Total Pageviews

Friday, February 22, 2013

நின்று கொண்டே சாப்பிட்டு விடுவேன்.



சர்வர்: சார்...என்ன சாப்பிடுறீங்க?

சாப்பிட வந்தவர்:  நாலு கிலோ அரிசியும், ஒரு கிலோ உளுந்தும் ஆட்டிக் கொடுத்தால் என்ன டிபன் கொடுப்பியோ அதைக் கொடுப்பா...

சர்வர்:  ?.....!.....?.

-------------

ஒருத்தி: ஆம்பளை சமைத்து எனக்கு உட்கார்ந்து சாப்பிட பிடிக்காதுடி...

மற்றவள்:  நீயே சமைத்து விடுவாயா..?

ஒருத்தி:  இல்ல...டைனிங் ஹாலில் நின்று கொண்டே சாப்பிட்டு விடுவேன்.

----------------

டைப்பிஸ்ட்:  ஏன் சார்...இரண்டு நாளா உங்க மனைவிதான் சமைக்கிறார்களா..?

மானேஜர்:  உனக்கு எப்படிம்மா தெரியும்..?

டைப்பிஸ்ட்:  இரண்டு நாளா சாப்பாட்டை கீழே கொட்டி விடுகிறீர்களே...

--------------

ஒருவர்:  என்னப்பா இட்லி மல்லிகைப் பூ போல இருக்கும்னு சொன்னே... நீலக் கலரா இருக்கே?

சர்வர்:  சொட்டு நீலம் கொஞ்சம் அதிகமாயிடுச்சு சார்...

----------------------------

ஒருவர்:  பாதிப்பேர் பந்தியில இருந்து பாதியிலேயே எழுந்து போயிட்டாங்களே..?

மற்றவர்:  ஐம்பது ரூபாய் மொய் எழுதினவர்களுக்கு பாயசம் இல்லேன்னு சொல்லிட்டாங்களாம்...

--------------------------

ஒருவன்: உங்கப்பாவிற்கு மணி அடிச்சா சாப்பாடுன்னு சொல்றியே...ஸ்கூல் வாத்தியாரா இருக்காரா..?

மற்றவன்:  இல்லடா...வேலூர் ஜெயிலில் இருக்கிறார்...

**********************************

No comments:

Post a Comment

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...