Total Pageviews

Monday, May 18, 2015

பாவம் பண்ணுறவங்க தான் சாமி ! தர்மம் பண்ணுவாங்கன்னு!



டாக்டர்: யோவ். இது ஆஸ்பத்திரி ! நான் டாக்டர்ய்யா...!

பிச்சைகாரர்: பாவம் பண்ணுறவங்க தான் சாமி !  தர்மம் பண்ணுவாங்கன்னு!  அதான் இங்கே வந்தேன்!  சாமி...!

==============

நோயாளி: எனக்கு வந்தது ஜுரம் இல்லேன்னு எப்படி டாக்டர் சொல்றீங்க?

டாக்டர்: நான் கொடுத்த மருந்தை சாப்பிட்டு சரியாயிடுச்சுன்னு சொல்றீங்களே. அதுனாலே தான் சொல்றேன். !

==============

நோயாளி: : எனக்கு ஆபீஸ்ல தூக்கம்  தூக்கம்  தூக்கமா வருது.... டாக்டர்!

டாக்டர்: அலுவலகத்தில தூக்கம் வரலையின்னா தான் பிரச்சனை! you are perfectly all right !

==============


நோயாளி: ஒரு மாசமா உங்ககிட்டே வைத்தியம் பாத்தும் ஒன்னுமே சரியாகாதது வருத்தமா இருக்கு டாக்டர்!

டாக்டர்: என் சர்வீஸுலேயே நான் ஒரு மாசம் வைத்தியம் பாத்து உயிரோட இருக்குறது நீங்க ஒருத்தர் தான் ! அதை நினச்சு சந்தோஷப்படுங்க !.

==============

நர்ஸ்: நம்மகிட்டே ஒரு யூனிட் ரத்தம் தான் இருக்கு. ஆனா ரெண்டு யூனிட் தேவைப் படுது...டாக்டர்!

டாக்டர்: பரவாயில்லே.. கொஞ்சம் தண்ணி கலந்து ரெண்டு யூனிட்டா மாத்திடுங்க..!

==============

1 comment:

ஆள்காட்டி விரல்ல நகச்சுத்தி வந்திருக்கு" !

  டாக்டர் , எங்க தொட்டாலும் வலிக்குது" "எங்கே தொட்டாலுமா?" "ஆமாம்,   டாக்டர் " "எங்கே, இடது காலைத் தொடுங்க...