Total Pageviews

Tuesday, March 6, 2012

கொஞ்சம் உசுப்பு!





வந்தவர்: உங்கப்பா என்ன பண்றார்?
 பையன்: தூங்கிட்டு இருக்கார் சார்!
 வந்தவர்: அவர் பேர் என்ன? பையன்: உ. சுப்பு சார்
 வந்தவர்: வரைக் கொஞ்சம் உசுப்பு!

 உங்க கடையில மருந்து வாங்கிச் சாப்பிட்டவங்க திரும்பி வர மாட்டாங்களா... ஏன்?" 
 "அந்த மருந்திலேயே அவங்க போய்ச் சேர்ந்திடுவாங்களே..!"



என்னடா? அவள் நெத்தியிலே பொட்டு வித்தியாசமா இருக்கு?"
 குடும்பக் கட்டுப்பாடு பண்ணியிருக்கா,
அதான் சிவப்பு முக்கோணப் பொட்டு வச்சிருக்கா!"


இந்தக் கம்ப்யூட்டர் 20 ஆயிரம் ரூபாயா? என்ன சார்?
எங்க மதுரையிலே 10 ஆயிரம் ரூபாதானே?"
"அப்போ மதுரையிலேயே போய் வாங்கிக்கோங்க!"
"மதுரைக்கு போறதுக்கு பஸ் சார்ஜ் கொடுங்க!"


மாடி ஏறிவந்து அட்ரஸ் கேட்டாரு ஒருத்தரு! கீழ்ப்பக்கத்திலே விசாரிங்கன்னேன். "கீழே போயி விசாரிச்சாரா?"
 "கீழ்ப்பாக்கத்திலே விசாரிக்கப் போயிருக்கானாம்! கிறுக்குப்பய!"


"வாய் பேச முடியலைன்னு கால்நடை டாக்டர்கிட்ட போனியா... ஏன்?" "(சைகையாக) வாயில்லா ஜீவன்களுக்கு கால்நடை மருத்துவரைத்தானே பார்க்கணும்


உங்க மனைவிக்கு துணி பைத்தியமா? நிறைய சேலை எடுப்பாங்களோ...
இல்லை நிறைய சேலையைக் கிழிப்பா


"இருபது வருசமா காதலர்களா இருக்கோம்ன்னு சொல்றீங்க. எப்படி?" 
"அவளும் தன் கணவர்கிட்ட சொல்லல...
நானும் என் மனைவிகிட்ட சொல்லல..."



No comments:

Post a Comment

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...