Total Pageviews

Friday, February 22, 2013

அவள் வாய் பேச மாட்டாளாம்.



காதலி: நம் காதலை ஏன் அப்பாகிட்ட சொல்ல அவசரப்படுத்துறீங்க...?

காதலன்: அப்பதான் உனக்கு வேற இடத்தில் சீக்கிரம் மாப்பிள்ளை பார்ப்பார்.

-------------------

காதலன்: ராஜி...என்ன இன்னிக்கு சாம்பல் கலரில் சேலை கட்டிக்கொண்டு வந்திருக்கிறாய்...?

காதலி: நான் கர்ப்பமாகி இருக்கேன் என்பதை உங்களுக்கு உணர்த்தத்தான்...

-------------------

ஒருவன்: என் காதலி கண்ணால பேசியதை நம்பி அவளைக் கல்யாணம் செய்துகிட்டது தப்பாப் போச்சு!

மற்றவன்: ஏன்?

ஒருவன்: அவள் வாய் பேச மாட்டாளாம்.

************************************

ஐ லவ் யூ சொல்ற அளவுக்கு



காதலன்: இப்படி பயந்து, பயந்து எத்தனை நாளைக்குத்தான் வாழறது...?

காதலி: இன்னும் ரெண்டு மாசத்திற்குத்தான்...!

காதலன்: அப்புறம்...?

காதலி: எனக்குக் கல்யாணம் ஆகிவிடும்!

---------------

ஒருத்தி: காதல் பாதை கரடு முரடு ஆனதுங்கிறதை நான் நம்பலைடி...!

மற்றவள்: ஏன்...?

ஒருத்தி: என் காதலர் என்னை நல்ல பாதைலே கூப்பிட்டு வந்திட்டார்...!

-----------------------

ஒருவர்: என் பொண்ணு தபால் மூலம் இங்கிலீஷ் கத்துக்கிட்டு இருக்கா...!

மற்றவர்: இதுவரை என்ன கத்துருக்கா...?

ஒருவர்: ஐ லவ் யூ சொல்ற அளவுக்குக் கத்துருக்கா...!


------------------

ஒருத்தி: என்னடி லவ் வெட்டர் எழுதி, அட்ரஸ் எழுதாத கவர் ஒன்னு கூட வைத்து அனுப்பி இருக்கிறாரே...!

மற்றவள்: நான் இந்தக் காதலை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்னுடைய தோழி யாருக்காவது அனுப்பச் சொல்லி இருக்கிறார்.

--------------------

நின்று கொண்டே சாப்பிட்டு விடுவேன்.



சர்வர்: சார்...என்ன சாப்பிடுறீங்க?

சாப்பிட வந்தவர்:  நாலு கிலோ அரிசியும், ஒரு கிலோ உளுந்தும் ஆட்டிக் கொடுத்தால் என்ன டிபன் கொடுப்பியோ அதைக் கொடுப்பா...

சர்வர்:  ?.....!.....?.

-------------

ஒருத்தி: ஆம்பளை சமைத்து எனக்கு உட்கார்ந்து சாப்பிட பிடிக்காதுடி...

மற்றவள்:  நீயே சமைத்து விடுவாயா..?

ஒருத்தி:  இல்ல...டைனிங் ஹாலில் நின்று கொண்டே சாப்பிட்டு விடுவேன்.

----------------

டைப்பிஸ்ட்:  ஏன் சார்...இரண்டு நாளா உங்க மனைவிதான் சமைக்கிறார்களா..?

மானேஜர்:  உனக்கு எப்படிம்மா தெரியும்..?

டைப்பிஸ்ட்:  இரண்டு நாளா சாப்பாட்டை கீழே கொட்டி விடுகிறீர்களே...

--------------

ஒருவர்:  என்னப்பா இட்லி மல்லிகைப் பூ போல இருக்கும்னு சொன்னே... நீலக் கலரா இருக்கே?

சர்வர்:  சொட்டு நீலம் கொஞ்சம் அதிகமாயிடுச்சு சார்...

----------------------------

ஒருவர்:  பாதிப்பேர் பந்தியில இருந்து பாதியிலேயே எழுந்து போயிட்டாங்களே..?

மற்றவர்:  ஐம்பது ரூபாய் மொய் எழுதினவர்களுக்கு பாயசம் இல்லேன்னு சொல்லிட்டாங்களாம்...

--------------------------

ஒருவன்: உங்கப்பாவிற்கு மணி அடிச்சா சாப்பாடுன்னு சொல்றியே...ஸ்கூல் வாத்தியாரா இருக்காரா..?

மற்றவன்:  இல்லடா...வேலூர் ஜெயிலில் இருக்கிறார்...

**********************************

வேற கல்யாணம் பண்ணப் போறா சார்...


மேலாளர்: என்னம்மா ...தப்புத்தப்பா டைப் அடித்திருக்கிறாயே...

டைப்பிஸ்ட்: சாரி சார், பக்கத்திலிருந்தவர் கிச்சு கிச்சு மூட்டி விட்டார்.

----------------

மேலாளர்: இதுவரை நூறு இன்டர்வியுவிற்குப் போயிருக்கேன்னு சொல்றீயே, ஏன் உனக்கு வேலை கிடைக்கலை?

வந்தவன்: எல்லோரும் மடத்தனமாக் கேள்வி கேட்கிறாங்க சார்.

-------------------

ஒருவர்: என்ன ஆபிஸ்ல திடீரென்று போராட்டம் நடத்துறாங்க...?

மற்றவர்: கார், ஸ்கூட்டர் வைத்திருப்பவர்களுக்கு வெகிக்கிள் அலவன்ஸ் கொடுப்பது போல் நடந்து வருகிறவர்களுக்கு வாக்கிங் அலவன்ஸ் வழங்கனுமாம்...

--------------------

ஒருவர்: எங்க ஆபிஸ்ல யாரும் தூங்காம இருக்க ஒரு வழி பண்ணிட்டேன்.

மற்றவர்: என்ன பண்ணுனீங்க...?

ஒருவர்: புதுசா ரெண்டு லேடி டைப்பிஸ்டுகளை வேலைக்குச் சேர்த்திருக்கிறேன்.

----------------------

ஒருவர்: இந்த ஆபிஸ் ரொம்ப நேர்மையான ஆபிஸ்ங்க...

மற்றவர்: யாருமே லஞ்சம் வாங்க மாட்டார்களா...?

ஒருவர்: வாங்குவாங்க...அவங்க போட்டிருக்கிற லிஸ்ட்படிதான் வாங்குவாங்க...

-----------------------

மேலாளர்: ஆறு மாதத்திற்கு முன்னாலே தான் உங்க பெண் கல்யாணமுன்னு கடன் வாங்கினீங்க...

இப்போ மறுபடியும் கடன் கேட்கிறீங்களே... உங்களுக்கு இரண்டு பெண்ணா...?

ஊழியர்: இல்லைங்க... ஒரு பெண் தான். அவளோட கணவரை விவாகரத்து பண்ணிட்டு வேற கல்யாணம் பண்ணப் போறா சார்...
****************************************

இரண்டு லட்சம் ரூபாய்க்கு ஏலத்திற்கு எடுத்திருக்கேங்க...



வீட்டுக்காரி: பிச்சை எடுக்க நீ வந்திருக்கிறாயே... உன் கணவன் எங்கே?

பிச்சைக்காரி: பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க சிங்கப்பூர் போயிருக்கிறாரும்மா...
-----------------

ஒருவர்: என்னப்பா... ஒரு மணி நேரத்திற்கு ஒரு தரம் பிச்சை கேட்டு வர்ற...?

பிச்சைக்காரன்: இந்த ஏரியாவை இரண்டு லட்சம் ரூபாய்க்கு ஏலத்திற்கு எடுத்திருக்கேங்க...

---------------------

பிச்சைக்காரன்: மூணு நாளாப் பட்டினி, ஏதாவது தர்மம் பண்ணங்கய்யா...

மற்றவர்: பார்த்தா அப்படி தெரியலயேப்பா...

பிச்சைக்காரன்: உங்க கண்ணுல கோளாறா இருக்கும். அதுக்கு நான் என்ன செய்ய முடியும்...? 

---------------------------

பிச்சைக்காரன்1: வீடு வீடாகப் போய் பிச்சை எடுப்பது எனக்குப் பிடிக்கவில்லை

பிச்சைக்காரன்2: அப்புறம் என்ன செய்யப் போற...?

பிச்சைக்காரன்1: தானா கொண்டு வந்து பிச்சை அளiப்பவர்களுக்குப் பரிசுன்னு ஒரு போட்டி அறிவிக்கப் போறேன்....

------------------------------

கணவன்: கெட்டுப்போன உணவைப் பிச்சைக்காரனுக்குக் கொடுக்காதேன்னு சொன்னேனே கேட்டியா?
மனைவி: ஏங்க...?

கணவன்: கன்ஸ்யூமர் கோர்ட்டுக்குப் போய் உனக்கு நோட்டீஸ் விட்டிருக்கான்.

---------------------------

பிச்சைக்காரன்: ஒரு மாசத்திற்கு முந்தி உங்க வீட்டுச் சாப்பாடு நல்லாயிருக்குமேம்மா...இப்ப அப்படி இல்லையே...

பெண்: ஆமாப்பா... தெரியாமல் அவரை விவாகரத்து பண்ணி விட்டேன்.

-------------------------------------

பெண்: என்னய்யா... பிச்சை எடுக்க தினம் ஒரு புதுப்பாத்திரம் கொண்டு வருகிறாயே...

பிச்சைக்காரன்: போன மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சும்மா... மாமனார் நிறைய பாத்திரங்கள் கொடுத்து விட்டார்.


*********************************************

பொண்ணு சிரிச்சா கன்னத்துல குழி விழும்...


ஒருவன்: நேற்று பெண் பார்க்கப் போன இடத்தில மயங்கி விழுந்திட்டேன்டா...

மற்றவன்: பெண் அவ்வளவு அழகா?

ஒருவன்:  இல்லடா... விஷயம் தெரிந்து என் மனைவியும் அங்கே வந்திட்டா...
-------------------------

தரகர்: பொண்ணு சிரிச்சா கன்னத்துல குழி விழும்...

பையனின் தந்தை:  பொண்ணுக்கு பல் இல்லைங்கிறதை நாசூக்கா சொல்றீங்களா...?
---------------------------

ஒருத்தி: இலவசம் என்றால் என் கணவர் எதையும் விட மாட்டார்...

மற்றொருத்தி: அப்படியா?

ஒருத்தி: ஆமாம்! இப்பப் பாரேன்... இலவச திருமணம் செய்துக்கிட்டு வந்திருக்கிறார்...

---------------------------

ஒருவர்: கலப்புத் திருமணம் செய்தால் அரசாங்க உதவிகள் கிடைக்குமின்னு சொன்னாங்க... 


ஆனால் நீங்க அரெஸ்ட் செய்ய வர்றீங்களே...

போலீஸ்: அதுக்காக ஒவ்வொரு ஜாதியிலேயும் ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துக்கச் சொல்லியிருக்கா...

--------------------

ஒருவர்: கல்யாணப் பத்திரிகையிலே பொண்ணோட தங்கை பெயர்களைப் போட்டு வயசையும் போட்டிருக்கிறீர்களே...?

மற்றவர்: ஆமாங்க... அடுத்து கல்யாணத்துக்கு பொண்ணுங்க இருக்கிறாங்கங்கிறத தெரிவிக்கத்தான்..

**********************************************************.

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...