சார்...
--------------------------------


ஆசிரியர்: நான் தினமும் ஏழு கிலோ மீட்டர் நடந்து சென்று படித்து வந்தேன்...


மாணவன்: அப்பவே உங்களுக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரமா சார்..
-----------------------------------.

சிங்கப்பூர் போயிருக்கிறாரும்மா


வீட்டுக்காரி: பிச்சை எடுக்க நீ வந்திருக்கிறாயே... உன் கணவன் எங்கே?
 

பிச்சைக்காரி: பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க சிங்கப்பூர் போயிருக்கிறாரும்மா...
----------------------------------

ஒருவர்: என்னப்பா... ஒரு மணி நேரத்திற்கு ஒரு தரம் பிச்சை கேட்டு வர்ற...?
 

பிச்சைக்காரன்: இந்த ஏரியாவை இரண்டு லட்சம் ரூபாய்க்கு ஏலத்திற்கு எடுத்திருக்கேங்க...
---------------------------------

பிச்சைக்காரன்: மூணு நாளாப் பட்டினி, ஏதாவது தர்மம் பண்ணங்கய்யா...
மற்றவர்: பார்த்தா அப்படி தெரியலயேப்பா...
பிச்சைக்காரன்: உங்க கண்ணுல கோளாறா இருக்கும். அதுக்கு நான் என்ன செய்ய முடியும்...? 
-----------------------------


பிச்சைக்காரன்1: வீடு வீடாகப் போய் பிச்சை எடுப்பது எனக்குப் பிடிக்கவில்லை
பிச்சைக்காரன்2: அப்புறம் என்ன செய்யப் போற...?
பிச்சைக்காரன்1: தானா கொண்டு வந்து பிச்சை அளiப்பவர்களுக்குப் பரிசுன்னு ஒரு போட்டி அறிவிக்கப் போறேன்....
---------------------------------

கணவன்: கெட்டுப்போன உணவைப் பிச்சைக்காரனுக்குக் கொடுக்காதேன்னு சொன்னேனே கேட்டியா?
மனைவி: ஏங்க...?
கணவன்: கன்ஸ்யூமர் கோர்ட்டுக்குப் போய் உனக்கு நோட்டீஸ் விட்டிருக்கான்.
--------------------------------

பிச்சைக்காரன்: ஒரு மாசத்திற்கு முந்தி உங்க வீட்டுச் சாப்பாடு நல்லாயிருக்குமேம்மா...இப்ப அப்படி இல்லையே...
 

பெண்: ஆமாப்பா... தெரியாமல் அவரை விவாகரத்து பண்ணி விட்டேன்.
-------------------------------

பெண்: என்னய்யா... பிச்சை எடுக்க தினம் ஒரு புதுப்பாத்திரம் கொண்டு வருகிறாயே...
 

பிச்சைக்காரன்: போன மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சும்மா... மாமனார் நிறைய பாத்திரங்கள் கொடுத்து விட்டார்.
---------------------------------

நர்சைப் பார்த்ததும் என் மனைவி ஞாபகம் வந்திடுச்சு


டாக்டர்: இன்னும் நான் உங்களுக்கு ஊசியே போடலியே அதற்குள் ஏன் கத்துகிறீர்கள்?
வந்தவர்: உங்க நர்சைப் பார்த்ததும் என் மனைவி ஞாபகம் வந்திடுச்சு டாக்டர்...
-----------------------------

பெண்: என் கணவருக்கு ஞாபகமறதி அதிகமாயிடுச்சு டாக்டர்..?
டாக்டர்: எப்படியம்மா சொல்றீங்க?
பெண்: பீரோன்னு நினைத்து, பிரிஜ்ஜைத் திறந்து சட்டையைத் தேடுகிறார்...!
--------------------------

வாலிபர்: மூன்று மாதமாக எனக்கு கழுத்து வலி டாக்டர்...
டாக்டர்: உங்க மேனேஜர்கிட்டே சொல்லி டைப்பிஸ்ட் சீட்டை முன்னால போடச் சொல்லுங்க...
----------------------------------

வந்தவர்: டாக்டர் நான் நீண்ட ஆயுள் வாழ விரும்புகிறேன். ஒரு நல்ல வழிமுறை சொல்லுங்களேன்!
டாக்டர்: உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?
வந்தவர்: இல்லை டாக்டர். திருமணம் ஆயுளை நீட்டிக்குமா?
டாக்டர்: அப்படி சொல்வதற்கில்லை! ஆனால் நீண்ட ஆயுள் வாழ வேண்டும் என்கிற நினைப்பு மீண்டும் வராது!
----------------------------------

வந்தவர்: டாக்டர் இப்போதெல்லாம் என்னால் சிந்திக்கவே முடிவதில்லை, என்ன செய்வது?
டாக்டர்: எவ்வளவு காலமாய் இப்படி இருக்கிறது?
வந்தவர்: சரியாகச் சொல்ல வேண்டுமானால் நான் கல்யாணம் செய்து கொண்ட நாள் முதல்.

டாக்டர்: இல்லை. உங்களின் கணிப்பு தவறானது. இது நீங்கள் கல்யாணம் செய்து கொள்வதற்கு முன்பே நிகழ்ந்திருக்கிறது. ஆனால், நீங்கள் இப்போது தான் உணர ஆரம்பித்திருக்கிறீர்கள்.முன்னமே நீங்கள் சிந்திதிருந்தால் உங்களின் கல்யாணமே நிகழ்ந்திருக்காது.
-------------------


வெளி நாடு சென்றிருந்த கணவருக்குத் தந்தி வந்தது, " மனைவி இறந்து விட்டார்.உடனே வரவும்".
கணவர் தெரிவித்தார், "என்னால் வர இயலாது, ஈமக்கிரியைகளை முடித்து விடவும்"
மீண்டும் தந்தி வந்தது, " பிணத்தை எரிப்பதா? புதைப்பதா?"
கணவர் பதில் அனுப்பினார், " பிணத்தை எரித்து விடவும். சாம்பலைப் புதைத்து விடவும்."
----------------------------------

நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்.


மனைவி: நம்ம பையன் வளர்ந்து என்னவாக ஆசைப்படுறீங்க?

கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்...
ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது...
நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்.
-------------------------

மனைவி - பால் எல்லாவற்றையும் பூனை குடிக்கும்வரை என்ன பண் ணிட்டீருந்தீங்க?
கணவன் - இந்த பூனையும் பால் குடிக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.
--------------------------------

என் மனைவி கிட்ட எனக்கு பிடிச்சதே அவளோட பொய் சொல்லாத குணம்தான்..
இல்லையே...நேற்றுகூட என் மனைவிகிட்ட 'என் புருஷன் அழகுன்னு' சொன்னாளாமே
--------------------

மனைவி: ஏங்க! நான் கார்ல போறப்ப நாலு அஞ்சு தடவை இந்த டிரைவர் ஆக்சிடென்ட் பண்ணப் பார்த்தான்! உடனே மாத்துங்க!

கணவன்: விடும்மா! இன்னும் ஒரே ஒரு சான்ஸ் கொடுத்துப் பார்ப்போம்!
-------------------------

என் மனைவி ஒரு மாதம் பிறந்த வீட்டிற்கு போயிருக்கா..
அதுக்கு சந்தொஷப்படாம ..வருத்தப்படறே..
அந்த ஒரு மாசம் இன்னியோட முடியறது.அதுதான் !
----------------------------

கணவன் - ஊருக்கு போய் சேர்ந்ததும் லெட்டர் போடு கமலா?
மனைவி -  ஏங்க?
கணவன் - அப்பதான் எனக்கு முழு சுதந்திரமே கிடைச்சமாதிரி.
-----------------------------------

கணவன்: உன் போட்டோவா இது...எனக்கே சந்தேகமா இருக்கு...
மனைவி: என் மேலே இருக்கிற சந்தேகம் எப்பதான் உங்களுக்குத் தீரப் போகுதோ...
------------------

கணவன்: இந்த சேலை கட்டியிருக்கும் போது நீ மகாலட்சுமி மாதிரியே இருக்க...
மனைவி: யாருங்க அந்த மகாலட்சுமி ?
கணவன்: எங்க ஆபிஸ் ஸ்டோனோ டைப்பிஸ்ட்...!
-------------------------------------------

மனைவி: என்னங்க நம்ம கல்யாண நாளைக் கூட மறந்துட்டீங்களே...
கணவன்: உனக்குத்தான் தெரியுமே... நான் நல்ல விஷயத்தை மறக்க மாட்டேன்னு...
------------------------------

Wednesday, September 5, 2012

Welcome to Madurai

மதுரை சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை வரவேற்க்கின்றது.




Welcome to Madurai Sivakumar's Website


http://mdusskadl.blogspot.com// ·                             விழிப்புணர்வு.

http://madurai-pcl-sivakumar.blogspot.com//·           படித்ததில் பிடித்தது.

http://wwwsithancom-sivakumar.blogspot.com/      . பொது அறிவுச்செய்திகள்

 http://maduraisskadl.blogspot.com//         சிறுகதை:

 http://www.mdusskadlsk.blogspot.in/        நகைச்சுவை.காம்.

http://www.sskganesh.blogspot.in/   பார்த்ததில் பிடித்தது

http://ssktamilquotes.blogspot.in/     தமிழ் பொன் மொழிகள்

http://mduadlssk.blogspot.com//            TAMIL CLASSICAL SONGS

நமது பிப்பு ஒரு சம்பவமாக் இருக்கலாம், ஆனால் நமது இப்பு ஒரு சரித்திரமா இருக்க வேண்டும்


https://plus.google.com/110659488613257381414/posts?hl=en&partnerid=gplp0

நகைச்சுவை வலைச்சரம்

Welcome to Madurai Sivakumar's Website

மதுரை சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை வரவேற்க்கின்றது.



http://mdusskadl.blogspot.com// ·                             விழிப்புணர்வு.

http://madurai-pcl-sivakumar.blogspot.com//·           படித்ததில் பிடித்தது.

http://wwwsithancom-sivakumar.blogspot.com/      . பொது அறிவுச்செய்திகள்

 http://maduraisskadl.blogspot.com//         சிறுகதை:

 http://www.mdusskadlsk.blogspot.in/        நகைச்சுவை.காம்.

http://www.sskganesh.blogspot.in/   பார்த்ததில் பிடித்தது

http://ssktamilquotes.blogspot.in/     தமிழ் பொன் மொழிகள்

http://mduadlssk.blogspot.com//            TAMIL CLASSICAL SONGS


https://plus.google.com/110659488613257381414/posts?hl=en&partnerid=gplp0

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...