Total Pageviews

Wednesday, June 3, 2015

ஏதோ கதை இருக்குன்னு ........ஜனங்க நம்புவாங்க !'



காவல் துறை அதிகாரி : யோவ்! நான் இல்லாதப்ப புகார் தர வந்த பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணியமே?'

காவலர்  : 'நீங்கதானே அய்யா, உங்க வேலையையும் சேர்த்து என்னை பார்க்க சொல்லிட்டு போனிங்க!' அதான் !

**************************

நர்ஸ் : ஆப்ரேசன் தியேட்டலேர்ந்து நோயாளி ஏன் பயந்து ஒட்றாரு?..'

வார்டு பாய் : 'ஆப்ரேசன் தியேட்டர் உள்ளே ’கடமையை செய் பலனை எதிர் பார்க்காதே’ அப்படின்னு  டாக்டர் எழுதி வச்சிருக்காரே!' அதான் பயந்து ஒடுறார் !

*************************

காதலன் : டார்லிங்! நமக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கனும்னு கோயில்ல நேற்று பிரார்த்தனை செய்தேன் பலிக்குமா?'

காதலி : 'அம்பது சதவிகிதம் பலிச்சிடுச்சி! வீட்ல எனக்கு வாத்தியார் மாப்பிள்ளை பார்த்துட்டாங்களே!

***************************

சினிமா இயக்குனர்: இந்தக் கதையை சினிமாவா எடுக்க நான் பத்து வருடம் தவம் இருந்தேன் !'

தொலைக்காட்சி நிருபர் : ஏன் ?

'சினிமா இயக்குனர்: இதே கதையை வெச்சு, இதுக்கு முந்தி வந்த படத்தை ஜனங்க மறக்க வேண்டுமா?' அதான் !

**************************

தொலைக்காட்சி நிருபர் : எதுக்கு நீங்களே ஒரு ஆளை செட் பண்ணி ’உங்க படத்தோட கதை என்னோடது’ன்னு கேஸ் போட வெச்சிருக்கீங்க ?'

'சினிமா இயக்குனர்: அப்பதானே படத்துல ஏதோ கதை இருக்குன்னு ஜனங்க நம்புவாங்க !' படம் பார்க்க வருவாங்க ! அதான் !

******************************


No comments:

Post a Comment

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...