Total Pageviews

Thursday, March 29, 2012

டாஸ்மாக்




தலைப்பு : உயிருடன் கட்டப்பட்ட சமாதிகள்

கதை : முதியோர் இல்லம்

*************************************************

தலைப்பு : பைனான்ஸ் கம்பெனி முதலாளி

கதை : ஓடியோடி உழைக்கணும்

*************************************************

தலைப்பு : டாஸ்மாக்

கதை :  குடியிருக்கும் கோவில்


*************************************************


தலைப்பு : ஃபால்ஸ் ஸ்டேட்மெண்ட்


கதை : ரியல் எஸ்டேட்


*************************************************


தலைப்பு : அரைக்கை சட்டை


கதை : பிறவி ஊனம்


*************************************************

தலைப்பு : நடத்துனரிடம் பிச்சைக்காரன்

கதை : சில்லரை இல்லைப்பா

*************************************************

தலைப்பு : உடைந்த எலும்புகள் பேசிக்கொண்டன

கதை : பிரிவோம் சந்திப்போம்

*************************************************

தலைப்பு : டீக்குள் ஈ




கதை : ஸ்பாட் அவுட்

*************************************************

தலைப்பு : வயிற்றில் ஒரு ஏணி

கதை : சிக்ஸ் பேக்

*************************************************

தலைப்பு : புல்லாங்குழல்

கதை : செத்துப் பிழைத்தவன்

*************************************************

Monday, March 19, 2012

ஒரு நிமிஷம் லேட்டா வந்திருந்தா.....






ஹலோ டாக்டர் என் மாமியார் பிழைச்சிடுவாங்களா?

உங்க மாமியார் பிழைச்சிட்டாங்க. இன்னும் ஒரு நிமிஷம் லேட்டா வந்திருந்தா.

உயிரோட பார்க்க முடியாது.

பாழாப் போன ஆட்டோக்காரன் சீக்கிரமா வந்து தொலைச்சிட்டான். ச்சே...!


*************************************
"என்னங்க... உங்க அம்மா கூட எப்படி காலம் தள்ளுறதுன்னு தெரியல..!"

"அப்படி என்ன கொடுமை படுத்தினாங்க..?" "நான் என்ன சொன்னாலும்

ஒரு வார்த்தை கூட எதிர்த்து பேச மாட்டேன்கிறாங்க..!!

*************************************
என் மருமகள் அக்கிரமம் தாங்க முடியலை

என்ன பண்றா?

என்னைப் பார் சிரின்னு வாசல் கதவுல எழுதி அதுக்கும் மேலே நான் சிரிக்கிற மாதிரி
இருக்கிற போட்டோவை மாட்டி வச்சிருக்கா.

*************************************
உன் மாமியார் கிணற்றில் விழுந்தேபாது நீ பக்கத்தில் தான் நின்று
கொண்டிருந்தாயா

ஆமாம் அதுக்கு என்ன

நீ, ஏன் எதுவும் பண்ணவில்லை

டாக்டர் எதுக்கும் உணர்ச்சி வசப்பட கூடாதுன்னு சொல்லி இருக்கிறார்.
 
*************************************
 

மாமியார் முகத்ல அயன் பாக்ஸ் வெச்சு தேய்ச்சியா ஏன்?

முகத்துல சுருக்கம் விழுதுன்னு சொன்னாங்க அதான்.
---------------------------

நம்ப டைப்பிஸ்டை நிமிர்ந்து பார்க்காதவன் புதுசா வந்த கிளார்க்தான்!

அதிசயமாயிருக்கே!

காரணம். 

அவன்தான் அவ புருஷன்!
----------------------------------
உடம்புக்கு ஆயிரம் வியாதி வரத்தான் செய்யும் அதுக்காக இப்படி பயந்தா எப்படி?

நான் பயப்படறது நோய்க்கு இல்ல டாக்டர்,

உங்களுக்கு தான்.

*************************************

நர்ஸ்! பேஷண்ட்டுக்கு சுகர் இருக்கா?

இல்ல சார்.

பீ.பி இருக்கா

இல்லை சார்.

அட, ஆச்சர்யமா இருக்கே!

பேஷண்ட் செத்து அரை மணி ஆச்சு சார்!


*************************************

நோயாளி - 10 வருடமா எனக்கு ஞாபகமறதி இருக்கு டாக்டர்

டாக்டர் - ஏன் இவ்வளவு நாட்களாக தாமதாமக வருகிறீர்கள்.

நோயாளி - மறந்து போச்சு டாக்டர்.


*************************************

பூலோகமே எனக்கு சொர்க்கம்



மதுமதி: என் மாமியார் முன்னே மட்டும் என் புருஷனை அடிக்க மாட்டேன்
 
சுமதி: ஏன்?..
 
மதுமதி: என்னால ஒரே நேரத்துல ரெண்டு பேர அடிக்க முடியாது.

*************

 
(
செல்போன் கடையில்... கடைக்காரர் கிராமவாசியிடம்)

ரீசார்ஜ் பண்ணாமலே `லைப்' பூராவும் பேசலாம்னுதான் சொன்னோம். 

பேட்டரி சார்ஜ் பண்ணாமலே செல் பேசணுமன்னு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர்..

*************

நண்பர்-1: என் பையனுக்கு `செக்காலை' அதிபர் பொண்ணை கட்டி வச்சது தப்பாப் போச்சு!
 
நண்பர்-2: ஏன்,என்னாச்சு?
 
நண்பர்-1: எந்த நேரமும் அவளையே `சுத்திச் சுத்தி' வர்றான்.

--------------------------

ஆண்கள் நிரம்பிய கூட்டத்தில் பேச்சாளர் கேட்டார்,

''இங்கு தன மனைவியுடன் சொர்க்கம் போக விரும்புபவர்கள் கை தூக்குங்கள்.''

ஒருவனைத் தவிர அனைவரும் கை தூக்கினர்.பேச்சாளர் கேட்டார்,''

 ஏனய்யா,உனக்கு மட்டும் மனைவியுடன் சொர்க்கம் போக ஆசையில்லையா?''

'
என் மனைவி மட்டும் சொர்க்கம் போனால் போதும்'

''
ஏன்அப்படிச் சொல்கிறீர்கள்?''

'
என் மனைவி சொர்க்கம் போய் விட்டால்

 பூலோகமே எனக்கு சொர்க்கம் போல் தான் இருக்கும்.'
 #################

"சொத்துக்களை என் பேருக்கு இன்னும் மாத்தி எழுதல...''



ஆபரேஷன் செய்வதற்கு முப்பதாயிரம் ரூபாய் பீஸ் சரி டாக்டர், அதென்ன ப்ளஸ் முந்நூறு

அது, பாடியை வீட்டுக்கு எடுத்து போக ஆம்புலன்ஸ் வாடகை

**************************************

உங்களுக்கு ஜோசியத்துல நம்பிக்கை இருக்கா. .?

கண்டிப்பா இருக்கே.

அப்ப ஒரு ஆயிரம் ரூபா கடன் கொடுங்க.

அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ?

அடுத்த வாரம் லாட்டரில எனக்கு லட்ச ரூபாய் பரிசு விழும்னு ஜோசியர் சொல்லி இருக்காரே

**************************************

பார்பர் : சார், கொஞ்சம் முகத்தை திருப்ப முடியுமா?”

நபர் : அதுக்குள்ளே இந்த பக்கம் முடிஞ்சுதா?”

பார்பர் : இல்லை சார். எனக்கு இரத்தம்னா அலர்ஜி.

**************************************
டிராபிக் போலிஸ் :ரெட் சிக்னல் போட்டிருக்கே.. ஏன் நிக்காம போயிட்டு இருக்கே?”

நபர் :எனக்கு கண் தெரிஞ்சா நான் பார்த்திருக்க மாட்டேனா சார். 

ஆமா.. இதெல்லாம் கேக்கிறீங்களே நீங்க யாரு?”
 **************************************
நிருபர் : உங்க வருங்காலக் கணவர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?

நடிகை : நிகழ்காலக் கணவரை விட நல்லவரா இருக்கணும்னு தான்.

************************************************************************


டாக்டர் : தினமும் குளுக்கோஸ் சாப்பிடுங்க

மாயான்டி மாமா : அது கிடைக்கலேன்னா முட்டை'கோஸ்' சாப்பிடலாமா?

***********************************************************************
"என் கைவசம் 7 சீரியல் இருக்கு."

"
நடிக்கிறீங்களா?'

"
இல்ல..தினமும் பாக்குறேன்"

*********************************************************************

பையன்: எனக்கு வேலை இல்லைனு தெரிஞ்சும் எப்படி நம்ம கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்க..

பொண்ணு: பையன் என்ன பண்ணுறான்னு கேட்டாங்க,  

வயத்துல உதைக்குறானு சொன்னேன்... அதான்....

*********************************************************************

டாக்டர், எங்கப்பாவுக்கு இன்னும் பத்து நாள் கழிச்சி ஆபரேஷன் பண்ணுங்க...''
 

"ஏன்''
 
"
சொத்துக்களை என் பேருக்கு இன்னும் மாத்தி எழுதல...''

*************
 

உமா: ஆபீசுக்கு போகும்போது உன் கணவர் `குட்நைட்'ன்னு சொல்லிட்டுப் போறாரே?...எதுக்கு? 

 ரமா: அங்க போய் தூங்கத்தானே போறார்.

*************

 
பெரியவர்: படிக்கட்டில் தொங்கும் தம்பிகளா, உள்ளே வாங்கப்பா...

 
மாணவர்கள்: ஏன் பெருசு?...

 
பெரியவர்: பஸ்சுக்குள்ளே நாம ஏறினாலும் நம்ம மேல பஸ் ஏறினாலும் `டிக்கட்' வாங்கப் 


போறதென்னவோ நாமதானே?...

*************

எனக்கு நீச்சல் தெரியாதுங்கோ


ஆசிரியர்: காந்திஜியோட கடின உழைப்பால ஆகஸ்ட் 15ம் தேதி நமக்கு என்ன கிடைச்சது?
மாணவன்: விடுமுறை ?
**********************************************

நீ யாரோ ரெண்டு பேரோட ஊர் சுத்திட்டு இருக்கியாமே ?'
'
யாரோ உங்ககிட்டே ஒண்ணுக்கு ரெண்டா சொல்லியிருக்காங்க

**********************************************
சார் கள்ள நோட்டை எப்படி அடையாளம் கண்டுபிடிக்கிறதுன்னு உங்களுக்கு தெரியுமா ?'
தெரியாதே !
'
ரொம்ப நல்லதா போச்சு இந்த நூறு ருபாய்க்கு சேஞ்சு கொடுங்க !'

**********************************************
திரும்ப திரும்ப என் வீட்ல திருட்டு போகுது, சார்...
அப்ப திரும்பாம ஒரே பக்கமா இருந்துவிட வேண்டியதுதானே ?

**********************************************
கணவன் : என்னடி இது குழந்தை அழுதுக்கிட்டு இருக்கிறது

நீ பாட்டுக்கிட்டு சீரியல் பார்க்கிற..?

மனைவி : அட நீங்க வேற குழந்தையும் சீரியல் பார்த்து தான் அழுகுது

**********************************************

ஆசிரியர் : படிக்கற பசங்க ஒரு நாளைக்கு 7 மணி நேரம் தூங்கின போதும்

மாணவன் : அது எப்படி சார் முடியும். ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தானே காலேஜ்

**********************************************

கன்ட்ரக்டர் : படியில நிக்காதப்பா...!பஸ் உள்ள தான் கடல் மாதிரி இடம்
இருக்கே ...உள்ள வாப்பா...!
ஸ்டுடண்ட் : எனக்கு நீச்சல் தெரியாதுங்கோ...நான் கரையிலே நின்னுகிறேன்..


**********************************************


முதலாளி: இவ்வள்வு வேகமா காரை ஓட்டாதேப்பா, எனக்கு பயமா இருக்கு.

டிரைவர்: பயப்படாதீர்கள், கார் வேகமாய்ப் போகும்போதெல்லாம்
என்னைப் போலவே நீங்களும் கண்களை இறுக மூடிக்கொள்ளுங்கள்


**********************************************

வந்தவர்: ஏங்க அந்தப் பொடியனை வேலைய விட்டு எடுத்துட்டீங்க?

ஹோட்டல் முதலாளி: பின்ன என்னங்க, சாப்பிட வந்தவங்க "டிபன் ரெடியா?"ன்னு கேட்டா "நேத்தே ரெடி"ங்கறான்!

**************************************


அந்தக் கல்யாணத்துல ரொம்ப ஈ மொய்க்குது, ஏன் ?

ஏன் ?

அது ஜhம் ஜhம்னு நடக்கற கல்யாணம்

**************************************
எனக்கு தீபாவளிக்கு பருத்திப் புடவையும், வேலைக்காரிக்கு பட்டுப்புடவையும்

வாங்கியிருக்கீங்களே .. . ஏன் ?

இதோ பாரு கமலா உனக்கு எது கட்டினாலும் எடுப்பா இருக்கும்.

ஆனா அவளுக்கு பட்டு புடவை மட்டும்தானே நல்லாயிருக்கு அதான

**************************************

 ஜோன்ஸ் : தாம்பரம் ரெண்டு டிக்கெட் கொடுங்க.
கண்டக்டர் : இன்னொரு டிக்கெட் யாருக்கு?
ஜோன்ஸ் : ரெண்டுமே எனக்குத்தான். ஒன்னு தொலைஞ்சி போனா இன்னொன்னு உதவுமே.
கண்டக்டர் : அதுவும் தொலைஞ்சி போச்சுனா?
ஜோன்ஸ் : ஒன்னும் பிரச்சினை இல்ல. என்னோட பஸ் பாஸ் பத்திரமா இருக்கு.

**************************************
நர்ஸ் - ஆபரேஷன் தியேட்டர்ல வந்து கூட எதுக்கு டாக்டர் என்னை சில்மிஷம் பண்றீங்க

டாக்டர் - புரியாமல் பேசாதே. .. பேஷண்ட்டுக்கு மயக்க மருந்து வேலை செய்யிதான்னு 

 உன் மூலமா டெஸ்ட் பண்ணினேன், அவ்வளவுதான்

சாமிக்கு மொட்டை போடுறதா




எங்கம்மாவுக்கு சர்க்கரை வியாதி இருப்பது என் மனைவிக்கு இன்னும் தெரியாது..
தெரிஞ்சா கவலைப் படுவாங்களா..?
இல்லே.. தினம் ஒரு ஸ்வீட் செஞ்சு வெறுப்பேத்துவா

********************************************
ஜட்ஜ் : சாமி தலையிலிருந்து கிரிடத்தை திருடினாயா?
திருடன் : ஆமா எஜமான் சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டேன்

********************************************
டாக்டர். கொஞ்ச நாளா என் கணவருக்கு தூக்கத்துல பேசற வியாதி இருக்கு...

பகல்ல பேசறதுக்கு கொஞ்சம் பர்மிஷன் கொடுத்தா சரியாய் போயிடும்.
********************************************
ஒருவன்: டேய்! ஏன்டா பேணை ஆப் பண்ணிட்ட?

மற்றொருவன்:எங்கப்பாதான் சொல்லி இருக்காரு, வியர்வை சிந்தி சாப்பிடனும்ன்னு!

********************************************
ஒருவன் : நீங்களே கஷ்டத்துல இருக்கீங்க. எதுக்கு கல்யாணம் வேற பண்ணிக்கிறீங்க...?
மற்றொருவன் : கஷ்டத்தோட கஷ்டமா இருக்கட்டுமேன்னுதான்.
********************************************
காலியான கேஸ் சிலிண்டரை எடுத்துக் கெண்டு டாக்டரை பார்க்க போகிறார் ஏன்?

கேஸ் பிராப்ளம் வந்தால் டாக்டர் தன்னை வந்து பார்க்க சொன்னாராம்.
********************************************

என் அப்பா, அண்ணனை நெனச்சாதான் பயமா இருக்கு டார்லிங் !'

'
ஏன்... நம்மைப் பிரிக்க முயற்சி பண்றாங்களா ?'

'
இல்லை... சேர்க்க முயற்சி பண்றாங்க !'

**********************************************

Saturday, March 17, 2012

சுத்தீகரிக்கப்பட்ட சுகாதாரமான தண்ணீர் கலந்த பால் கிடைக்கும்



 
"காலம் ரொம்ப கெட்டுப்போச்சுனு எப்படிச் சொல்ற?"
"பின்ன, பால்கடை வாசல்ல 'இங்கு சுத்தீகரிக்கப்பட்ட சுகாதாரமான தண்ணீர் கலந்த பால் கிடைக்கும்'னு எழுதியிருக்காங்களே!"


"அந்த கட்சிக்குள்ள ஏகப்பட்ட கோஷ்டிங்க இருக்குன்னு எப்படிச் சொல்றே..? "
 
"ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்த தலைவரை, சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கச் சொல்லி ஒரு கோஷ்டி போராடுதே..."


பயங்கர ஸ்பீடா சைக்கிள்ல வந்த ஒருத்தர் தன் நண்பன்கிட்ட சொன்னார்... "நேத்து என்
மனைவிக்கும் எனக்கும் பயங்கர சண்டை. கோவத்துல இப்பதான் மிதிமிதின்னு மிதிச்சிட்டு வர்றேன்."
 
"உன்னோட மனைவியையா?" என்று ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தார் நண்பர். "இல்ல சைக்கிள.." என்றார் சொன்னவர்!


"அந்த சாமியார் ஏன் தன்னோட சீடனை வேலையை விட்டு நீக்கிட்டாரு..?"
"கேமரா செல்போன் வச்சிருந்தானாம்..!"

"எங்க ஆபீஸ்ல புதுசா வேலைக்குச் சேர்ந்தவர், என்ன செய்யறதுன்னே தெரியாம திருதிருன்னு முழிச்சிக்கிட்டு இருந்தார்..."
"அப்புறம்..?"
"நான்தான் தட்டிக் கொடுத்து தூங்க வச்சேன்..!"

ஆக்ஸிடண்ட் ஆகியே அரை மணி நேரந்தான் ஆச்சு





தலைவர் எதுக்காக எடை பார்க்கும் மிஷினை பக்கத்துலயே வச்சிருக்காரு?"

"அவரைத் தேடி வர்றவங்க கிட்டே அவரோட வெயிட்டை காண்பிக்கவாம்!"

"பல் செட்டை எடுத்து எதுக்காக அடிக்கடி என்கிட்டே காட்டறீங்க?"

"அடிக்கடி பல்லைக் காட்டினா உங்ககிட்டே காரியம் நடக்கும்னு வெளியே பேசிக்கிட்டாங்க!"

டாக்டர் : ஒரு மணி நேரம் முன்னாடி கொண்டுவந்திருந்தா, பேஷண்டை காப்பாத்தி இருக்கலாம் !

மற்றவர்: ஆக்ஸிடண்ட் ஆகியே அரை மணி நேரந்தான் ஆச்சு டாக்டர்.

டாக்டர் :.????


"என்ன கபாலி... மாப்பிள்ளை கோலத்தில திருட வந்திருக்கே?"
"தாலி கட்டியதும் தொழிலுக்கு வந்துட்டேன் சார்!"

"என்னய்யா இது... அமலாபாலுக்காக வட இந்தியாவுல யாரோ உண்ணாவிரம் இருக்காங்களாமே..?"
"தலைவரே, அவங்க உண்ணாவிரதம் இருக்கிறது அமலா பாலுக்காக இல்லை... லோக் பாலுக்காக!"


ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...