Total Pageviews

Thursday, September 6, 2012

நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்.


மனைவி: நம்ம பையன் வளர்ந்து என்னவாக ஆசைப்படுறீங்க?

கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்...
ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது...
நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்.
-------------------------

மனைவி - பால் எல்லாவற்றையும் பூனை குடிக்கும்வரை என்ன பண் ணிட்டீருந்தீங்க?
கணவன் - இந்த பூனையும் பால் குடிக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.
--------------------------------

என் மனைவி கிட்ட எனக்கு பிடிச்சதே அவளோட பொய் சொல்லாத குணம்தான்..
இல்லையே...நேற்றுகூட என் மனைவிகிட்ட 'என் புருஷன் அழகுன்னு' சொன்னாளாமே
--------------------

மனைவி: ஏங்க! நான் கார்ல போறப்ப நாலு அஞ்சு தடவை இந்த டிரைவர் ஆக்சிடென்ட் பண்ணப் பார்த்தான்! உடனே மாத்துங்க!

கணவன்: விடும்மா! இன்னும் ஒரே ஒரு சான்ஸ் கொடுத்துப் பார்ப்போம்!
-------------------------

என் மனைவி ஒரு மாதம் பிறந்த வீட்டிற்கு போயிருக்கா..
அதுக்கு சந்தொஷப்படாம ..வருத்தப்படறே..
அந்த ஒரு மாசம் இன்னியோட முடியறது.அதுதான் !
----------------------------

கணவன் - ஊருக்கு போய் சேர்ந்ததும் லெட்டர் போடு கமலா?
மனைவி -  ஏங்க?
கணவன் - அப்பதான் எனக்கு முழு சுதந்திரமே கிடைச்சமாதிரி.
-----------------------------------

கணவன்: உன் போட்டோவா இது...எனக்கே சந்தேகமா இருக்கு...
மனைவி: என் மேலே இருக்கிற சந்தேகம் எப்பதான் உங்களுக்குத் தீரப் போகுதோ...
------------------

கணவன்: இந்த சேலை கட்டியிருக்கும் போது நீ மகாலட்சுமி மாதிரியே இருக்க...
மனைவி: யாருங்க அந்த மகாலட்சுமி ?
கணவன்: எங்க ஆபிஸ் ஸ்டோனோ டைப்பிஸ்ட்...!
-------------------------------------------

மனைவி: என்னங்க நம்ம கல்யாண நாளைக் கூட மறந்துட்டீங்களே...
கணவன்: உனக்குத்தான் தெரியுமே... நான் நல்ல விஷயத்தை மறக்க மாட்டேன்னு...
------------------------------

No comments:

Post a Comment

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...