Total Pageviews

Friday, October 9, 2015

நான் கொஞ்சம் கவுரவமானவன் !




ராதா: "அந்த நடிகை ரொம்ப மனித நேயம் உள்ளவருன்னு எப்படிச் சொல்றே?

சீதா: " "தன்னோட முன்னாள் 5  கணவர்களுக்கு மாதாமாதம் கருணைத் தொகை அனுப்புறாங்களே!"

***************************************

பிச்சைக்காரன் 1: அதோ உண்டியல் குலுக்கிக்கிட்டுப் போறாரே கட்சித்தலைவர். அவரும் நம்மளப் போலத்தான்!

பிச்சைக்காரன் 2: எப்படி சொல்றே...!

பிச்சைக்காரன் 1: அவருக்கு வசதி இருந்தும் பிச்சை எடுக்கிறாரு ! , நாம வசதியில்லாம பிச்சை எடுக்கிறோம் ! அதான்!.

******************************************

சாமியார் : தம்பி! உன் மனைவியை ஏளனமாக எண்ணாதே. அவள் பஞ்ச பூதங்களால் ஆனவள் !

ஒருவர் : ஓ! அப்படிங்களா சாமி? அவ அடிக்கும் போது மனுஷி அடிக்கிற மாதிரி இல்லையேன்னு நான் நினைச்சது சரியாப் போச்சு!!

***************************

TTR: ஏன்யா டிக்கெட் எடுக்காம போறே..... இதிலே ஏ.சி. பெட்டி கேக்குதோ...?"

பயணி :"எதிலேயும் நான் கொஞ்சம் கவுரவமா நடந்துக்குவேன் சார்!"

************************
அப்பா: "ரேங் கார்ட் எங்கடா?"

மகன்: "இந்தாங்கப்பா ரேங் கார்ட்" 

அப்பா: "அடப்பாவி, அஞ்சு சப்ஜெக்ட்லேயுமா ஃபெயில்?

மகன்: இது என் "ரேங் கார்ட் இல்லைப்பா ! இது உங்களோடது ! 

************************

No comments:

Post a Comment

ஆள்காட்டி விரல்ல நகச்சுத்தி வந்திருக்கு" !

  டாக்டர் , எங்க தொட்டாலும் வலிக்குது" "எங்கே தொட்டாலுமா?" "ஆமாம்,   டாக்டர் " "எங்கே, இடது காலைத் தொடுங்க...