Total Pageviews

Wednesday, November 20, 2013

அரசாங்க ரகசியம்





"மன்னா! அரசாங்க ரகசியத்தை இந்த ஒற்றன் அறிந்து கொண்டான்…"

"நான் சமையலறையில் மகாராணிக்கு உதவியாக காய்கறி அரிந்துகொண்டிருந்ததை இவன் பார்த்துவிட்டானா…?"

---------------------------------

 "மன்னா, எதிரி நாட்டு மன்னனிடமிருந்து போர்ச் செய்தி வந்துள்ளது… என்ன பதில் அனுப்புவது…?"

"நீங்கள் அனுப்பிய ஓலை எமக்கு கிடைக்கவில்லை, என்று பதில் ஓலை அனுப்பிவிடலாமா…?"

------------------------------------

 "மன்னா, உங்களைப் பாட புலவர் வந்திருக்கிறார்…!"

"இப்போதுதான் மகாராணியிடம் பாட்டு வாங்கி வந்தேன்!"

--------------------------

 "மன்னா! புலவர் எழுதிய பாட்டில் உங்களைப் புகழ்ந்து தானே இருக்கிறது. ஏன் கோபப்படுகிறீர்கள்?"

"அமைச்சரே! ஓலையின் கீழே பாருங்கள். 'மேலே கூறியவை முழுக்க, முழுக்க கற்பனையே! யாரையும், எவரையும் குறிப்பிடுபவை அல்ல'னு எழுதியிருக்கே!"

----------------------------

No comments:

Post a Comment

ஆள்காட்டி விரல்ல நகச்சுத்தி வந்திருக்கு" !

  டாக்டர் , எங்க தொட்டாலும் வலிக்குது" "எங்கே தொட்டாலுமா?" "ஆமாம்,   டாக்டர் " "எங்கே, இடது காலைத் தொடுங்க...