Total Pageviews

Monday, February 6, 2012

இன்னொரு கல்யாணம்



மனைவி: என்னங்க நான் செத்துப்போயிட்டா.. என்ன பண்ணுவீங்க?

கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.

மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?

கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்.


வேலைக்காரி : உங்க பையன் என்னைப் பார்க்கிற பார்வையே ஒரு மாதிரி இருக்குங்க....

 முதலாளி : கவலைப்படாதே.... சித்திங்கற முறையில் பார்த்திருப்பான்.


"மாப்பிள்ளைப் பையன் வானிலை அறிவிப்பாளரா இருப்பான்னு சொல்றீயே! எப்புடி?" "பொண்ணு பிடிச்சும் இருக்கு. பிடியாமலும் இருக்கு, பிடிச்சும் பிடியாமலும் இருக்குன்னு குழப்புறாரே!"

ஒருவன் கடவுளிடம் : கடவுளே என்னோட பெண்டாட்டியை ஏன் ரொம்ப அழகா படைச்சிருக்கே?

 கடவுள் : அப்போ தான் நீ அவமேலே அன்பா சந்தோஷமா இருப்பே. அவன் : அதுசரி தான், அதே சமயம் அவளை ஏன் வடிகட்டின முட்டாளா படைச்சிருக்கே?

 கடவுள் : அப்பதானே அவ உன் மேலே அன்பா இருப்பா.


முடி வெட்ட வந்த வழுக்கைத் தலைக்காரர், சலூன்காரரிடம் : ஏம்பா, என் தலையிலே தான் முடி ரொம்ப கம்மியா இருக்கு இல்லே. முடி வெட்டறதுக்குப் பாதி பணம் வாங்கிக்கக் கூடாதா?

சலூன் கடைக்காரர் : உங்களுக்கு முடி வெட்டறதுக்காக நான் பணம் வாங்கலே சார். முடியைத் தேடிக் கண்டு பிடிக்கத்தான் பணம் வாங்குறேன்.

No comments:

Post a Comment

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...