Total Pageviews

Monday, December 31, 2012

மனைவியின் மொபைல் எண்




தன் மனைவியின் மொபைல் எண்ணை கணவன் எப்படியெல்லாம் பதிவு செய்து வைத்திருப்பான்?

1.திருமணமான புதிதில் - MY LIFE

2.ஒரு வருடம் கழித்து  - MY WIFE

3.இரண்டு வருடங்களுக்கு பிறகு - HOME

4.ஐந்து வருட முடிவில் - HITLER

5.பத்து வருஷம் கழித்து - WRONG NUMBER (SMS)

6. 20 வருடங்கள் கழித்து - WRONG MEMBER (MSG.)

Thursday, December 13, 2012

இதுக்கு பரிகாரமே இல்லியா,

'

ஜோதிடர் : கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும் கடைசி வரை சேர்ந்து நல்லா இருப்பீங்க..
கணவன் : இதுக்கு பரிகாரமே இல்லியா, ஜோதிடரே?

"என்னங்க சாப்பாடு நல்லாருக்கா... என் சமையலைப் பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லமாட்டேன்கிறீங்களே?"
"எல்லாப் பிரமாதமா இருக்குடீ... இதோ ஒரு அயிட்டம் இருக்கு பாரு.. இது ஒண்ணுதான் கொஞ்சம் 'உப்பா' இருக்கு!"
"நாசமாப் போச்சு. அது 'உப்பு'தாங்க!"


""உங்க மனைவிக்குப் பட்டுப்புடவை வாங்கித் தந்தீங்களாமே, காஞ்சிப்பட்டா? ஆரணிப்பட்டா?''
""கடன் பட்டு''


""ஆபரேசனுக்கு பின்னாடி கண் நல்லாத் தெரியும்னு டாக்டர் சொன்னார்''
""நல்லாத் தெரியுதுங்களா?''
""பின்னாடி எங்க தெரியுது. இப்பவும் முன்னாடிதான் தெரியுது''

அவன்தான் என்னை மதிக்கிறதில்லை



'உங்க டைவர்ஸுக்கு என்ன காரணம்னு கேட்டதுக்கு உங்க கணவர்,
 நீங்க அவரை மதிக்கிறதே இல்லைன்னு சொல்றாரே...?''
மனைவி:''சுத்த பொய். அவன்தான் என்னை மதிக்கிறதில்லை...!''


கணவன்: ''இனிமே நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது!''
மனைவி: ''பெரிசா சொல்றீங்க... ஆனா, நான் அடிக்கும்போது நாலு ஊருக்குக் கேட்கிற மாதிரி கத்தறீங்களே?''


மனைவி:''என்னங்க! எனக்கு இன்றைய ராசி பலன்ல 'கணவர்மீது அன்பு செலுத்துவீர்னு போட்டிருக்குங்க!''
கணவன்''இருக்காதா பின்னே... எனக்கு இன்னிக்கு சம்பள நாளாச்சே!''


'கல்யாணம் ஆன நாளிலேருந்து ஒரு நாள்கூட என் மனைவி எங்கிட்டே, 'அதை வாங்கித் தாங்க... இதை வாங்கித் தாங்க'ன்னு நச்சரித்ததே இல்லை!''
''அப்படியா?''
''கிரெடிட் கார்டு மட்டும் வாங்கித் தரச்சொல்லி அவ வெச்சுக்கிட்டா!''


கணவன்' நிஜமாதான் சொல்றீங்களா டாக்டர்? என் மனைவியைக் காப்பாத்த வழியே இல்லையா...?''
டாக்டர்: ''யோவ், உனக்கு இதைக் கேக்க கேக்க சந்தோஷமா இருக்கலாம்...
அதுக்காக நான் எத்தனை தடவை திரும்பத் திரும்ப சொல்லிகிட்டு இருக்கறது..?''


டாக்டர்:''தினமும் வெறும் வயிற்றில் காலையில் வெந்நீர் குடிக்கணும்''
''இப்பவும் வெந்நீர்தான் டாக்டர் குடிக்கிறேன்.
என்ன?
என் மனைவிதான் அதை காபினு சொல்கிறாள்''

சிரிப்புகள் பலவிதம்


*  ஓயாமல் சிரிப்பவன்- பைத்தியக்காரன்

* ஓடவிட்டு சிரிப்பவன்- வஞ்சகன்

* இடம்பார்த்து சிரிப்பவன்- எத்தன்

* குழைந்து சிரிப்பவன்- கோமாளி

* இன்பத்தில் சிரிப்பவன்- ஏமாளி

* கண்பார்த்துச் சிரிப்பவன்- காரியவாதி

* யாரும் காணாமல் சிரிப்பவன்- கஞ்சன்

* கற்பனையில் சிரிப்பவன்- கவிஞன்

* வெற்றியில் சிரிப்பவன்- வீரன்

* நினைவோடு சிரிப்பவன்- அறிஞன்

தினமணி

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Friday, December 7, 2012

பேங்க்ல அக்கவுண்ட்டே இல்லடா"



என் உயிரைக் காப்பற்றிய நர்சையே நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்."
"எப்படிக் காப்பாத்தினா?"
"ஆபரேசன் ரூமிலேயிருந்து பின்வழியா என்னைத் தப்பிச்சிப் போக வச்சது அவதான்!"
----------------------------------

டீச்சர்: உன்கூட பிறந்தவங்க எத்தனை பேர்?
மாணவன்: 96 பேர்...
டீச்சர் : என்னடா சொல்லுற...எப்படி இது சாத்தியம்?
மாணவன்: ஐய்யோ டீச்சர்.. நான் கவர்மென்ட் ஆஸ்பிடல்ல என்  கூட  பிறந்தவங்களை  சொன்னேன்  ..

----------------------

நீதிபதி: ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க?
கணவன்: 6 மாசமா அவ என்கிட்டே பேசுறதே இல்லை
நீதிபதி: நல்லா யோசிச்சுப் பாருங்க! இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்ங்க..
---------------------------------


தோழி1  :உன்னைப் பார்த்ததும் உன் புருசன் பேய் அறைந்தவர்
மாதிரி ஏன் திருதிரு வென முழிக்கிறார்..
தோழி :2 :ஓ அதுவா நான் மேக்கப்பை கலைச்சிட்டேன் அதுதான் 
---------------------.


அம்மா : இன்னிக்கு யார் என் பேச்சைக்கேட்டு ஒழுங்காக இருக்காங்களோ
அவங்களுக்கு நானொரு பரிசு தரப்போறேன்
பிள்ளைகள் : போம்மா இந்த விளையாட்டுக்கு நாங்கள் வரவில்லை
எப்பவும் அப்பாதான் ஜெயிக்கிறார்
-------------------------


"என்னடா ரொம்ப கவலையா இருக்கே?" "பின்ன என்னடா? அந்த பேங்க்ல லட்சக்கணக்கில் பணம் இருக்கு.. ஆனா அவசரத்திற்கு எடுக்க முடியலையே?" "ஏன் ஏடிஎம் கார்ட் தொலைஞ்சு போச்சா.. இல்ல செக் புக் இல்லையா?" "நீ வேற எனக்கு அந்த பேங்க்ல அக்கவுண்ட்டே இல்லடா"
------------------------


சாமி… நீங்க சொன்னபடி என் மனைவியைத் தூக்கியெறிந்துட்டேன்…?”
அடப்பாவி… நான் எப்ப உன் மனைவியைத் தூக்கியெறியச் சொன்னேன்?”
நீங்கதானே சாமி கவலைகளைத் தூக்கியெறியணும்னு சொன்னீங்க
-------------------------

கோழிக்கு தீனீ



ஒரு கோழி பண்ணையை நடத்தி வந்தவர் அதனை சுற்றி பார்க்க வந்தவரிடம் தான் கோழிக்களுக்கு பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற விலை உயர்ந்த பொருட்களை தீனியாக போடுவதாக கூறினார் உங்களுக்கு நல்ல வருமானம் வருவதால் தான் கோழிகளுக்கு விலை உயர்ந்த தீனிகளை கோடுகிறீர்கள் ஆதலால் நீங்கள் அதிக வரிகட்ட வேண்டும் என கூறி அவரிடம் அதிக வரி வசூல் செய்தார் காரணம் வந்தவர் வருமான வரி அதிகாரி.

மறுநாள் வந்தவரிடம் கோழி பண்ணையில் தான் கோழிகளுக்கு விலைகுறைந்த தீனிகளை தான் போடுவதாக கூறினார். கோழிகளுக்கு தரமில்லாத தீனிகளை போடுகிறீர்கள், ஆதலால் நீங்கள் அதிக அபராதம் கட்ட வேண்டும் என கூறி அவரிடம் அதிக பணம் வசூல் செய்தார், காரணம் வந்தவர் வனவிலங்கு அதிகாரி.

மறு நாளும் ஒருவர் வர அவரிடம் சார் நான் ஒவ்வொரு கோழியிடமும் தினசரி ரூ. 50 கொடுத்து விடுவேன். ஒவ்வொரு கோழியும் தனக்கு பிடித்த படி சாப்பிட்டு கொள்ளும் என்றார்.

டீச்சர்


டீச்சர்: நீ படிச்சு பெரியவனாகி என்ன பண்ணப்போற?
பையன்: கல்யாணம்

டீச்சர்: அது இல்ல.. நீ என்னவா ஆக விரும்புற?
பையன்: கணவன்.

டீச்சர்: இல்லப்பா... உனக்கு வாழ்கையில என்ன கிடைக்கனும்னு எதிர்பாக்குற?
பையன்: மனைவி.

டீச்சர்: ஒ..நோ..உங்க அப்பா அம்மாவுக்கு என்ன பண்ண போற?
பையன்: மருமகள் தேடுவேன்.

டீச்சர்: டேய் ஸ்டுபிட் உங்க அப்பா அம்மா உன்கிட்ட என்ன எதிர்பார்க்கிறாருங்க?
பையன்: பேர குழந்தைகள்!!!
இதைவிடவுமா ஒருத்தரால ஆக முடியும் நீங்களே சொல்லுங்க..!!

ஒரு கவிதை...


கணவனால் மனைவிக்கு எழுதப்பட்டது.

பசியை படைத்த இறைவன்
 

உணவைப்படைத்தான்
 

தாகத்தை படைத்த இறைவன்
 

தண்ணீரைப்ப படைத்தான்
 

அமைதியான உலகை படைத்த இறைவன்
 

உன்னைப் படைத்தான்
-------------------
என் மனைவி நான் சொல்றதுக்கெல்லாம் சரின்னு தலையாட்டுவா.
ரொம்ப கொடுத்து வைச்சவர் நீங்க, விவரமா சொல்லுங்க.


உதாரணமா நான்தான் சமைப்பேனு சொல்லுவேன். சரின்னுடுவா. நான் தான் துவைப்பேன்னு சொல்லுவேன் சரின்னுடுவா.

-----------------------

மனைவி: ராத்திரி தூக்கத்தில ஏன் சிரிச்சிங்க.?
கணவன்: கனவுல அனுஷ்கா வந்தா..!
மனைவி: அப்பறம் ஏன் கத்துனீங்க.?
கணவன்: நடுவுல நீ வந்துட்ட..!

------------------------
கணவன்:தூக்கத்தில் உன் குரல் கேட்டு எழுந்து பார்த்தேன்
ஆனால் நீ இல்லை...
மனைவி: அப்பறம்....
கணவன்: பின்பு தான் தெரிந்தது அது பக்கத்து வீட்டு "எருமை மாடு" என்று!
------------------------------------

இராமசாமி : நான் எப்போதும் கீதா உபதேசம் கேட்கிறேன், அதன் படியே நடந்து கொள்கிறேன்
கருப்பசாமி : அவ்வளோ நல்லவரா நீங்க!
இராமசாமி : அப்படியெல்லாம் இல்லை எங்க வீட்டுக்காரம்மா பேரு கீதா
----------------------------


கணவன்: ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு!
குடிக்க வெந்நீர் கொடு!
மனைவி: ஏங்க இப்படி பயப்படுறீங்க?
கணவன்:மூளைக் காய்ச்சல்தான் பரவுது!
மனைவி: அது எப்பிடி உங்களுக்கு வரும்!
------------------------
 

Thursday, October 25, 2012

எலிக்கும், மவுசுக்கும் என்ன வித்தியாசம்


ஜோதிடம் சொல்பவர், ஐந்து ரூபாய் தந்தால் 2 கேள்விகள் கேட்கலாம். என்று சொன்னார்.
இரண்டு கேள்விகளுக்கு ஐந்து ரூபாயா? என்று வந்தவர் கேட்டார் ஆமாம் உங்கள் இரண்டாவது கேள்வி என்ன? என்றார் ஜோதிடம் சொல்பவர்.
கோயில் உண்டியலை திருடியது உண்மையா?
உண்மைதான் ஜட்ஜ் ஐயா, ஆனா அதுல இருந்த பணத்தை எடுத்துகிட்டு உண்டியலை திருப்பி வெச்சிட்டேன்.

ஹேலா நான் குமார் பேசுகிறேன். என் கடனை எப்ப திருப்பி தருவீங்க?
சேலத்துல் 3  குமார்கிட்டே கடன் வாங்கி இருக்கேன். ஈரோடுல   6 குமார்கிட்டே கடன் வாங்கியிருக்கேன். யாரா இருந்தாலும், தெளிவா விபரமா பேசுங்க குழப்பாதீங்க.

ராமு - 10 ரூபாய் இருந்தா கொடு
சோமு - என்னிடம் சுத்தமா ரூபாய் இல்லை
ராமு - பரவாயில்லை, கொடு நான் சுத்தம் செய்து கொள்கிறேன்.

பூட்டைத் திறக்கணும்னா என்ன செய்யனும்?
முதல்ல பூட்டை பூட்டணும்...!

எலிக்கும், மவுசுக்கும் என்ன வித்தியாசம்
எலிக்கு வால் பின்னாடி இருக்கும், மவுசுக்கும் வால் முன்னாடி இருக்கும்.

சாப்பிட முடியாத மீன் எது?
விண்மீன்

பாபுன்றது என் ரூம் மேட்டோட பேருப்பா!


மறதிக்கு பெயர் போன புகழ் பெற்ற ஓர் அறிஞர் இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். டிக்கெட் சோதனையாளர் பயணிகளிடம் டிக்கெட்டைக் வாங்கி பார்த்து விட்டு அந்த அறிஞரிடம் வந்து அவருடைய டிக்கெட்டை கேட்டார். அறிஞர் அதை வைத்த இடம் தெரியாமல் தேடிக் கொண்டிருந்தார்.

அவர் யார் என்பதை அறிந்திருந்த டிக்கெட் சோதனையாளர் பரவாயில்லை நான் உங்களின் வார்த்தைகளை நம்புகிறேன். டிக்கெட் தேட வேண்டாம் என்று சொன்னார். அதற்கு அறிஞர் எனக்கு தற்போது பெரிய சங்கடம் ஏற்பட்டிருக்கிறது. நான் இப்பொழுது எந்த ஊருக்கு போய்க் கொண்டிருக்கிறேன் என்பது தெரியவே அந்த டிக்கெட் எனக்கு இப்பொழுது தேவைப்படுகிறது.

பால் எப்போது வெட்கப்படும்?
அதன் ஆடையை எடுத்தப்பின்.

காலில் சுத்தின பாம்பு கடிக்குமா? கடிக்காதா?
ஏன் கேட்கிறே?
உங்க கால்ல ஒரு பாம்பு சுத்தியிருக்கேன்னு கேட்டேன்...!

இந்த காலத்துல பத்து ரூபாய்க்கு மதிப்பே இல்லாம போச்சு
ஆமா சரியா சொன்னீங்க...
தெரிஞ்சும் ஏன் என் கல்யாணத்துக்கு பத்து ரூபாய் மொய் வெச்சீங்க...!

நீ என்ன பேஸ்ட் யூஸ் பண்ற?
பாபுஸ் பேஸ்ட்
நீ என்ன சோப் யூஸ் பண்ற?
பாபுஸ் சோப்
அது என் புது பிராண்டா?
அட பாபுன்றது என் ரூம் மேட்டோட பேருப்பா !.

வெளியே விட்டா கெட்டுப்போயிடும்


மனைவி: டாக்டர்! என் கணவர் ஒரு பேனாவை விழுங்கி விட்டார்.
டாக்டர்: இன்னும் சில நிமிஷத்தில் வந்து விடுகிறேன்
மனைவி: அதுவரை நான் என்ன செய்வது?
டாக்டர்: பென்சிலை உபயோகியுங்கள்.


ப்ரௌன் சுகர்
வீட்டுலே சுகர் இருந்தாக் கூடவா போலீஸ் அரெஸ்ட் பண்ணும்?
நீ வேற... அவரோட வீட்டுலே ப்ரௌன் சுகர் இருந்துச்சாம்!


கல்யாணம்

”ஏங்க! நமக்கு கல்யாணம் பண்ணி வச்ச அய்யரோட மகனுக்கு நாளைக்குக் கல்யாணமாம்.”
”இத்தனை கல்யாணம் பண்ணி வச்சும் புரிஞ்சுக்காத மனுசனா இருக்காறே!!


என்னால் என் நண்பர்கள் துன்பபப்படுவதைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.
உடனே அவர்களுக்கு உதவி செய்வாயா?
நான் கண்ணை மூடிக் கொள்வேன். இல்லாவிட்டால் அந்த இடத்தை விட்டு ஓடிவிடுவேன்.

குழந்தையை ஏன் பிரிட்ஜில் வைத்து பூட்ரீங்க ?
வெளியே விட்டா கெட்டுப்போயிடும் அதான்!.

ரேஷனுக்கு, பேஷனுக்கும் என்ன ஒற்றுமை?


மளிகை கடைக்காரரை கட்டிக்கிட்டது தப்பா போச்சு?
ஏன்?
கிஸ் கேட்டா எத்தனை கிலோன்னு கேட்கிறார்...!

அவர் ஆற்ற வேண்டிய வேலை நிறைய இருக்கா, யார் அவர்?
டீ கடையில் டீ ஆற்றுபவர்.

நான் எப்பவும் சீப்பாதான் வியாபாரம் பண்ணுவேன்.
எப்படி கட்டுபடியாகும்?
கட்டுபிடியாகுங்க வாழைப்பழத்தை சீப்பாதானே கொடுத்தாகணும்.

டீ குடிச்சதும் டம்ளரை கழுவறீங்க?
டிபன் சாப்பிட்டு காசில்லைன்னா, மாவட்டறதில்லையா, அது மாதிரி தான் சார்...!

ரேஷன் கடையில் வேலை பார்ப்பவரை கல்யாணம் பண்ணது தப்பா போச்சி.
ஏன்.
எப்பபார்த்தாலும் எடையை குறை எடையை குறை என்கிறார்.

ரேஷனுக்கு, பேஷனுக்கும் என்ன ஒற்றுமை?
ரேஷனில் எடை குறையும்.
பேஷனில் உடை குறையும்.

கந்தசாமின்னு என் கையெழுத்தை போட்டுட்டேன்...!


இரண்டு போலீஸ்காரர்கள் ஏன் அந்த வாழை மரத்தை சுற்றி சுற்றி வருகிறார்கள்.
அங்கே கொலை விலை போகுதாம்.

லஞ்சம் கேட்டதால பொது மக்கள் சக்கையாய் பிழிஞ்சு எடுத்துட் டாங்களா, யாரை?
கரும்பு இன்ஸ்பெட்டரை.

ஹலோ.. போலிஸ் ஸ்டேஷனா? கேடி கபாலியை பிடிச்சி வச்சிருக்கோம்.. சீக்கிரம் வாங்க.
தப்பிச்சிடாம பார்த்துக்கோங்க... நிறைய மாமுல் பாக்கி இருக்கு...!

மாமூல் ரொம்ப பப்ளிக்கா மாறிடுச்சி.
ஏன் சலிச்சிக்கிறீங்க?
பின்னே என்னங்க? போலீஸ் ஸ்டேஷன்ல பாருங்க. விழா எடுத்து திருடனுக்கு மாமூல்
மாணிக்கம்னு இன்ஸ்பெட்டர் பட்டம் தர்றாரு.

திருடனுக்கும் போலீசுக்கும் என்ன வித்தியாசம்?
தொப்பைதான்.

என்னை கண்டு எல்லோரும் போலீஸ்னு நெனைச்சி பயந்துக்கிடுறாங்க.
ஆமா இவ்வளவு பெரிய தொப்பை இருந்தா பயப்படாம என்ன செய்வாங்க...!

வாழ்க்கையிலே பல நாள் ஜெயில்லே கழிஞ்சு போச்சுன்னு வருத்தப்படுறீங்களே...!
என்ன தப்பு செஞ்சீங்க?
நீங்க வேற....! ஜெயிலராயிருந்தேன்...!

அந்த ஆபிசர் கமிஷன் வாங்கினது தெரிஞ்சு போச்சு.
அப்புறம்?
கமிஷனை விசாரிக்க ஒரு கமிஷன் போட்டாங்க.
பின்ன என்ன ஆச்சு?
கமிஷன்கிட்டே கமிஷன் கொடுத்து தப்பிச்சிட்டார்.

கள்ள நோட்டு அடிச்ச, நீ எப்படி போலீஸ்ல மாட்டினே?
ரிசர்வ் பேங்க், கவர்கனர் கையெழுத்து போடுற இடத்துல,
கந்தசாமின்னு என் கையெழுத்தை போட்டுட்டேன்...!

திருடன் - எதுக்கு என்ன ஜாமீன்ல எடுத்தீங்க..!
போலீஸ் - நீ உள்ள போனதிலேர்ந்து என்னோட மாமூல் வாழ்க்கை பாதிச்சிடுச்சி...!

----------------------------------------------------

பல்பு கம்பெனியில வேலை கிடைச்சிருக்கே.


நம்ம மேனேஜர் பத்மாசனத்தில் இருக்கார்
நம்ம மேனேஜர்க்கு யோகாசனம் எல்லாம் தெரியுமா?
அட, நீ வேற அவர் டைப்பிஸ்ட் பத்மாவோட மடியில் இருக்கார்.

கிளார்க் ராமசாமி நிறைய லஞ்சம் வாங்குவாரோ?
எப்படி சார் கண்டுபிடிச்சீங்க?
அவர் சட்டையில ஏகப்பட்ட பாக்கெட் இருக்கே...!

ஆபிஸ்ல தூங்கிகிட்டே இருப்பீங்களாமே, அப்படியா?
அபாண்டமான பொய் சார், மதியம் 2 மணிக்கு தூங்கி 5 மணிக்கு எழுந்தக்குவோம்.

5 மணிக்கு ஆபிஸ்ல இருந்து வந்துடுவீங்களே 6 மணிக்கு வர்றீங்களே ரொம்ப வேலையா?
ஊஹும் பியூன் எழுப்ப மறந்துட்டான்.

என் வாழ்க்கை இனிமேல் பிரகாசம் தான்
எப்படிச் சொல்றே
பல்பு கம்பெனியில வேலை கிடைச்சிருக்கே.

ஆபிசுக்கு குடிச்சிட்டு போதையில போனது தப்பாப் போச்சு
தண்ணியில்லாக் காட்டுக்கு மாத்திட்டாங்களே!

எங்க மேனேஜர் அமைதியா அஞ்சு நிமிஷம் கூட சீட்ல உட்காரவே மாட்டார்.
அவ்வளவு சுறுசுறுப்பா?
ஊஹும், அவருக்கு மூல வியாதி!.

ஆபீஸ்க்கு குழந்தைகளை கூட்டிட்டு வந்திருக்கியே எதுக்குய்யா?
என் குழந்தைகளோட தூங்கிதான் எனக்கு பழக்கம் சார்...!

வேலை செய்யும் நேரத்தில் சீட் ஆடி மேனஜரிடம் மாட்டியதும், மேனேஜர் ராமனின் சீட்டை கிழித்து விட்டார். அப்புறம் என்ன ஆச்சு,
வேறு ஒரு புது சீட்டு கட்டு வாங்கி ஆடினார்கள்.

ரிடைர்ட் ஆகும்போது அவருக்கு பணம் முடிப்புடன் அருகம்புல்லும் தருகிறார்கேள, ஏன்?
கம்பெனிக்கு மாடாய் உழைத்ததால்.

எங்க மேனஜர் வரும் போது, மரம் மாதிரி நின்னுக்கிட்ருந்தது தப்பா போச்சு
ஏன்?
கூப்பிட்டு அறு, அறுன்னு அறுத்து தள்ளிட்டார்.

எங்க ஆபிஸ்ல வேலை செய்ற எல்லோரும் கை நீட்டி லஞ்சம் வாங்க மாட்டாங்க...!
அப்படியா?
ஆமா, நீங்க தான் கை நீட்டி லஞ்சம் கொடுக்கனும்.

உங்க பிரா கம்பெனியோட கிளைகள் பல ஊர்ல இருக்காமே எந்தெந்த ஊர்ல?
வியாசர்பாடி...! வாணியம்பாடி! காட்பாடி! தரங்கம்பாடி! குறிஞ்சிப்பாடி!

சுரங்க பாதை வெட்டி தப்பி செல்ல


போருக்கு போகும் போது மன்னர் மண்வெட்டியுடன் போகிறா ரே ஏன்?
தோல்வி நிலை வந்தால் சுரங்க பாதை வெட்டி தப்பி செல்லத்தான்..

மன்னா ஏன் திடீரென்று ஓட்டப் பந்தய பயிற்சி பெறுகிறீர்கள்?
போரில் புறமுதுகிட்டு ஓட வசதியாக இருக்குமே அதுதான்

மொய் கவர்ல என்ன எழுதியிருக்கு?
சாப்பாடு பிரமாதம் என் கல்யாணத்துக்கு நீயும் எதுவும் செய்யவேண்டாம்மு எழுதியிருக்கு.

மன்னா எதிரிநாட்டு அரசர் பெரும்படையுடன் நம் நாட்டை தாக்க வந்து கொண்டிருக்கிறான்.
அப்படியா உடனே நம் மகாராணியாரை இந்நாட்டு மன்னர் ஆக்கிவிடுவோம்.

இளவரசி அடங்காபிடாரியா அரசே!


மன்னர் இரவு நேர நகர்வலத்தை பன்னிரண்டு மணியோடு முடித்துக் கொள்கிறாரே ஏன்?
மிட் நைட் மசாலா ரசிகராம் அதான்.

படையெடுத்து வந்த எதிரி மன்னனை நம் மன்னர் பக்குவமாக மடக்கிட்டார்...
எப்படி?
அந்தப்புரத்தை அப்படியே எழுதி வைச்சிடறதா சொல்லிட்டாரு!

அரிசந்திரனுக்கு பிடித்த பிஸ்கட் எது?
ட்ரூ பிஸ்கட்

மன்னர் ஏன் இப்பொழுதெல்லாம் நகர்வலம் போவதில்லை?
நாய்தொல்லை தாங்க முடியவில்லையாம்.

சிங்கத்தை அடக்கும் தைரியசாலிக்கு தன் மகளை மணம் செய்து வைப்பதென்று முடிவு செய்திருக்கிறேன் மந்திரியாரே!
இளவரசி அவ்வளவு பெரிய அடங்காபிடாரியா அரசே!

போர்கைதி தெரியும், அதென்ன பேர் கைதி.
அரசரை பேர் சொல்லி கூட்பிட்டானாம்.

மகாராணியின் நகைகளை மார்வாடி கடையில் அடகு வைக்கும் போது இவனை கையும் களவுமாக பிடித்து வந்திருக்கிறோம் மன்னா...!
அடப்பாவிங்களா கைச் செலவுக்கு காசில்லைன்னு நான் தான் யாருக்கும் தெரியாமல் அடகு வைக்கச் சொன்னேன்.

Thursday, September 6, 2012

உலகத்திலேயே வாழக் கூடாதுன்னு


ஆசிரியர்: பொய் சொல்லக்கூடாது, பிறர் பொருள் மேல் ஆசை வைக்கக் கூடாது,பிறர் மனம் நோகப் பேசக் கூடாது.



மாணவன்: இந்த உலகத்திலேயே வாழக் கூடாதுன்னு சொல்லிடுங்க சார்...
---------------------------


ஆசிரியர்: பள்ளிக்கூடத்திற்கு 'கட்' அடித்து விட்டு சினிமாவுக்கு போனியாமே, நாளை உன் அப்பாவைக் கூப்பிட்டு வா...


மாணவன்: அவர் படம் பார்க்கலே சார்... கதையை நான் சொல்றேன்...
--------------------------------

ஆசிரியர்: எது கேட்டாலும் தெரியாதுன்னு சொல்ற ஒரு பையன் நேற்று ஒரு கேள்விக்கு சரியாகப் பதில் சொல்லி விட்டான்...


மாணவன்: என்ன கேட்டீங்க...?


ஆசிரியர்: ஆந்தைக்கு பகல்ல கண் தெரியுமான்னு கேட்டேன். தெரியாது...ன்னுட்டான்.
-----------------------------------


ஆசிரியர்: நீ இவ்வளவு மார்க் வாங்குவேன்னு நான் நினைக்கல ரமேஷ்...
 

மாணவன்: என் உங்களைச் சந்தோஷப் படுத்தனுமின்னுதான் பிட் வைத்து எழுதினேன் சார்...
--------------------------------


ஆசிரியர்: நான் தினமும் ஏழு கிலோ மீட்டர் நடந்து சென்று படித்து வந்தேன்...


மாணவன்: அப்பவே உங்களுக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரமா சார்..
-----------------------------------.

சிங்கப்பூர் போயிருக்கிறாரும்மா


வீட்டுக்காரி: பிச்சை எடுக்க நீ வந்திருக்கிறாயே... உன் கணவன் எங்கே?
 

பிச்சைக்காரி: பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க சிங்கப்பூர் போயிருக்கிறாரும்மா...
----------------------------------

ஒருவர்: என்னப்பா... ஒரு மணி நேரத்திற்கு ஒரு தரம் பிச்சை கேட்டு வர்ற...?
 

பிச்சைக்காரன்: இந்த ஏரியாவை இரண்டு லட்சம் ரூபாய்க்கு ஏலத்திற்கு எடுத்திருக்கேங்க...
---------------------------------

பிச்சைக்காரன்: மூணு நாளாப் பட்டினி, ஏதாவது தர்மம் பண்ணங்கய்யா...
மற்றவர்: பார்த்தா அப்படி தெரியலயேப்பா...
பிச்சைக்காரன்: உங்க கண்ணுல கோளாறா இருக்கும். அதுக்கு நான் என்ன செய்ய முடியும்...? 
-----------------------------


பிச்சைக்காரன்1: வீடு வீடாகப் போய் பிச்சை எடுப்பது எனக்குப் பிடிக்கவில்லை
பிச்சைக்காரன்2: அப்புறம் என்ன செய்யப் போற...?
பிச்சைக்காரன்1: தானா கொண்டு வந்து பிச்சை அளiப்பவர்களுக்குப் பரிசுன்னு ஒரு போட்டி அறிவிக்கப் போறேன்....
---------------------------------

கணவன்: கெட்டுப்போன உணவைப் பிச்சைக்காரனுக்குக் கொடுக்காதேன்னு சொன்னேனே கேட்டியா?
மனைவி: ஏங்க...?
கணவன்: கன்ஸ்யூமர் கோர்ட்டுக்குப் போய் உனக்கு நோட்டீஸ் விட்டிருக்கான்.
--------------------------------

பிச்சைக்காரன்: ஒரு மாசத்திற்கு முந்தி உங்க வீட்டுச் சாப்பாடு நல்லாயிருக்குமேம்மா...இப்ப அப்படி இல்லையே...
 

பெண்: ஆமாப்பா... தெரியாமல் அவரை விவாகரத்து பண்ணி விட்டேன்.
-------------------------------

பெண்: என்னய்யா... பிச்சை எடுக்க தினம் ஒரு புதுப்பாத்திரம் கொண்டு வருகிறாயே...
 

பிச்சைக்காரன்: போன மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சும்மா... மாமனார் நிறைய பாத்திரங்கள் கொடுத்து விட்டார்.
---------------------------------

நர்சைப் பார்த்ததும் என் மனைவி ஞாபகம் வந்திடுச்சு


டாக்டர்: இன்னும் நான் உங்களுக்கு ஊசியே போடலியே அதற்குள் ஏன் கத்துகிறீர்கள்?
வந்தவர்: உங்க நர்சைப் பார்த்ததும் என் மனைவி ஞாபகம் வந்திடுச்சு டாக்டர்...
-----------------------------

பெண்: என் கணவருக்கு ஞாபகமறதி அதிகமாயிடுச்சு டாக்டர்..?
டாக்டர்: எப்படியம்மா சொல்றீங்க?
பெண்: பீரோன்னு நினைத்து, பிரிஜ்ஜைத் திறந்து சட்டையைத் தேடுகிறார்...!
--------------------------

வாலிபர்: மூன்று மாதமாக எனக்கு கழுத்து வலி டாக்டர்...
டாக்டர்: உங்க மேனேஜர்கிட்டே சொல்லி டைப்பிஸ்ட் சீட்டை முன்னால போடச் சொல்லுங்க...
----------------------------------

வந்தவர்: டாக்டர் நான் நீண்ட ஆயுள் வாழ விரும்புகிறேன். ஒரு நல்ல வழிமுறை சொல்லுங்களேன்!
டாக்டர்: உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?
வந்தவர்: இல்லை டாக்டர். திருமணம் ஆயுளை நீட்டிக்குமா?
டாக்டர்: அப்படி சொல்வதற்கில்லை! ஆனால் நீண்ட ஆயுள் வாழ வேண்டும் என்கிற நினைப்பு மீண்டும் வராது!
----------------------------------

வந்தவர்: டாக்டர் இப்போதெல்லாம் என்னால் சிந்திக்கவே முடிவதில்லை, என்ன செய்வது?
டாக்டர்: எவ்வளவு காலமாய் இப்படி இருக்கிறது?
வந்தவர்: சரியாகச் சொல்ல வேண்டுமானால் நான் கல்யாணம் செய்து கொண்ட நாள் முதல்.

டாக்டர்: இல்லை. உங்களின் கணிப்பு தவறானது. இது நீங்கள் கல்யாணம் செய்து கொள்வதற்கு முன்பே நிகழ்ந்திருக்கிறது. ஆனால், நீங்கள் இப்போது தான் உணர ஆரம்பித்திருக்கிறீர்கள்.முன்னமே நீங்கள் சிந்திதிருந்தால் உங்களின் கல்யாணமே நிகழ்ந்திருக்காது.
-------------------


வெளி நாடு சென்றிருந்த கணவருக்குத் தந்தி வந்தது, " மனைவி இறந்து விட்டார்.உடனே வரவும்".
கணவர் தெரிவித்தார், "என்னால் வர இயலாது, ஈமக்கிரியைகளை முடித்து விடவும்"
மீண்டும் தந்தி வந்தது, " பிணத்தை எரிப்பதா? புதைப்பதா?"
கணவர் பதில் அனுப்பினார், " பிணத்தை எரித்து விடவும். சாம்பலைப் புதைத்து விடவும்."
----------------------------------

நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்.


மனைவி: நம்ம பையன் வளர்ந்து என்னவாக ஆசைப்படுறீங்க?

கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்...
ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது...
நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்.
-------------------------

மனைவி - பால் எல்லாவற்றையும் பூனை குடிக்கும்வரை என்ன பண் ணிட்டீருந்தீங்க?
கணவன் - இந்த பூனையும் பால் குடிக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.
--------------------------------

என் மனைவி கிட்ட எனக்கு பிடிச்சதே அவளோட பொய் சொல்லாத குணம்தான்..
இல்லையே...நேற்றுகூட என் மனைவிகிட்ட 'என் புருஷன் அழகுன்னு' சொன்னாளாமே
--------------------

மனைவி: ஏங்க! நான் கார்ல போறப்ப நாலு அஞ்சு தடவை இந்த டிரைவர் ஆக்சிடென்ட் பண்ணப் பார்த்தான்! உடனே மாத்துங்க!

கணவன்: விடும்மா! இன்னும் ஒரே ஒரு சான்ஸ் கொடுத்துப் பார்ப்போம்!
-------------------------

என் மனைவி ஒரு மாதம் பிறந்த வீட்டிற்கு போயிருக்கா..
அதுக்கு சந்தொஷப்படாம ..வருத்தப்படறே..
அந்த ஒரு மாசம் இன்னியோட முடியறது.அதுதான் !
----------------------------

கணவன் - ஊருக்கு போய் சேர்ந்ததும் லெட்டர் போடு கமலா?
மனைவி -  ஏங்க?
கணவன் - அப்பதான் எனக்கு முழு சுதந்திரமே கிடைச்சமாதிரி.
-----------------------------------

கணவன்: உன் போட்டோவா இது...எனக்கே சந்தேகமா இருக்கு...
மனைவி: என் மேலே இருக்கிற சந்தேகம் எப்பதான் உங்களுக்குத் தீரப் போகுதோ...
------------------

கணவன்: இந்த சேலை கட்டியிருக்கும் போது நீ மகாலட்சுமி மாதிரியே இருக்க...
மனைவி: யாருங்க அந்த மகாலட்சுமி ?
கணவன்: எங்க ஆபிஸ் ஸ்டோனோ டைப்பிஸ்ட்...!
-------------------------------------------

மனைவி: என்னங்க நம்ம கல்யாண நாளைக் கூட மறந்துட்டீங்களே...
கணவன்: உனக்குத்தான் தெரியுமே... நான் நல்ல விஷயத்தை மறக்க மாட்டேன்னு...
------------------------------

Wednesday, September 5, 2012

Welcome to Madurai

மதுரை சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை வரவேற்க்கின்றது.




Welcome to Madurai Sivakumar's Website


http://mdusskadl.blogspot.com// ·                             விழிப்புணர்வு.

http://madurai-pcl-sivakumar.blogspot.com//·           படித்ததில் பிடித்தது.

http://wwwsithancom-sivakumar.blogspot.com/      . பொது அறிவுச்செய்திகள்

 http://maduraisskadl.blogspot.com//         சிறுகதை:

 http://www.mdusskadlsk.blogspot.in/        நகைச்சுவை.காம்.

http://www.sskganesh.blogspot.in/   பார்த்ததில் பிடித்தது

http://ssktamilquotes.blogspot.in/     தமிழ் பொன் மொழிகள்

http://mduadlssk.blogspot.com//            TAMIL CLASSICAL SONGS

நமது பிப்பு ஒரு சம்பவமாக் இருக்கலாம், ஆனால் நமது இப்பு ஒரு சரித்திரமா இருக்க வேண்டும்


https://plus.google.com/110659488613257381414/posts?hl=en&partnerid=gplp0

நகைச்சுவை வலைச்சரம்

Welcome to Madurai Sivakumar's Website

மதுரை சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை வரவேற்க்கின்றது.



http://mdusskadl.blogspot.com// ·                             விழிப்புணர்வு.

http://madurai-pcl-sivakumar.blogspot.com//·           படித்ததில் பிடித்தது.

http://wwwsithancom-sivakumar.blogspot.com/      . பொது அறிவுச்செய்திகள்

 http://maduraisskadl.blogspot.com//         சிறுகதை:

 http://www.mdusskadlsk.blogspot.in/        நகைச்சுவை.காம்.

http://www.sskganesh.blogspot.in/   பார்த்ததில் பிடித்தது

http://ssktamilquotes.blogspot.in/     தமிழ் பொன் மொழிகள்

http://mduadlssk.blogspot.com//            TAMIL CLASSICAL SONGS


https://plus.google.com/110659488613257381414/posts?hl=en&partnerid=gplp0

Saturday, August 25, 2012

தங்க மோதிரம்



"யோவ் கண்டக்டர் பஸ்ஸை நிறுத்து..
 

ஒருத்தர் பஸ்ல இருந்து தவறி விழுந்துட்டாரு.."

 "சும்மா இருய்யா.. கண்ட இடத்துல விசில் அடிச்சா டிரைவர் என்னைத் திட்டுவாரு." 


"யோவ் பஸ்ல இருந்து தவறி விழுந்தது டிரைவர் தான்யா!"
----------------------------


"சே.. அரை மணி நேரமா பேசிக்கிட்டே இருக்காரு.."


 "பேசட்டுமே சார்... நம்ம கட்சி பிரமுகர்தானே.." 


"நீங்க வேற... அந்த ஆள் மைக் டெஸ்ட் பண்றவன் சார்.."
------------------------------
"நம்ம தலைவருக்கு ரொம்பத்தான் குசும்பு" "ஏன்.. என்னாச்சு?"


 "கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலைய முடியலையாம்... 


கோர்ட்லயே ஒரு ரூம் வாடகைக்குக் கேக்கிறார்"
-----------------------------------

"எங்க அம்மாவ ஸ்டேஷன்லேருந்து அழைச்சிக்கிட்டு வரச்சொன்னா ஏன் தயங்கறீங்க...?"


 "உங்க அம்மா மட்டும்தான் வர்றாங்களா..?"


 "ஏன்? மச்சினியும் கூட வந்தாத்தான் அழைக்கப்போவீங்களா?"
----------------------------------


"காதலன்: அன்பே நாம் மோதிரம் மாற்றிக் கொள்வோமா?
 

காதலி: நான் போட்டிருப்பது தங்கம். நீங்க போட்டிருப்பது டூப்ளிகேட்.
 

 நீங்களும் தங்க மோதிரம் போட்டுட்டு வாங்க, மாத்திக்குவோம்.
 

காதலன்: ? ? ? ? ?
----------------------------------

ஹோட்டல் பில்



"என்னுடைய கல்யாண நாள் வரும் போதெல்லாம் உங்க ஞாபகம் தான் சார் வரும்.."

 "எதனால?" 


"நீங்க ரெண்டு பந்தியில் சாப்பிட்டும் மொய் எழுதாம போனீங்கல்ல.. அதனால!"
----------------------------


"நான் ஊருக்குப் போயிருந்தப்ப யார இங்க அழைச்சிக்கிட்டு வந்தீங்க?....
 

வாஷ்பேஸின் கண்ணாடில ஸ்டிக்கர் பொட்டு ஒட்டியிருக்கு?"
 

"அது நீ ஒட்டுனதாத்தான் இருக்கும்டி....."
 

"இவ்வளவு சின்னதாவா நான் வக்கிறேன்?....
 

என்னிக்கு என் முகத்த நிமிந்து பாத்திருக்கீங்க..ம்ஹும்!"
----------------------------------


"என்னை, பெண் பார்க்க வந்தன்னிக்கு, நீங்க டிபனை தொடவே இல்லையே ஏன்?"


 "ரெண்டாவது 'ஷாக்' எதுக்குன்னு, தான்..!"
----------------------------
"பில்லை நானே கொடுக்கிறேன்னு சொன்ன என் காதலியை நம்பி ஹோட்டலுக்குச் சாப்பிடப் போனது தப்பாப் போச்சு."

 "ஏன்?"
 

"பில்லை நான் கொடுக்கிறேன். பணத்தை நீ கொடுத்துடுனு கடைசியில சொல்லிட்டாள்."
-------------------------------

மாமியார் மாதிரி



"எங்க வீட்டு நாயைக் காணோம் சார்..."
 

"அடையாளம் சொல்லுங்க..."
 

"அது கோபமா குரைக்கும் பொழுது, என்னோட மாமியார் மாதிரியே இருக்கும்.......!"
-----------------------------
"கணவர்: இது மாதிரி என்கிட்டே தொடர்ந்து சண்டை போட்டுக்கிட்டே இருந்தால்,
 

 ஒரு நாள் மிருகமா மாறப் போறேன். ஜாக்கிரதை.
 

 மனைவி: நான் எலியைப் பார்த்தெல்லாம் பயப்பட மாட்டேன்!
-------------------------------------------
அம்மா.. அப்பா ஏன் ஞாயிற்றுக்கிழமையில ஆஃபீஸ் ஃபைல வீட்டுக்கு கொண்டு வரார்?"
 

 "ஆஃபீஸ் ஃபைல்களைப் பார்த்தால் தான் உங்கப்பாவிற்கு தூக்கம் வருமாம்.. அதுதான்.."
-----------------------------
"நேற்று பெண் பார்க்கப் போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்டா...!"
 

 "பெண் அவ்வளவு அழகா?"
 

"இல்லடா... விஷயம் தெரிஞ்சு என் மனைவியும் அங்கே வந்துட்டா...!"
---------------------------------
"தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே..
 

அவ்வளவு பாசமா மனைவி மேல?"
 

"மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!"
------------------------------
உங்க மனைவிக்கு தொண்டைல மைனர் ஆபரேஷன்தான்
 

ரெண்டு நாள் மட்டும் அவங்களால பேச முடியாது!"
 

"அப்ப மேஜர் ஆபரேஷன் பண்ணா எவ்வளவு நாள் பேசமுடியாது டாக்டர்?"
----------------------------

டாக்டர்..


டாக்டர்.. என் கணவருக்கு இப்போ எப்படி இருக்கு?"
 

அவர் கவர்மெண்ட் ஆஃபீஸரா?
 

ஆமாம்" "அப்போ சந்தோஷமான விஷயம்தான்.
கவர்மெண்ட்ல இருந்து நிறைய பணம் உங்களுக்கு வரப்போகுது.
-------------------------------
 

போன்ல உங்களுக்குக் கொலை மிரட்டல் விடுறவன், ஒருவேளை நீங்க ஆபரேஷன் பண்ணுன பேஷண்ட்டுகள்ல யாராவது இருக்குமோ..?"
 

 "எனக்குத் தெரிஞ்சு அப்படி யாரும் உயிரோட இருக்கிற மாதிரி தெரியலையே, நர்ஸ்!"
------------------------------------------
 

டாக்டர்: உங்க மாமியாரைக் காப்பாத்துறது கஷ்டம்.
 

மருமகள்: நீங்க நல்ல டாக்டர்னு எல்லாரும் சொன்னது இப்பத் தான் டாக்டர் புரியுது. டாக்டர்: ? ? ? ? ?
----------------------------
 

என் வீட்டுக்காரர், பண்ண காரியத்தையே ஞாபக மறதியா ரெண்டாவது தடவை மறுபடியும் பண்றாரு டாக்டர்.."
 

 "இந்த சின்ன விஷயத்துக்குப் போய் ஏன் இப்படி வரத்தப்படறீங்க..?"
"நீங்க வேற டாக்டர், அவரு மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கப் பொண்ணு பார்த்துட்டு இருக்காரு..!"
---------------------------
 

"பேஷண்ட் ஆபரேஷன் தியேட்டருக்கு வந்தாச்சு ஆனா,
 மயக்க மருந்து ஸ்டாக் இல்லை டாக்டர்,
 

என்ன செய்யறது?"
 

"ஆபத்துக்குப் பாவமில்லை.. என் ஷூ சாக்ஸை அவர் மூக்குக்கிட்டே லேசா காட்டிடு!"
--------------------------

Saturday, August 11, 2012

நகைச்சுவை கீதை:-



எதை நீ படித்தாய் மறப்பதற்கு;

எதை நீ கவனித்தாய் அது புரியாமல் இருப்பதற்கு;

என்று நீ கல்லுரிக்கு ஒழுங்காக வந்தாய் !

வருகை பதிவு குறையாமல் இருப்பதற்கு;

எந்த பிகர் இன்று உன்னுடையதோ !

அது நாளை மற்றொருவராகிறது !

மற்றொரு நாள் அது வேறொருவராகிவிடும்...






Thanks to Baaneerjee!

Wednesday, August 8, 2012

கணவர் சந்தேகப்படுறாரு



வீட்டுக்காரருக்கு சந்தேகம்

பெண் : என்னோட கணவர் சந்தேகப்படுறாரு டாக்டர் !
டாக்டர் : அப்படின்னா மனநல மருத்துவமனைக்கு கூட்டிட்டு போங்க
பெண் : டாக்டர் அவர் சந்தேகப்படுறதே நீங்க, போலி டாக்டரா இருப்பீங்களோன்னுதான்.! ...

சீரியல் பார்த்து தூங்கத்தான்

மகேஷ் : எங்க ஆபிஸ்ல புதுசா டிவி வாங்கியிருக்கோம்
சுரேஷ் : என்ன திடீர்னு?
மகேஷ் : தூக்கம் வராம கஷ்டப்படுறவங்க டி.வி. சீரியல் பார்த்து தூங்கட்டுமேன்னுதான். ...

பெட்ரோலை குடிச்சிட்டார்

பெண் : டாக்டர் என்னோட கணவர் நீங்க குடுத்த டானிக்கை குடிக்கிறதுக்கு பதிலா பெட்ரோலை குடிச்சிட்டார்
டாக்டர் : அப்புறம் என்ன ஆச்சு?
பெண் : நீங்க குடுத்த டானிக்கை வண்டிக்கு ஊத்திட்டார். ...

ஆர்டர் கொடுத்தா வந்திடும்

சுதா : ஹோட்டல் சர்வரை கல்யாணம் பண்ணிக்கிட்டது ஒரு விதத்தில நல்லதா போச்சுடி
மகா : ஏன் அப்படி சொல்றே சுதா : நான் ஆர்டர் செய்தா போதும் உட்கார்ந்திருக்கிற இடத்திற்கே எல்லாமே வந்திடும். ...

வயலின் மேதை

மாலா : உன்னோட கணவர் வயலின் மேதையாமே நல்லா வாசிப்பாரா?
கலா : அட நீ வேற!....
வயலைப் பற்றி ஆராய்ச்சி பண்றதாலே கிராமத்தில விவசாயிகள் அவரை அப்படி கூப்பிடுறாங்க. ...

எல்லாமே மங்கலா தெரியுது

மகேஷ் : கொஞ்ச நாளாவே எனக்கு எல்லாமே மங்கலா தெரியுது
சுரேஷ் : டாக்டரை பார்க்க வேண்டியது தானே?
மகேஷ் : பார்த்தேனே அவரும் மங்கலாத்தான் தெரிஞ்சார். ...

கேள்வி கேட்க கூடாது

அம்மா : இன்னிக்கு உனக்கு இன்டர்வியூதானே ஏன் போகலை
மகன் : நீங்கதானேம்மா நாலு பேர் கேள்வி கேட்கிற மாதிரி நடந்துக்கு கூடாதுன்னு சொன்னீங்க அதான் போகலை. ...

Thanks to One India.com

Tuesday, July 17, 2012

மாப்பிள்ளை அழைப்பு


ஏன் மாமா வீட்டிற்கு டி.வி. வாங்கலை?
 

பையன் படிப்பு கெட்டுவிடும் அதனால் டி.வி. வாங்கவில்லை.
 

பையன் எங்க மாமா போயிருக்கான்.?
 

பக்கத்து வீட்டிற்கு டி.வி.பார்க்க போயிருக்கான்.
---------------------------------
 

கல்யாண வீட்ல, ரொம்பநேரமா செருப்புகளை உத்து உத்து பார்க்கறீங்கேள, உங்க செருப்பை கானோமோ?
 

ம்ஹும், நல்ல டிசைன் செருப்பா தேடிக் கிட்டிருக்கிறேன
-----------------------------------
 

ஹேலோ அது நான் பார்த்து வெச்சிருக்குற செருப்பு, நீங்க வேற ஏதாச்சும் எடுத்துக்குங்க
 

அடப்பாவி இது என்னோட சொந்த செருப்புய்யா.
-------------------------------

மாப்பிள்ளை அழைப்பு எங்கியிருந்து ஆரம்பம்!
 

சென்டரல் ஜெயிலில் இருந்து.
--------------------------------------
ஒரு மாசமா என்னால் வாயை திறக்கவே முடியலை சார்...!
என்னாச்சி?
 

போன மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்ச!
---------------------------------------

நூறாவது


என் பர்ஸை பிக்பாக்கெட் அடிச்ச திருடன் கிட்ட இருந்து எனக்கு பார்சல் வந்திருக்கு! 

என்னன்னு!
 

அவன் அடிச்ச நூறாவது, பர்ஸ் என்னோடதாம். அதுக்காக எனக்கு ஸ்வீட் அனுப்பியிருக்கான்.
--------------------------------------
நம்ம கபாலி ரொம்ப சின்சியர்
எப்படி சார்?
நேத்து நைட் 12 மணிக்கு திருடிட்டு, ஒரு மணிக்கே வீட்டுக்கு வந்து மாமூல் கொடுத்துட்டு போறான்.
--------------------------------------

ஒரே வீட்ல பத்து தடவைக்கு மேலே திருடியிருக்கியே ஏன்?
நான் அவங்க பேமிலி திருடன் எஜமான்!
------------------------------
உன் பல்லழகைப் பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல் இருக்குன்னு என் காதலிகிட்டே சொன்னது தப்பாப் போச்சு
 

என்னவாம்?
 

பார்த்துகிட்டே இருங்கன்னு சொல்லி பல்செட்டை கழட்டி என் கையில கொடுத்துக்கிட்டு போயிட்டாள்!.
------------------------------------

இங்கே ஒருத்தன் நாயா கத்திக்கிட்டிருக்கேன் எங்கடிபோன?
 

உங்களுக்கு பிஸ்கட் வாங்க தாங்க போனேன!
-------------------------------------
திடீரென்று செருப்புக்கடை வச்சிருக்கியே எவ்வளவு மூலதனம் போட்டே?
 

மூலதனம் உழைப்புதான் எதிரே இருக்கிற கல்யாண மண்டபத்தில் 7 வருடம் வாச்மேனாக வேலை பார்த்தேன்.
 -------------------------

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...