Total Pageviews

Thursday, October 25, 2012

இளவரசி அடங்காபிடாரியா அரசே!


மன்னர் இரவு நேர நகர்வலத்தை பன்னிரண்டு மணியோடு முடித்துக் கொள்கிறாரே ஏன்?
மிட் நைட் மசாலா ரசிகராம் அதான்.

படையெடுத்து வந்த எதிரி மன்னனை நம் மன்னர் பக்குவமாக மடக்கிட்டார்...
எப்படி?
அந்தப்புரத்தை அப்படியே எழுதி வைச்சிடறதா சொல்லிட்டாரு!

அரிசந்திரனுக்கு பிடித்த பிஸ்கட் எது?
ட்ரூ பிஸ்கட்

மன்னர் ஏன் இப்பொழுதெல்லாம் நகர்வலம் போவதில்லை?
நாய்தொல்லை தாங்க முடியவில்லையாம்.

சிங்கத்தை அடக்கும் தைரியசாலிக்கு தன் மகளை மணம் செய்து வைப்பதென்று முடிவு செய்திருக்கிறேன் மந்திரியாரே!
இளவரசி அவ்வளவு பெரிய அடங்காபிடாரியா அரசே!

போர்கைதி தெரியும், அதென்ன பேர் கைதி.
அரசரை பேர் சொல்லி கூட்பிட்டானாம்.

மகாராணியின் நகைகளை மார்வாடி கடையில் அடகு வைக்கும் போது இவனை கையும் களவுமாக பிடித்து வந்திருக்கிறோம் மன்னா...!
அடப்பாவிங்களா கைச் செலவுக்கு காசில்லைன்னு நான் தான் யாருக்கும் தெரியாமல் அடகு வைக்கச் சொன்னேன்.

No comments:

Post a Comment

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...