Total Pageviews

Thursday, February 2, 2012

பேய் வீட்டில் - இருபது வருஷமா



தலைவரை இரவில் கைது பண்ணி பகலில் விட்டுவிட்டார்களே
நம்ம தொடர்    போராட்டங்களை பார்த்து பயந்து தானே....

அட நீ ஒன்னு தலைவர் நேற்று ராத்திரி விட்ட குறட்டை கேட்டு சிறையிலுள்ளவர்கள் பயந்து போனதால் தான் உடனே விடுதலை...



நோயாளி : டாகடர் எனக்கு  அடிக்கு அடி நெஞ்சு வலிக்குது ?

டாகடர்:  மனைவிகிட்ட அடி வாங்கும்போது புற முதுகை காட்டாமல்
நெஞ்சு காட்டி நின்றால் இப்படித்தான் வலிக்கும்...



நோயாளி: டாக்டர் மருந்து சீட்டு கொடுக்காமல் உங்கள்
வீட்டு மளிகை சீட்டு கொடுத்துவிட்டீர்கள்....

டாக்டர்:இது நீங்கள் வந்ததுக்கு கன்சல்ட்டிங் பீஸ்...



திருடன்:  காலம் ரொம்ப கெட்டுபோச்சு

ஐயா திருடிட்டு போகும் போது பயமா இருக்கு  பாதுகாப்பு வேண்டும்...

போலீஸ்: இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியவில்லை...



கபாலி வரவர வழிப்பறி  அதிகமா இருக்கு இரவில் கொள்ளையடித்துவிட்டு போகும் போது பயமா இருக்கு....

போலீஸ்சங்கிலி ஒழுங்க கொள்ளை அடித்த பொருளை எங்கே வைத்து இருக்க என்பதை சொல்லிவிடு...

சங்கிலி: அதை நீங்கள் தான் கண்டுபுடிக்கணும் என்கிட்ட விளையாடதே ?

சங்கிலி:   நான் கொள்ளை அடித்து வரும்போது எவனோ வழிப்பறி செய்துவிட்டான் ஐயா...



டாக்டர்: நர்ஸ் நாம ஆப்ரேஷன் பண்ணவேண்டிய நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்தாச்சா ?

நர்ஸ்: நீங்க செய்யப்போவது போஸ்ட்மார்ட்டம்...

டாக்டர் அடச்சே கடைசிவரை போராடியும்  நோயாளியை காப்பாத்த முடியாமல் போச்சே ...! 

நர்ஸ்: டாக்டர் நீங்கள் செய்தது போஸ்ட்மார்ட்டம்... ஆப்ரேஷன் அல்ல :


மனைவிஇந்த பேய் வீட்டில் என்னால் இருக்கமுடியாது பயமா இருக்கு ?

கணவன் இருபது வருஷமா உன்னோடு வாழுகிறேன் நான் ஏதாவது
சொல்லிருகிறேனா இல்லை பயந்துபோன்னேனா
 
 

No comments:

Post a Comment

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...