Total Pageviews

Saturday, July 14, 2012

ஏட்டு ஏகாம்பரம் மகளுக்கு கல்யாணமாம்


ஒருவன்: என்ன வெறும் ரவுடிகள் கூட்டமா இருக்கு..?
மற்றவன்: ஏட்டு ஏகாம்பரம் மகளுக்கு கல்யாணமாம்
-----------------------------

ஒருவன்: மாட்டை பிடிக்கிறவருக்கு என் மூத்த பெண்ணைக் கட்டிகொடுப்பேன்...
மற்றவன்: உங்க வீட்டு கன்றுகுட்டியை பிடிச்சா இளைய பெண்ணை கட்டி தருவீங்களா...?
---------------------------------------
ஒருவன்: எங்களுக்கு இரண்டு வீடு, பத்து ஏக்கர் நிலம், கார் எல்லாம் இருக்குடா.
மற்றவன்: அப்புறம் ஏண்டா இப்படி கஷ்டப்படற.

ஒருவன்: அதெல்லாம் அடமானத்துல இருக்கு.
*********
"வீட்டுக்காரர்: என்னோட வீட்டுல நிறைய காலியா இருக்கு. உங்களுக்கு எது பிடிச்சிருக்கோ அங்க குடியேறலாம்.
மற்றவன்: உங்க பொண்ணு மனசு காலியாக இருக்கா?

*********
ஒருவன்: உன் பேரு கருப்புசாமிதானே... உன் மனைவி உன்னைய கரும்புன்னு கூப்பிடுறாங்களே...
மற்றவன்: என்னைய சக்கையா பிழிஞ்சு எடுக்கத்தான் அவ அப்படி கூப்பிடுவாரு"
*********
மகன்: அப்பா அம்மாவும் கரண்ட்டும் ஒண்ணுன்னு சொல்றீங்க... ஆனால் வித்தியாசமிருக்குன்னு சொல்றீங்க...
அப்பா: கரண்ட் தொட்டால் ஷாக்கடிக்கும். உங்க அம்மா பேரைக் கேட்டாலே ஷாக்கடிக்கும்.
*********
ஒருவன்: கூட்டத்தில உன் மனைவி பேரைச் சுருக்கிச் செல்லமாக் கூப்பிட்டதுக்கு அங்கிருந்தவங்க எல்லோரும் ஓடிட்டாங்களா....?
மற்றவன்: ஆமாம். பாமாங்கிற அவ பெயரை பாம், பாம்னு சொல்லிக் கூப்பிட்டேன்.

*************
ஆசிரியர்: மூன்றையும், மூன்றையும் கூட்டினால் ஆறு வரும். புரியுதா?
மாணவன்: காவேரியா, வைகையா சார்?
****************

No comments:

Post a Comment

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...