_______________________
Total Pageviews
Wednesday, February 22, 2023
கொஞ்சம் சிரிங்க பாஸ் !
Thursday, October 29, 2020
முதல் கணவன் !
காதலி : என்னங்க நீங்க மல்லிகைப் பூ, அல்வா வாங்கி தருவதற்கு பதிலா,
கற்பூரம், வாழைப்பழம், ஊதுபத்தி எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கீங்க?
காதலன் : ஏன்னா, நம்ம காதல் தெய்வீக காதல்! அதான்டா செல்லம்!
***********************
கல்லறையின் முன்னால் ஒருவன். "நீ இறந்து இருக்கவே கூடாது.
நீ இறந்ததனால் நான் எவ்வளவு கொடிய துன்பங்கள் அனுபவிக்கிறேன் தெரியுமா?
என் வாழ்க்கையே நரகமாகி விட்டது.!
நீ சாகாமல் இருந்திருக்கக் கூடாதா?"
என்று அதையே திரும்பத் திரும்பச் சொல்லி அழுது கொண்டிருந்தான்!
அங்கு வந்த ஒருவர் அவனைப் பார்த்து இரக்கப் பட்டார். ஆறுதல் சொல்ல நினைத்தார்!
அவனருகே வந்த அவர் "இறந்து போனவர் உன் தந்தையா?" என்று கேட்டார்.
"இல்லை" என்றான் அவன்.
"மகனா?" என்று கேட்டார் அவர்.
"இல்லை" என்றான் அவன்.
வியப்பு அடைந்த அவர், "இறந்து போனவர் உனக்குத் தந்தையும் இல்லை மகனும் இல்லை என்கிறாய்.
எதற்காக இப்படி அழுது புலம்புகிறாய்? அவர் உனக்கு என்ன உறவாக வேண்டும்?" என்று கேட்டார்.
"இறந்து போன இவர் என் மனைவியின் முதல் கணவன்" என்று
அழுதுகொண்டே சொன்னான் அவன்!
விஞ்ஞானி !
மனைவி சண்டையிட்டு சவுண்ட் குடுத்த உடனே...
கதவு ஜன்னல் எல்லாத்தையும் சாத்தறவன் - மனுஷன் !
டிவி.. வால்யூமைக் கூட்டறவன் - பெரிய மனுஷன் !
சட்டையை எடுத்து போட்டுக்கிட்டு வெளிநடப்பு செய்றவன் -- ஞானி!
நைஸ்/சைஸ் பண்ணி மனைவியை கூட்டிகிட்டு வெளியில போறவன் - விஞ்ஞானி !
*******************************
சார்..சார்.. என் பொண்டாட்டிய காணோம்..!
யோவ் இது போஸ்ட் ஆஃபீஸ்!
அய்யோ! அய்யோ!
சந்தோஷத்துல என்ன செய்யுறதுன்னே தெரியல சார்..!
***************************************************************************
மனைவி: டிபன் வேணுமா?
கணவன்: சாய்ஸ் இருக்கா?
மனைவி: ரெண்டு இருக்கு..!
கணவன்: அப்படியே என்னடி அது?
மனைவி: வேணுமா? வேண்டாமா?
**************************************************************************
நிருபர் : கல்யாணமாகி 25 வருஷத்துல ஒரே ஒரு தடவ தான்
உங்க கணவர் கிட்ட நீங்க சண்டை போட்டு இருக்கிங்களா?
ஆச்சரியமா இருக்கே..?
நடிகை : ஆமா சார் !
நிருபர் : அவர பார்க்கலாமா ?
நடிகை : அந்த சண்டையில வீட்ட விட்டு போனவரு தான் 25 வருஷமாச்சு இன்னும் திரும்பி வரல..!
நிருபர் : !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
*************************************
கறுப்பு குதிரை !
டாக்டர் : "சொல்லுப்பா.. உடம்புக்கு என்ன?"
"எனக்கு வயிறு வலிக்குது டாக்டர்"
"நான் மனநோய் மருத்துவர். வயிறு வலிக்கு நீ பார்க்க வேண்டிய டாக்டர் அடுத்த தெருவுல இருக்கார்."
"அவர் அங்கயே இருக்கட்டும். எதனால எனக்கு வயிறு வலின்னு கேளுங்க டாக்டர்"
"சரி எதனால வலி?"
"நான் ஒரு குதிரையை முழுங்கிட்டேன்!"
"ஓ...அப்படீன்னா நீ இங்க வர வேண்டிய ஆள் தான். உள்ள ரூம்ல வந்து படு!"
உள்ளே அழைத்துச் சென்று, அவனுக்கு ஊசி போட்டு தூங்க வைத்தார். அவன் வழியிலேயே சென்று அவனை குணப்படுத்த எண்ணிய டாக்டர், உயிருள்ள ஒரு குதிரையை கொண்டு வந்து மருத்துவமனை வாசலில் கட்டச் செய்தார். தூங்கி எழுந்ததும், டாக்டர் அவனருகில் சென்று சொன்னார்.
"அப்பாடா! எல்லாம் நல்லபடியா முடிஞ்சது"
"நீங்க என்ன சொல்றீங்க டாக்டர்?"
"நீ நிஜமாவே ஒரு பெரிய குதிரையை முழுங்கியிருந்தே.. அதை ஆபரேஷன் செய்து வெளியே எடுத்துட்டோம். நல்ல வேளை, உடனடியா நீ என்கிட்ட வந்ததால பிழைச்சிக்கிட்ட... அந்த குதிரையும் பிழைச்சிட்டுது"
"அப்படியா டாக்டர்...அந்தக் குதிரையை நான் பார்க்கலாமா?"
"வாசலில் கட்டிப் போட்டிருக்கேன். வந்து பார்"
அவன் மெல்ல எழுந்து, அடி மேல் அடி வைத்து வாசல் பக்கம் போனான். அங்கே குதிரையைப் பார்த்தான். எதுவும் பேசாமல் டாக்டர் பக்கம் திரும்பினான். டாக்டர் பெருமிதத்துடன் அவனைப் பார்த்தார்.
"பளார்!!"
எதிர்பாராமல் அவன் அறைந்ததால் நிலைகுலைந்த டாக்டர், "எதுக்குய்யா என்னை அடிச்சே" என ஆவேசமாக கேட்டார்.
"நீங்க ஒரு போலி டாக்டர்.!
நான் முழுங்குனது வெள்ளை குதிரை !
ஆனா நீங்க கறுப்பு குதிரையை காட்டி ஏமாத்தப் பாக்குறீங்க!"
டாக்டர் மயங்கி விழுந்தார்.
கொரோனா நகைச்சுவை !
கொரோனா வைரஸும் மனைவியும் ஓன்னுதான் !
எப்படி சொல்லுறே!
சத்தம் போட்டு, சண்டை போட்டு பலனில்லை!
சோப்பு போட்டு பாரு! நல்ல பலன் கிடைக்கும்!
******
நோயாளி: வணக்கம் டாக்டர். உடம்பு சரியில்லை டாக்டர்.
டாக்டர்: ஆமாம். செக் பண்ணி பாத்ததுல. காய்ச்சல்னு தெரியுது.
நோயாளி: என்ன பண்ணலாம் டாக்டர்.
டாக்டர்: உங்களுக்கு ஒரு ஊசி போடணும். ஆமாம். சாதா ஊசியா? இல்லை ஸ்பெஷல் ஊசியா?
நோயாளி: இரண்டுக்கும் என்ன வித்தியாசம் டாக்டர்.
டாக்டர்: ஸ்பெஷல்னா, ஊசி போட்ட இடத்துல நர்ஸ் தேய்ச்சிவிடுவாங்க. சாதான்னா கம்பவுண்டர் தேய்ச்சி விடுவாரு.
நோயாளி: ஹி... ஹி... ஹி...
******
உலகத்த நினைச்சேன் சிரிச்சேன்!
டேய் ஏன்டா சிரிக்குறே.!
அண்ணே ! இவங்க நாளைக்கு செவ்வாய் கிரகத்துல கால் வைப்போம்னு சொன்னாங்க!
இன்னைக்கு வீட்டுக்கு வெளியில கூட கால் வைக்க முடியல!
அத நினைச்சேன்! சிரிச்சேன் !
*******
என்ன ஒரு காலக்கொடுமை கதிரவா!
போன வருஷம் சும்மா இருந்தேன் !
வேலைவெட்டிக்கு போகாம தண்டச்சோறு தின்னுதுன்னு சொன்னவங்க எல்லாம்....
இந்த கொரனா வந்த அப்புறம்....
என்னைய பாத்து , உன்னய மாதிரி எல்லோரும் இருந்தா மட்டும் தான் இந்த உலகத்தை காப்பாத்த முடியும் பெருமையா சொல்றானுங்க !
என்ன ஒரு காலக்கொடுமை கதிரவா!
*******
Friday, March 20, 2020
பேர் அப்புறம் வைச்சுகலாம் !
ஆசிரியர் : எல்லாரும் உங்கள் நோட்டில் ஒரு
"பாக்ட்டிரியா" படம் வரையுங்கள்..
நம்ம மாணவன் : இதோ வரைந்து விட்டேன் ஐயா...
ஆசிரியர் : என்ன படம் வரைந்து விட்டாயா..... ஆனால் உன் நோட்டில் எதுவுமே
இல்லையே....
நம்ம மாணவன் : ஐயா நீங்கள் தானே சொன்னீர்கள் பாக்ட்டிரியாவை வெறும் கண்களால்
காண முடியாது........நுண்ணோக்கியால் மட்டுமே காண முடியும் என்று......அதனால்
தான் உங்களால் அதை காண முடியவில்லை...
ஆசிரியர் : !!! எப்படியேலாம் யோசிக்கிறாங்க..
**********************************************************************************
நோயாளி : என்ன டாக்டர் இது, மருந்து சீட்டில்
சா-வுக்கு முன், சா-வுக்கு பின் அப்படினு
போட்டிருக்கீங்க.
டாக்டர் : அதுக்கு ஏன் இப்படிப் பதர்றீங்க! சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின்
அப்படின்னு எழுதியிருக்கேன்!
**********************************************************************************
கோர்ட்டில் அந்த விவாக ரத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது.
பிரதிவாதியான மனைவி தன் கணவர் தன் மேல் அபாண்டமாகப் பழி போட்டு இந்த
விவாகரத்தைக் கேட்டிருப்பதாக வாதாடியதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பமாயிற்று.
அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார்.
“அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை?”
“அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க”
“ப்ச்.. உங்களுக்கிடையில் என்ன தகராறு?”
“எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?”
“அடாடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது”
“தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடம்”
“கருத்து வேறுபாடு ஏதாவது உண்டா?”
“அவரு கருப்புதாங்க. நானும் கறுப்புதான… அதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க”
“வீட்டுக்காரரோட என்ன சண்டை?”
“வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை, மாசம் ஒண்ணாம் தேதி வாடகையை வாங்கிட்டு அவரு
பாட்டுக்கப் போயிடறாரு”
இதற்கு மேல் அவரால் தாங்க முடியவில்லை.
“எதுக்காக விவாகரத்து கேட்கிறார்” என்று அலறி விட்டு இருமினார்.
“ஓ..அதுவா… என்னோட பேசறப்ப எல்லாம் ரத்தக் கொதிப்பு வந்துடுதாம். நீங்க நல்லாத்தான
பேசிகிட்டு இருக்கீங்க… உங்களுக்கென்ன ரத்தக்
கொதிப்பா வந்திரிச்சு? இது அபாண்டம்தானே?”
**********************************************************************************
அப்பா; என்னடா உன் அம்மா காலைல இருந்து பேசாம இருக்கா..?
பையன்; அம்மா ''lipstick'' கேட்டாங்க நான் தெரியாம ''fevistick'' வாங்கி
கொடுத்துட்டேன்பா...
அப்பா; நீ என் மகன் இல்லடா.., என் சாமிடா....!!!!!!
**********************************************************************************
மனைவி:- உண்மையை சொல்லுங்க நேத்து ராத்திரி கனவுல யார் வந்தா….?
கணவன்;- நீதான் வந்த..
மனைவி;- பொய் சொல்லாதிங்க நீங்க தூக்கத்தில நல்லா பேசிகிட்டு இருந்த்தீங்களே..
**********************************************************************************
மனைவியை அடிக்கும் ஆண்களுக்கெல்லாம் என்ன தண்டனை தரலாம் மன்னா..?”
“தண்டனையாவது… உடனே அந்த வீரர்களை நம் படையில் சேர்த்துவிடுங்கள்!”
**********************************************************************************
மனைவி: என்னங்க! இன்னைக்கு குழம்பு வைக்கட்டுமா, ரசம் வைக்கட்டுமா?
கணவர்: முதல்ல வை… அப்புறம் பேர் வைச்சுகலாம்…
பழைய வீட்டுக்காரர்..!"
நடத்துனர்: விசில் அடிச்சிக்கிட்டே இருக்கேன், நீ பாட்டுக்க போய்க்கிட்டே இருக்கே?''
30 நாட்களும் முப்பது விதமான உப்புமா செய்வதெப்படி !
"வக்கீல் சார்... என்னய எம் பொண்டாட்டிட்டருந்து காப்பாத்துங்க சார்... காப்பாத்துங்க...!!" "ஏம்ப்பா... என்ன நடந்துச்சி...!...
-
ஒருத்தர்க்கு அவர் மனைவி வளர்க்கிற நாயைக் கண்டாலே எரிச்சலா இருந்தது. ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிர...
-
டாக்டர் , எங்க தொட்டாலும் வலிக்குது" "எங்கே தொட்டாலுமா?" "ஆமாம், டாக்டர் " "எங்கே, இடது காலைத் தொடுங்க...
-
சோமு: என் மனைவி எப்போ சொன்னாலும், எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காம உப்புமா செய்து தருவா.. ராமு : உப்புமாவில வண்டும், புழுவுமா இருக்கி...