Total Pageviews

Wednesday, November 20, 2013

சத்தியம் !





சுரேஸ் :  என்ன சார் தலைகொழுக்கட்டை மாதிரி வீங்கியிருக்கு..


ரமேஸ் :  “இனிமேல் அடிக்கமாட்டேன்” என்று என் மனைவி தலையில் அடிச்சு சத்தியம் பண்ணினா !

*********************

ஒருவன் : பொண்ணு “கிளி” மாதிரி இருக்காளே என்று தெரியாதனமா கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டது தப்பா போச்சுதுடா !

மற்றவன் : என்னாச்சுடா..?


ஒருவன் : பேசியதை திரும்பத்திரும்ப பேசி என் உயிரை வாங்கிக்கிட்டிருக்காடா.!

----------------------------------------------------

முதலாளி: தோட்டத்துச் செடிகளுக்கு எல்லாம் தண்­ணீ  ஊத்திட்டியா?

தோட்டக்காரன்: ஐயா! நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது !.


முதலாளி: அதனால் என்ன? குடையைப் பிடித்துக் கொண்டு தண்­ணீ ஊற்ற வேண்டியதுதானே.!


------------------------------------------------

ராஜா: அவர் திடீர் பணக்காரர் ஆன பிறகு கூட ஆள் மாறலைங்க…

ரவி : பரவாயில்லையே… நிஜமாகவா..?

ராமு: ஆமாம் அவர் எனக்குத் தரவேண்டிய நூறு ரூபாய் கடனை இன்னும் தரலை..
-----------------------------------------






No comments:

Post a Comment

ஆள்காட்டி விரல்ல நகச்சுத்தி வந்திருக்கு" !

  டாக்டர் , எங்க தொட்டாலும் வலிக்குது" "எங்கே தொட்டாலுமா?" "ஆமாம்,   டாக்டர் " "எங்கே, இடது காலைத் தொடுங்க...