Total Pageviews

Saturday, June 30, 2012

நாயை சரியாப் பாக்கல்லை, மறுபடி கூப்பிடு”



பிரபல நடிகையைக் கல்யாணம் செய்துகொண்ட அவன், மனைவி மற்றும் நாயுடன் காரில் ஜாலியாக ஒரு ரைட் போகப் புறப்பட்டான். 

டிரெஸ்ஸிங் டேபிள் முன்னால் உட்கார்ந்திருந்த மனைவியை அவன் அவசரப் படுத்தினான்.
 

“ம்ம்ம்ஹூம்…. நேரமில்லை, போய்ட்டு வந்ததும் எனக்கு ஒரு அவசர பிஸிநஸ் மீட்டிங் இருக்கு…. உடனே புறப்படு”
 

நடிகை போட்டது போட்டபடி அப்படியே புறப்பட்டாள்.
 

கார் ஓட்டிப் போகும்போது யாராவது தவளையைப் பார்த்து பிரேக் போடுவார்களா?
 

அவன் போட்டான்.
 

போட்டது மட்டுமில்லை, இறங்கி அதைத் தூக்கி சாலையின் ஓரத்தில் விட்டான். அது ஒரு அபூர்வ சக்தி படைத்த தவளை என்பது அவனுக்கு அதுவரை தெரியாது. தவளை அவனை நன்றியுடன் பார்த்தது.
 

“இதற்கு நன்றியாக நீ கேட்கும் ஒரே ஒரு ஆசையை என்னால் பூர்த்தி செய்ய முடியும், கேள்” என்றது.
 

ஆனந்த அதிர்ச்சி அடைந்த அவன்,
 

“அடுத்தவாரம் ஒரு டாக் ஷோ இருக்கு. அதில என் நாய் ஜெயிக்கணும்” என்றான்.
 

“கூப்பிடு நாயை, நான் பார்க்கணும்” என்றது தவளை பர்ஸனல் மேனேஜர் மாதிரி.
 

நாய் வந்தது.
 

“சான்ஸே இல்லை. சொறிநாய் மாதிரி இருக்கு, இதையா வளர்க்கறே?”
 

ஏமாற்றமடைந்த அவன்,
 

“சரி…. அதே வாரம் ஒரு அழகிப் போட்டி இருக்கு. அதில என் மனைவி ஜெயிக்கணும்” என்றான்.
 

“கூப்பிடு அவளை”
 

வந்தாள்.
 

தவளை யோசித்தது.
 

“என்ன யோசிக்கறே?”
 

“நாயை சரியாப் பாக்கல்லை, மறுபடி கூப்பிடு”

---------------------------------------------

Thanks to livingextra.com

ரத்தக் கொதிப்பு



கோர்ட்டில் அந்த விவாக ரத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. 

பிரதிவாதியான மனைவி தன் கணவர் தன் மேல் அபாண்டமாகப் பழி போட்டு இந்த விவாகரத்தைக் கேட்டிருப்பதாக வாதாடியதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பமாயிற்று.
 

அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார்.
 

“அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை?”
 

“அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க”
 

“ப்ச்.. உங்களுக்கிடையில் என்ன தகராறு?”
 

“எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?”
 

“அடாடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது”
 

“தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடம்”
 

“கருத்து வேறுபாடு ஏதாவது உண்டா?”
 

“அவரு கருப்புதாங்க. நானும் கறுப்புதான… அதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க”
 

“வீட்டுக்காரரோட என்ன சண்டை?”
 

“வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை, மாசம் ஒண்ணாம் தேதி வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கப் போயிடறாரு”
 

இதற்கு மேல் அவரால் தாங்க முடியவில்லை.
 

“எதுக்காக விவாகரத்து கேட்கிறார்” என்று அலறி விட்டு இருமினார்.
 

“ஓ..அதுவா… என்னோட பேசறப்ப எல்லாம் ரத்தக் கொதிப்பு வந்துடுதாம்.
 

நீங்க நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்க…
 

உங்களுக்கென்ன ரத்தக் கொதிப்பா வந்திரிச்சு?
 

இது அபாண்டம்தானே?”

Thanks to livingextra.com

ஒன் அவர்ல ரெடியாய்டும்”



ஒரு ஆள் வீட்டை ஒழிக்கும் போது பதினைந்து வருஷத்துக்கு முந்தைய தையற்கடை ரசீது ஒன்று கிடைத்ததாம். நாளைக்கு ஆய்டும், 

நாளான்னிக்கு ஆய்டும் என்று இழுத்தடித்ததில், சட்டையை வாங்காமலே மறந்து போனது ஞாபகம் வந்தது அவருக்கு.

தையற்காரரை கிண்டல் அடிப்பதற்காக அதை எடுத்துக் கொண்டு தையற்கடைக்குப் போயிருக்கிறார்.

“என்னப்பா, இப்பவாவது ரெடியாச்சா?” என்று ரசீதைக் கொடுத்திருக்கிறார்.

அதை வாங்கிப் பார்த்த தையற்காரர் சொன்னது அவருக்குத் தலை சுற்றியதாம்,

“காஜா எடுக்க அனுப்பியிருக்கேன். வேறே ஏதாவது வேலை இருந்தா போய்ட்டு வந்துடுங்க, ஒன் அவர்ல ரெடியாய்டும்” 

ஏதும் விசேஷம் உண்டா?”


என்ன முனியா, நான் ஊர்லே இல்லாதப்போ ஏதும் விசேஷம் உண்டா?”
 

“பெருசா ஒண்ணுமில்லைங்க. நம்ம நாய் செத்துப் போச்சு”
 

“அடக் கடவுளே… த்சோ..த்சோ.. நல்லாத்தானேடா இருந்திச்சு. எப்படி திடீர்னு செத்துச்சு?”
 

“கெட்டுப்போன மாட்டுக்கறியை தின்னுடிச்சுங்க”
 

“மாட்டுக் கறி எங்கேடா கிடைச்சுது அதுக்கு?”
 

“நம்ம வீட்லதாங்க”
 

“நாமதான் மாட்டுக் கறி திங்கிறதில்லையேடா”
 

“நாம திங்கிறதில்லைங்க. நெருப்புல அவிஞ்சிபோன மாடு மூணு நாளா கெடந்து கெட்டுப் போச்சுங்க. அதத்தான் நாய் தின்னிடிச்சு”
 

“நம்ம மாடா?”
 

“ஆமாங்க”
 

“ஐயய்யோ எப்பிடிடா எரிஞ்சி போச்சு?”
 

“மாட்டுக் கொட்டாய் தீப்பிடிச்சிடிச்சுங்க”
 

“ஐயய்யோ… எப்பிடிடா?”
 

“வீடு எரியும் போது நெருப்பு பறந்து வந்து கொட்டாயில விழுந்திடுச்சு”
 

“வீடு எப்படிடா எரிஞ்சது?”
 

“குத்து விளக்கு விழுந்து தீ பரவிடிச்ச்சுங்க”
 

“குத்து விளக்கு ஏத்தற பழக்கமே நம்ம வீட்ல கிடையாதேடா?”
 

“அதுக்காக செத்தவங்க தலை மாட்டிலே விளக்கு வெக்காம இருக்க முடியுமா?”
 

“யார்ரா செத்தது?”
 

“உங்க அம்மா”
 

“எப்படி செத்தாங்க”
 

“தூக்கு போட்டுக்கிட்டு”
 

“ஏன்?”
 

“அவமானத்திலதான்”
 

“என்னடா அவமானம்?”
 

“வீட்ல இருக்கிற பொண்ணு ஒருத்தன் கூட ஓடிப்போனா ஊரு காறித் துப்பாதா?”
 

ஓடிப் போனது யாரு?”
 

“உங்க பொண்டாட்டிதான்”
-----------------------------------------------------
Thanks to livingextra.com

என் தம்பிக்கு”



செட்டியாரே, ரெண்டு வில்ஸ் குடுங்க”
 

“டேய், இந்த சின்ன வயசில உனக்கு இந்தப் பழக்கமெல்லாம் வேறயா?”
 

“சீச்சீ… இது எனக்கில்லைங்க”
 

“அதான பார்த்தேன், யாருக்கு வாங்கிட்டுப் போறே?”
 

“என் தம்பிக்கு”

---------------------------------
ஹலோ, அண்ணாமலை இருக்காரா?”
 

“ஐய்யா குளிக்கறாரு”
 

“சாரிங்க, ராங் நம்பர்”

----------------------------------------
 

பரிட்சையிலே தெரிஞ்ச கேள்வியை எல்லாம் முதல்லே எழுதணும்.
தெரியாத கேள்வியை கடைசீலே எழுதணும்”

”பதிலை எல்லாம் எப்போ எழுதணும் டீச்சர்?”
-----------------------------------

என் மனைவி எங்கயிருந்தாலும் வந்துடுவா.


பொருட்காட்சியில்
 

ஒருவர் : என்னுடைய மனைவியை ரொம்ப நேரமாத் தேடிக்கிட்டுயிருக்கேன். என்கூட கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்க முடியுமா?

பெண் : அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

ஒருவர்: நான் வேறு பெண்கள்கிட்ட பேசினாலே என் மனைவி எங்கயிருந்தாலும் வந்துடுவா.
----------------------------------

போலீஸ் அதிகாரி: இப்படி மொட்டையா வந்து புகார் கொடுத்தா ஏத்துக்க மாட்டோம்...

புகார் கொடுத்தவர்: என்ன ஸார் அநியாயமா இருக்கு... அப்ப என் தலையில முடி வளர்ற வரைக்கும் நான் புகாரே கொடுக்க முடியாதா?!
----------------------------
பையன்: பாட்டி! நா ஓட்ட பந்தயத்தில கலந்துக்க போறேன். ஆசீர்வாதம் பண்ணுங்க!

பாட்டி: பார்த்து மெதுவா ஓடுப்பா... வேகமா ஓடி கைய கால ஒடிச்சிக்காதே!!

---------------------------------
என்ன சார், இரயில் பிரயாணம் எல்லாம் சௌகர்யமா இருந்ததா?”
 

“இல்லைங்க, upper Berth குடுத்துட்டாங்க. ரொம்பக் கஷ்டமாப் போச்சு”
 

“Lower Birth" காரங்க கிட்டே சொல்லி மாத்திக்க வேண்டியதுதானே?”“
 

இந்த ஐடியா எனக்கு வராமப் போயிருக்குமா,
 

கீழ் பெர்த்திலே யாருமே இல்லை. யாரைக் கேக்கிறது?”
-------------------------------------------

“இந்தாப்பா, கொஞ்சம் சாம்பார் கொண்டா”

“அறிவு இருக்கா… யாரைப் பாத்து சாம்பார் கேக்கறே?”

“சாரி சார். இங்கேதான் இடம் காலியா இருக்கே… உட்காருங்களேன்; ஏன் அங்கே நிக்கறீங்க?”

“நான் உட்கார்ந்துட்டேன்னா "டேபிளை" எல்லாம் எவன்ய்யா துடைப்பான்?”

----------------------------------------------

சொந்தக்காரங்க


ஒருத்தி : ஏண்டி  மூஞ்சிய துப்பட்டா போட்டு மூடுற !
                    யாரும் உன் அழகுல மதி மயங்கி வந்துருவாங்கன்னா !

மற்றொருத்தி:   யாரும் என்னை பார்த்து பயந்து மயங்கி விழுந்துருவாங்கன்ணோ
                                பயத்துல மூஞ்சிய துப்பட்டா போட்டு மூடிருக்கேன் !
--------------------------------------------------------
கணவனும் மனைவியும் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தார்கள். அங்கிருந்த குரங்குகளைப் பார்த்து,

கணவன் : உன்னுடைய சொந்தக்காரங்க இங்கே இருக்காங்க!

மனைவி : ஆமாம். என்னுடைய மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார்
________________________________________

Friday, June 29, 2012

படிச்ச முடிச்ச உடனே வேலை கிடைச்சிடுச்சு.


கணவன் - மனைவி
 

மனைவி:   எதுக்கு அடிக்கடி கிச்சன் ரூமுக்கு போயிட்டு வர்றிங்க.
 

கணவன்:டாக்டர் தான் அடிக்கடி சுகர் இருக்கான்னு செக்கப் பண்ணச் சொன்னார்!!!
-----------------------------------------

Wife : உங்கள பார்த்து கிட்டே இருக்கனும் போல இருக்குங்க!
 

Husband : அப்பவே ஜோசியர் சொன்னாரு கலயாணத்துக்கு அப்புறம் "சனி பார்வை" உங்க மேலேயே இருக்கும்னு..
------------------------------------------

ரயிலில் டி.டி.ஆர் கேட்டார்: என்னப்பா பழைய டிக்கெட்டை வச்சுக்கிட்டு பயணம் செய்யறே?
 

ஏன், இந்த ட்ரெயின் மட்டும் புதுசா என்ன?
---------------------------------------
கடவுள்: என்ன வரம் வேண்டும் கேள்.
 

பையன்: எனக்கு ஒன்றும் வேண்டாம். என் அம்மாவிற்கு மட்டும் ஒரு நல்ல அழகான பொண்ணு மருமகளா வரவேண்டும்.
 

கடவுள்:  !!!!
--------------------------------------------------
ஒரு பொறியியல் கல்லூரி வாசல் முன் தம் பிள்ளையை படிக்க வைக்க வந்த பெற்றோர்...

பெற்றோர் : இந்த காலேஜ் நல்ல காலேஜா?
 

வாட்ச்மேன் : ரொம்ப நல்ல காலேஜ். இங்க படிச்சா வேலை ரொம்ப ஈசியா கிடைக்கும்.
 

பெற்றோர் : அப்படியா!!

வாட்ச்மேன் : ஆமா. நானும் இந்த காலேஜ்ல தான் எஞ்சினியரிங் படிச்சேன். படிச்ச முடிச்ச உடனே இங்கேயே இந்த வேலை கிடைச்சிடுச்சு.

ஏற்கனவே 14 சூடு வாங்கியிருக்கேன்



ஐய‌ர் : மாப்பிள்ளை சீக்கிர‌ம், ந‌ல்ல‌ நேர‌ம் முடிய‌ற‌துக்குள்ள‌ தாலிய‌ க‌ட்டுங்க‌.
 

மாப்பிள்ளை : தாலி க‌ட்டிட்டாலே ந‌ல்ல‌ நேர‌ம் முடிஞ்ச‌ மாதிரிதானே.
----------------------------

காதலி : நான் காதலிக்குறது அப்பாவுக்கு தெரிஞ்சு போச்சுன்னா எங்க அப்பா கையில சூடு வைப்பார்.
 

காதலன் : அப்படியுமா செய்வாங்க, சும்மா மிரட்டுவார்.
 

காதலி : நான் என்ன பொய்யா சொல்றேன்? ஏற்கனவே 14 சூடு வாங்கியிருக்கேன் இங்கே பாரு.

-------------------------------------

தந்தை: எப்பவும் உன்னை முட்டாள்னு சொல்ற உங்க மிஸ், நான் கணக்கு போட்டு கொடுத்தப்புறம் என்ன சொல்றாங்க?
 

மகன்: இப்ப முட்டா பய மகனேன்னு திட்ட்ரங்க டாடி.
தந்தை: ?!?!?!

----------------------------------------------
மனைவி: இந்த வாரம் சினிமா பார்த்தோம், அடுத்த வாரம் ஷாப்பிங் போகலமாங்க?
 

கணவன்: தாராளமா போகலாம். ஆனால் அதற்கு அடுத்த வாரம் 
கண்டிப்பா சிவன் கோவிலுக்கு போகணும்.
 

மனைவி: ஏன்?
 

கணவன்: பிச்சை எடுக்கத்தான்.
---------------------------------------------------------

சிறுவன்: ஏ‌ம்பா... என் மார்க் ஷிட்டில் கையெழுத்து போடாமல் கைநாட்டு வைக்கிறீர்க‌ள்?
 

தந்தை: நீ வாங்கியுள்ள மார்க்குக்கு உன் அப்பா எழுத படிக்க தெரிந்தவர் என்று ஆசிரியர்களுக்கு     தெரிய வேண்டாம்!
-----------------------------------

அப்போ ப‌ல்பொடி



செந்தில் : அண்ணே எனக்கு ஒரு சந்தேகம்.
 

கவுடமணி : சொல்லுடா கப்ளிங் தலையா.
 

செந்தில் : மொளகா பொடிஎதுல இருந்து வருது அண்ணே?
 

கவுடமணி : மொள‌காயிலிருந்து
 

செந்தில் : ம‌ஞ்ச‌ள் பொடிண்ணே?
 

கவுடமணி : ம‌ஞ்ச‌ள்ள‌ இருந்து.
 

செந்தில் : அப்போ ப‌ல்பொடிண்ணே?
 

கவுடமணி : ? ! ?!

குரங்கு கூட வாக்கிங்கா ?


நடிகர் பார்த்திபன்: என்ன காலையில குரங்கு கூட வாக்கிங்கா?
 

நடிகர் வடிவேலு: ஹலோ இது குரங்கு இல்லை.நாய்
 

நடிகர் பார்த்திபன்: நான் நாய்கிட்ட கேட்டேன்.
 

நடிகர் வடிவேலு: அப்ப சரி!!!

Thursday, June 21, 2012

சனிப்பெயர்ச்சி குருப்பெயர்ச்சி அப்படின்னா என்னங்க



டாக்டர், என்னால சரியா இருமக்கூட முடியலை.

இந்த டானிக்கை சாப்பிடுங்க.

சாப்பிட்டா சரியாப் போயிடுமா? டாக்டர்,

நல்லா இருமலாம்.
-----------------------------------------------------

ஒருத்தர்: டாக்டர்.. உங்க [Certificate] சர்ட்பிக்கெட்ட கொடுங்க..

டாக்டர் பயந்து போய் : ஏன்?  எதற்க்கு ?

நம்மாள் : நான் 1 வாரம் ஆபீஸ்க்கு லீவு..

அவங்க டாக்டர் சர்ட்பிக்கெட் கேட்குறாங்க.. டாக்டர் : !!!
---------------------------------------------------
டாக்டர்: நீங்க பிழைக்கிறது கஷ்டம்...

நோயாளி: ஏன் டாக்டர்?

டாக்டர்: ஸ்டெதாஸ்கோப்புல சங்கு சத்தம் கேட்குதே
--------------------------------------------------

கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காது  டி.

மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.

கணவன் : ???

-----------------------------------------------
மனைவி : ஏங்க சனிப்பெயர்ச்சி குருப்பெயர்ச்சி அப்படின்னா என்னங்க..

நம்மாள் : நீ ஊருக்குப்போனா அது சனிப்பெயர்ச்சி..

போயிட்டு அப்படியே உன்தங்கையையும் கூட்டிக்கிட்டு வந்தா அதான்
குருப்பெயர்ச்சி..
------------------------------------------------------


Monday, June 18, 2012

பேட்டரி லோ - Low Battery



தோழி 1 : அடிக்கடி 'லவ் லெட்டர்' தர்ற உன் லவ்வரை ஏண்டி சோம்பேறின்னு சொல்லுற?

தோழி 2 : அட போடி, அது எல்லாம் ஜெராக்ஸ் காப்பிடி!

---------------------------

தோழி 1 : என்னடி, எப்ப பார்த்தாலும் ஒரு கழுதை உன் பின்னாடியே வந்துட்டு இருக்கு?

தோழி : 2 என் எ‌தி‌ர்‌த்த வீட்டு பைய‌ன் குடுத்த லவ் லெட்டரை இதுகிட்ட தா‌ன் தின்ன கொடுத்தேன். அதா‌ன்... அவன மாதிரியே இதுவும் பின்னாடியே வருது

-------------------------------------------

 பொண்ணு - என்னோட மொபைல் எப்பவுமே என்னோட அம்மா கையில்தான் இருக்கும்.

பையன் - அய்யோ, நான் போன் பண்றப்ப என்னோட பெயர் வருமே...கண்டுபிடிச்சுட்டா...?

பொண்ணு -உன்னோட பெயரை நான் 'பேட்டரி லோ' அப்படின்னு ஸ்டோர் பண்ணி வச்சிருக்கேன். உன்னோட போன் வந்தா அம்மா போனை என்கிட்ட கொடுத்து சார்ஜ் போட சொல்வாங்க. நான் ரூமுக்குள்ள போய் உன்கிட்ட பேசுவேன்..எப்பூடி...!
---------------------------------------
மனைவி: என்னங்க அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே அவருதான் என்னை பொண்ணு பார்க்க வந்தாரு. நான் பிடிக்கலைன்னு சொன்னதுனால அதை நினைச்சே தண்ணியடிக்க ஆரம்பிச்சுட்டாரு.

கணவன்: அவன் கொடுத்து வச்சவன்... அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமா கொண்டாடுறா

Thanks to One India.com

கொடுத்து வச்சவண்டா நீ!



தோழி 1: என்னாச்சுடி, உன் உதடு இப்படி வீங்கி இருக்கு?

தோழி 2: தேளுக்கு முத்தம் கொடுத்தேன், கொட்டிடுச்சு

தோழி 1: லூசாப்பா நீ, யாராவது தேளுக்கு முத்தம் கொடுப்பாங்களா?

தோழி 2: நீ வேற, அது என் மாமியாரைக் கொட்டிய சந்தோஷத்துல அதுக்கு முத்தம் கொடுத்தேன். என்னையும் கொட்டிடுச்சு

------------------------------------------------------

நோயாளி : டாக்டர் எனக்கு தற்கொலை பண்ணிக்கணும் போல ‏இருக்கு.

டாக்டர் : அதெல்லாம் கூடாது.. ரொம்ப தப்பு. அப்புறம் நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்?


-----------------------------------------

கணவன்: ரொம்ப நேரமா காலெண்டர் பாக்கிறயே அப்படி என்னப்பாக்குற ?

மனைவி: பல்லி விழும்பலன்

கணவன்: கொண்டா.. நான்பாக்குறேன்... அதுசரி... பல்லி எங்க விழுந்தது ?

மனைவி: நீங்க சாப்பிட்டசாம்பார்ல விழுந்துருச்சிங்க

--------------------------------------------------

ஆசிரியர் : யார் ஒருவரால் தன்னுடைய வார்த்தைகளை புரியவைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...

மாணவர்கள்: புரியல சார்...

------------------------------------------------
தோழி 1 : உன் கணவரை எதுக்கு எடக்கு மடக்கா திட்டினே?

தோழி 2 : நான் போன் பண்ணினா நாய் குரைக்கிற மாதிரி செல்போன்ல ரிங்டோன் செட் பண்ணி வெச்சிருக்கார் அதான்

-----------------------------------------------

நண்பன் 1: என்னடா உனக்கு கல்யாணம் ஆயிருச்சா?

நண்பன் 2: கல்யாணம் ஆகி தலை பிரசவத்துல என் மனைவி இறந்து போயிட்டாடா!

நண்பன் 1: கொடுத்து வச்சவண்டா நீ! ஆனால் என் மனைவி இன்னும் உயிரோடதான் இருக்கா!


Thanks to One India.com

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...