Total Pageviews

Friday, October 17, 2014

தனியாக நிற்கிறீர்களே, அதனால்தான்!




போலீஸ்: ஏ.டி.எம் கவுண்டர் முன்னாடி ஏன் சும்மா நிக்கறீங்க?
 
நம்மவர்: தெரிஞ்சவங்க யாராவது பணம் எடுக்க வந்தாங்கன்னா கடன் கேட்கலாம்ன்னுதான்.
--------

பேஷண்ட்: வீட்டுல சமையல் வேலையெல்லாம் உங்களோடதுதானா டாக்டர்?

டாக்டர்: ஆமாம், எப்படி கண்டுபிடிச்சீங்க?

பேஷண்ட்: மாத்திரைகளையெல்லாம் வகை வகையாப் பிரிச்சி அஞ்சரைப் பெட்டிக்குள்ள போட்டு வச்சிருக்கீங்களே, அதான் கேட்டேன்.
--------

எல்லோரும் லைசென்ஸ் எடுக்குறதுக்கு ஏன் அந்த ஆர்.டி.ஓ ஆபீசுக்கே போறாங்க?

அவங்க எட்டு போடறதுக்கு பதிலா அவங்கவங்க ராசிப்படி ராசியான எண்ணைப் போடச் சொல்றாங்களாம் அதான்!
--------

தலைவரே உங்களை கைது பண்ணச் சொல்லி மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக்கு!
யாருய்யா உத்தரவு போட்டது?
உங்க சம்சாரம்…!
--------

வாத்தியார் : எங்கே முட்டாள்களெல்லாம் எழுந்து நில்லுங்க!

சிறிது நேரம்வரை யாரும் எழுந்திருக்கவில்லை. பின்பு ஒருவன் மட்டும் தயங்கி தயங்கி எழுந்து நிற்கிறான்.

வாத்தியார் : (எல்லோரும் ஏளனமாக சிரிக்கின்றனர்!) நீ முட்டாள் என்று எப்படித் தெரியும்?

மாணவன் : அதெல்லாம் ஒன்றும் இல்லை! நீங்கள் தனியாக நிற்கிறீர்களே, அதனால்தான்!

No comments:

Post a Comment

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...