Total Pageviews

Friday, November 6, 2015

கடன் வாங்க ஆரம்பிச்சுட்டேன்....



ராமு : நான் செத்த பிறகு நாலு பேராவது என்னைப் பற்றி பேசணும்ன்றதுக்காக........

கீதா : எல்லோர் கிட்டேயும்... கருணை காட்ட ஆரம்பிச்சுட்டீங்களா?

ராமு  : ம்ஹும்! எல்லார் கிட்டேயும்..... கடன் வாங்க ஆரம்பிச்சுட்டேன்....

********************************

சோமு: கடவுளே! எனக்கு ஒரு ரூம் நிறைய தங்கம் கொடு......

ராமு: எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு.......

கீதா: எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு........

சோமு - ராமு: ?!?!?!?!?!?

*****************************

"சோமு: நான் வனஜாவை லவ் பண்ற விஷயத்தை ஊர்ல இருக்கற எல்லார்ட்டயும் சொல்லிட்டேன்"

"ராமு: அப்புறம் ஏன் சோகமா இருக்கே?"

""சோமு: இன்னும் வனஜாகிட்டே சொல்லலையே?"

***************************

No comments:

Post a Comment

ஆள்காட்டி விரல்ல நகச்சுத்தி வந்திருக்கு" !

  டாக்டர் , எங்க தொட்டாலும் வலிக்குது" "எங்கே தொட்டாலுமா?" "ஆமாம்,   டாக்டர் " "எங்கே, இடது காலைத் தொடுங்க...