Total Pageviews

Saturday, November 14, 2015

மழைக்கால நகைச்சுவை !



முதலாளி :  வேலைகாரரைப்பார்த்து, டேய் வேலா.. தோட்டத்துக்கு போய் எல்லா செடிகளூக்கும் தண்ணீர் ஊற்று !

வேலா: முதலாளி ஏற்கனவே மழை பெய்துக்கொண்டிருக்கிறது !

முதலாளி: அதனாலென்னா குடை பிடித்துக்கொண்டுபோய் தண்ணீர் ஊற்று..???

***************************************

புயல் மழையில் ஒருத்தன் பீட்ஸா வாங்க கடைக்குச் போறான்.

கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா...?

வந்தவர்: பின்ன.. இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பீட்ஸா வாங்க அனுப்புவாங்க...!??

அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்புனா...

******************************
பல்கலைக் கழகத்தில் மாணவர்களிடையே தலைவரை பேசவிட்டது, தப்பா போச்சுது…!

அப்படி என்ன பேசினார்?

பள்ளிக்கூடத்துப் பக்கம் மழைக்குக் கூட ஒதுங்காத நானே பல கோடி சம்பாதிக்கும்போது,

பல்கலைக் கழகத்தில் படிக்கும் நீங்கள் பல்லாயிரம் கோடி சம்பாதிக்க வேண்டாமா?ன்னு பேசிட்டார்..!

***********************************
 ராமு : ஏதோ ….உங்களை மாதிரி சிலர் இருக்கிறதனாலதான் கொஞ்சம் மழை பெய்யுது ! “

சோமு : ”அப்படியா… நான் அவ்வளவு நல்லவனா ?

ராமு :  இல்லை ! உங்களை மாதிரி இல்லைனா !” ” நிறையவே மழை பெய்யும் ! “

*************************************
"நாங்கள் ஏழு பேர்கள் ஒரே குடையின் கீழ் நடந்து சென்றோம். ஆனால், ஒருவர்கூட நனையவில்லை."

"அதெப்படி?" " அந்த நேரத்தில்தான் மழையே பெய்யவில்லையே!

*****************

No comments:

Post a Comment

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...