Total Pageviews

Saturday, July 7, 2012

நம்ம டாக்டர் நாலு உயிர்களை காப்பாத்திட்டார்.


மருந்து குடித்தவுடன் ஒருவர் எகிறி எகிறி குதிக்கிறாறே ஏன்?
 

டாக்டர் மருந்தை சாப்பிடும் முன் நன்கு குலுக்கி விட்டு சாப்பிட சொன்னாராம். ஆனால் அவர் மருந்தை குலுக்காமல் அப்படியே சாப்பிட்டு விட்டாராம். அதான
--------------------------------------------

ஒரு சைடு மூக்ல மட்டும் பொடி போடுறீங்களே ஏன்?
 

மூக்குப் பொடி போடறதை டாக்டர் பாதியா குறைச்சுக்க சொ ன்னாருங்க அதான்.
-------------------------------------------

டாக்டர் நீங்க இன்னிக்கு ஆப்ரேஷன் பண்ண இருந்த பேஷண்ட் தப்பி ச்சு ஓடிட்டார்.
 

சரி பரவாயில்லை விடுங்க பிழைச்சு போகட்டும்.
-----------------------------------------------

டாக்டர்: இன்னிக்கு உங்களுக்கு ஆப்ரேஷன்
நோயாளி: போங்க டாக்டர் இன்னிக்தான் நர்ஸ் சிரிச்சு, சிரிச்சு பேசினாங்க.
                        இப்படி சொல்லி என்னை கஷ்டப்படுத்திறீங்க.
---------------------------------------------
டாக்டர் நான் செத்து போய்விடுவேனா டாக்டர்,
இல்லை...! இல்லை...! நான் வைத்தியம் பண்ணினவங்கள்ள பத்துக்கு ஒன்பது பேர்தான்  சாவாங்க...! நீங்கபொழச்சிப்பீங்க! ஏன்னா ஏற்க்கனவே 9 பேர்  போய் சேர்ந்துட்டாங்க.
-----------------------------------------
ஆஹா, நான் பிழைச்சுட்டேன் ஆப்ரேஷன் சக்ஸஸ்.
 

யோவ் கத்தாத இது எமலோகம்.
-----------------------------------------
ரொம்ப சிரமமா இருக்கு டாக்டர்!
எது?
 

நர்ஸை சிஸ்டர்னு கூப்பிடுறது!
--------------------------------------------
உங்களுக்கு அல்சராமே?
 

அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறீங்க?
------------------------------------------
இன்னிக்கு நம்ம டாக்டர் நாலு உயிர்களை காப்பாத்திட்டார்...!
அப்படியா ...! எப்படி...!
 

இன்னிக்கு நடக்க இருந்த 4 ஆபரேஷனையும் தள்ளி வச்சிட்டார்...!
--------------------------------

No comments:

Post a Comment

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...