Total Pageviews

Tuesday, October 18, 2016

மாப்பிள்ளைக்கு பொய் சொல்லத் தெரியாதுன்னு!


நகைச்சுவை தத்துவங்கள் | Comedy Quotes in Tamil


மச்சான் என்னுடைய இந்த அசுர வளர்ச்சிக்கு நீ தாண்டா காரணம்!?

நானா ....எப்படிடா??!!....

இப்பவோ......அப்பவோன்னு இருந்த என் மாமனார்கிட்ட நீ எழுதின ஒரு ஜோக்க படிச்சு காட்டினேண்டா வ்வளவுதான் பொட்டுன்னு போயி சேர்ந்துட்டாருடா! அப்புறம்! அவருடைய சொத்தெல்லாம் எனக்கு வந்துடுச்சில்ல??!!!

******************************
உடம்பு பூராவும் தங்க நகைகளை மாட்டிக்க பயமாயிருக்கு.”

“ஏன்?”

“திடீர்ன்னு ஞாபகமறதியா என் கணவர் என் கிட்டயே கத்தியைக் காட்டி, எல்லாத்தையும் கழட்டுன்னு சொல்றார்.”

******************
அந்த பொண்ணைப் பார்த்து மத்தாப்பூ மாதிரி சிரிக்கிறே‌ன்னு
சொன்னது ஒரு தப்பா?

ஏ‌ன்டா எ‌ன்ன ஆ‌ச்சு?

அவ அண்ணன் சாட்டையோட வந்து வெளுத்துட்டான் முதுகை. ..!

************************
‘‘டாக்டர்... எனக்கு சுகரும், மனைவியும் ஒண்ணுதான்!’’

‘‘எப்படிச் சொல்றீங்க..?’’

‘‘ரெண்டையும் என்னால கன்ட்ரோல் பண்ண முடியலை டாக்டர்...’’

*******************************

கணவன் : "எதுக்கு பக்கத்து வீட்டுக்காரியோட புடவையை வாங்கி கட்டிக்கிட்டு இருக்கே...?"

மனைவி: "அப்படியாவது நீங்க என்னைப்பார்த்து பல்லைக் காட்டறீங்களான்னு பார்க்கலாம்னு தான்!


கணவன்:(உள்ளுக்குள் முணங்கிய படி) நான் பல்லை காட்டுனதை இவ எப்படி பார்த்தா?

**********************
போன்ல, நான் அழகா இருக்கேன்னு ஒரு முறை கூட எனக்கு பார்த்த  மாப்பிள்ளை சொல்ல வில்லையே தரகரே…!

நான் தான் சொன்னேனேம்மா…மாப்பிள்ளைக்கு பொய் சொல்லத் தெரியாதுன்னு!

************************

காதலி: டியர் சில்மிஷம் எதும் செய்யமாட்டேன்னு சத்யம் செஞ்சா தான் சினிமாக்கு வருவேன் !.

காதலன்: டியர் வேணாம்....! எதுக்கு தண்டச்செலவு!

*************************

உன்னைவிட அப்பாதாம்மா நல்லவர்..!


Tamil Doctor Nurse Joke - Facebook Image Share

மகன் : உன்னைவிட அப்பாதாம்மா நல்லவர்..!

அம்மா: எப்படிடா?

மகன் : பக்கத்து வீட்டுக்குப் பாப்பாவுக்கு முத்தம் கொடுத்துட்டு நீ பாட்டுக்கு வந்துட்டே…  

அப்பா மட்டும் தான் மறக்காம அந்த ஆண்டிக்கும் முத்தம் கொடுத்தாரே..!

******************************]
உலகத்துல ஒருத்தர் மாதிரி ஏழு பேர் இருப்பாங்களாமே..!

ஆமாம் அதுக்கென்ன இப்போ..?

இல்ல! மத்த ஆறு பேருக்காவது நல்ல மனைவியா
அமைஞ்சிருக்காங்களான்னு பார்க்கலாம்னு ஆசை..!
**********************************
சொன்னதெல்லாம் கேக்கற நாய் ஒண்ணு வளர்த்தியே இப்ப
எங்கேடி அது காணோம்!

எனக்குத்தான் இப்ப கல்யாணம் ஆயிடுச்சே அதனால அதை
வித்துட்டேன்!

**************************

கணவன்: என்னோட மூக்குக்கண்ணாடி எங்கே?

மனைவி : வேலைக்காரி வீட்டை கூட்டித் தள்ளிட்டு போகட்டும்  தர்றேன்…!

*******************

நான் தலைல பூ வெச்சுக்கிட்டு போனா மானேஜர்
திட்டுவாரு..!

அநியாயமா இருக்கே…!

அப்புறம் அவரு வாங்கின பூவை எங்கு வைப்பாரு..!

***************************************
நேத்து சாயங்காலம் போன் பண்ணேன்…
ஏன்டா எடுக்கல?’’
-
‘‘நான் வீட்டுக்குப் போன உடனே என் மனைவி சைலன்ட்
மோட்ல போட்ருவா!’’
-
‘‘உன் மொபைலை உன் மனைவி  ஏன் சைலன்ட்
மோட்ல போடணும்?’’
-
‘‘மொபைல இல்ல! என்னையவே பல நேரம் சைலன்ட்
மோட்லதான் போட்டுவா(ங்க)..!’’
**********************************

மப்புல அது தெரிந்தால்தானே..!




பக்தையே என் தவத்தை ஏன் கலைத்தாய்..?

என் வயித்துல வளர்ற உங்க வாரிசை கலைக்கவா
வேண்டாமான்னு கேட்கத்தான் சாமி..!

**************************
கையில் என்ன கட்டு?

மாடிப்படி ஏறும்போது தவறி விழுந்து விட்டேன்..!

உங்க வீட்டிலதான் மாடியே இல்லையே..?

மப்புல அது தெரிந்தால்தானே..!

***************************

கணவன் : ஏண்டி அப்படி என்ன தலைபோற அவசரம்னு ஆட்டோ பிடிச்சு ஆபீசுக்கே வந்திருக்கிறே?

மனைவி : நம்ம வீட்டு வேலைக்காரியைக் காணோம். 

சந்தேகமாப் போச்சு. நீங்களாவது ஆபீசில இருக்கீங்களான்னு பார்க்கத்தான் வந்தேன்!

*************************

உங்க கணவரிடம் உள்ள நல்ல விஷயம் ஒண்ணு சொல்லுங்க !.

நான் எவ்வளவு அடிச்சாலும் திருப்பி ஒரு அடி கூட அடிக்க மாட்டார்…!

************************

அடுத்தவங்க சந்தோஷமா இருக்கணும், அதை நான் என் கண்ணால பார்க்கணும்னு அவரு அடிக்கடி சொன்னப்பவே
நான் சந்தேகப்பட்டேன், அது சரியாப் போச்சு…!

ஏன் ? என்னாச்சு?

பக்கத்து வீட்டுப் பெட்ரூமை எட்டிப் பார்த்தார்னு!

போலீஸ் அவரை கைது செய்துட்டுப் போறாங்களே…!
******************************

நேத்து சாயந்திரம்தான் அவங்களோட அம்மா வீட்டுக்குப் போனா !





மனைவி- உலகம் பூரா போய் தேடினாலும் என்ன மாதிரி மனைவி கிடைக்கமாட்டா..!!!

கணவன்- எனக்கென்ன பைத்தியமாடி புடிச்சிருக்கு.. மறுபடியும் உன்னை மாதிரியே தேட..!!!!

*************************

நான் 'இன்னிக்கு' சந்தோஷமா இருக்கேன்னா அதுக்கு என் மனைவிதான் சார் காரணம் !

அந்த மகாலட்சுமியை பார்க்கணுமே!

நேத்து சாயந்திரம்தான் அவங்களோட அம்மா வீட்டுக்குப் போனா !

****************************
காதலன்: செல்லம் நம்ம கல்யாணத்த எங்க வீட்டுல ஏத்துக்க மாட்டேன்றாங்க. தடுத்து நிறுத்த ஏற்பாடு பண்றாங்க!

காதலி: நம்ம கல்யாணத்த தடுத்து நிறுத்த அவுங்க யாருங்க?

காதலன்: என் மனைவியும் மாமியாருந்தான்!!

***********************************

ஆண்கள் ஏன் பெண்களின் கண்ணைப் பார்த்து
பேசுவதில்லை? தெரியுமா?

ஏனென்றால் அவர்கள் பார்க்கும் இடத்தில் இருப்பவை
கண்கள் இல்லையே!

***********************
"உன் மாமியாரோட செல்போனை எடுத்து, எதுக்காக வைப்ரேஷன் செட் பண்றே..?"

"அவங்களால ஒரு சின்ன அதிர்வைக்கூட தாங்கிக்க முடியாதுன்னு டாக்டர் சொல்லியிருக்கார்..... அதை டெஸ்ட் பண்ணலாமேன்னுதான்!"

*****************************

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...