Total Pageviews

Monday, January 23, 2012

மாமியார் - மருமகள்


உன் மாமியார் காணாம போனதுக்கு சந்தோஷப்படாம கண்டுபிடித்து கொடுப்போருக்கு ரூ1000 பரிசுன்னு அறிவிச்சுருக்கியே ஏன்?
 
என்கிட்ட இருந்து தப்பிச்சு போய் அவங்க சந்தோஷமா இருந்தா விட்டுடுவேனா!

என் மருமக நல்ல டைப் உன்னோட சண்டை போடமாட்டாளே?

ஊஹும், சண்டை போடறப்ப எனக்கு அடிப்பட்டா உடனே டாக்ட ர்கிட்டே அழைச்சிட்டு போய் முதலுதவி செஞ்சுடுவா.

என் மருமகள் அக்கிரமம் தாங்க முடியலை என்ன பண்றா?

என்னைப் பார் சிரின்னு வாசல் கதவுல எழுதி அதுக்கும் மேலே நான் சிரிக்கிற மாதிரி இருக்கிற போட்டோவை மாட்டி வச்சிருக்கா.

என் மாமியாரை நான் மதிப்பேத இல்லை? எப்படி?
அட நான் என் மாமியாரையே மதிப்பது இல்லை
உன் மாமியாரையா மதிப்பேன்.

ஊர்ல இருந்து வந்த உன் மாமியார் ஏன் கோபமா இருக்காங்க?

திருஷ்டி படம் காணாம போயிருச்சுன்னு என் மாமியார் படத்தை மாட்டி வைச்சிருந்தேன்...!

தினமும் சண்டை போடுற என் மனைவியையும் அம்மாவையும், ஒரு திருடன் தான் சேர்த்து வெச்சான்...!

எப்படி? ரெண்டு பேரையும் ஒரேகயித்துல ஒண்ணா கட்டிப்போட்டு திருடிட்டுப் போனான்...!

மாமியார் முகத்ல அயன் பாக்ஸ் வெச்சு தேய்ச்சியா ஏன்?

முகத்துல சுருக்கம் விழுதுன்னு சொன்னாங்க அதான்.

எல்லாம் சரி, இப்படி மொட்டையா வந்து புகார் கொடுத்தா அதையெல்லாம் ஏத்துக்கமாட்டோம். என்ன சார் அநியாயமா இருக்கு,

 அப்ப என் தலையில் முடிவளர்ற வரைக்கும் நான் புகாரே கொடுக்க முடியாதா?

உங்க வீட்டுல மாமியார் மருமகள் சண்டை நடந்தா நீங்க எந்த பக்கம்?

 பயங்கர ஆயுதங்களோட யார் இருக்காங்களே அவங்க பக்கம்.

உன் மாமியார் கிணற்றில் விழுந்தேபாது நீ பக்கத்தில் தான் நின்று கொண்டிருந்தாயா? ஆமாம் அதுக்கு என்ன?
நீ, ஏன் எதுவும் பண்ணவில்லை?

 டாக்டர் எதுக்கும் உணர்ச்சி வசப்பட கூடாதுன்னு சொல்லி இருக் கிறார்.

இன்னிக்கு என்ன உன் மாமியார் சந்தோஷமா இருக்காங்க?

இன்னிக்கு நாங்கள் போடற சண்டை இண்டர் நெட்டிலே தெரியப்போகுதாம்.

No comments:

Post a Comment

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...