Total Pageviews

Thursday, November 26, 2015

சந்தோஷம் தான்! ...




ஜோசியர் : உங்களுக்கு ஒரு தோஷம் இருக்கு... 

கல்யாணம் ஆனா அது நிச்சயமா காணாமப் போயிடும் !

ராமு: அப்படி என்ன தோஷம்?

ஜோசியர்: வேறென்ன சந்தோஷம் தான்! ...

**************************************

ரமா: ஆனாலும் இந்த கீதாவுக்கு பணத் திமிர் அதிகம் தான்...

பாமா: ஏன் என்ன பண்ணினா?

ரமா: தீபாவளிக்கு ‘பருப்பு' வடை சுட்டு, எல்லா வீட்டுக்கும் கொடுத்து விட்ருக்கா... ...

பாமா: ஏன் ?

ரமா: பருப்பு ஒரு கிலோ 180/-  உளூந்து ஓரு கிலோ 170/- நல்லெண்ய் 1 லிட்டர் 220/- ரூபாய்.

*****************************

நண்பர் 1: மனைவி, மழை - இந்த ரெண்டுக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா?

நண்பர் 2: தெரியலையேப்பா...

நண்பர் 1: இந்த ரெண்டுமே இல்லாதப்போ எப்ப வரும்ன்னு ஏங்குவோம்.... வந்தா ஏண்டா வந்ததுதுன்னு புலம்புவோம்....!

********************************

No comments:

Post a Comment

ஆள்காட்டி விரல்ல நகச்சுத்தி வந்திருக்கு" !

  டாக்டர் , எங்க தொட்டாலும் வலிக்குது" "எங்கே தொட்டாலுமா?" "ஆமாம்,   டாக்டர் " "எங்கே, இடது காலைத் தொடுங்க...