Total Pageviews

Friday, December 7, 2012

ஒரு கவிதை...


கணவனால் மனைவிக்கு எழுதப்பட்டது.

பசியை படைத்த இறைவன்
 

உணவைப்படைத்தான்
 

தாகத்தை படைத்த இறைவன்
 

தண்ணீரைப்ப படைத்தான்
 

அமைதியான உலகை படைத்த இறைவன்
 

உன்னைப் படைத்தான்
-------------------
என் மனைவி நான் சொல்றதுக்கெல்லாம் சரின்னு தலையாட்டுவா.
ரொம்ப கொடுத்து வைச்சவர் நீங்க, விவரமா சொல்லுங்க.


உதாரணமா நான்தான் சமைப்பேனு சொல்லுவேன். சரின்னுடுவா. நான் தான் துவைப்பேன்னு சொல்லுவேன் சரின்னுடுவா.

-----------------------

மனைவி: ராத்திரி தூக்கத்தில ஏன் சிரிச்சிங்க.?
கணவன்: கனவுல அனுஷ்கா வந்தா..!
மனைவி: அப்பறம் ஏன் கத்துனீங்க.?
கணவன்: நடுவுல நீ வந்துட்ட..!

------------------------
கணவன்:தூக்கத்தில் உன் குரல் கேட்டு எழுந்து பார்த்தேன்
ஆனால் நீ இல்லை...
மனைவி: அப்பறம்....
கணவன்: பின்பு தான் தெரிந்தது அது பக்கத்து வீட்டு "எருமை மாடு" என்று!
------------------------------------

இராமசாமி : நான் எப்போதும் கீதா உபதேசம் கேட்கிறேன், அதன் படியே நடந்து கொள்கிறேன்
கருப்பசாமி : அவ்வளோ நல்லவரா நீங்க!
இராமசாமி : அப்படியெல்லாம் இல்லை எங்க வீட்டுக்காரம்மா பேரு கீதா
----------------------------


கணவன்: ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு!
குடிக்க வெந்நீர் கொடு!
மனைவி: ஏங்க இப்படி பயப்படுறீங்க?
கணவன்:மூளைக் காய்ச்சல்தான் பரவுது!
மனைவி: அது எப்பிடி உங்களுக்கு வரும்!
------------------------
 

No comments:

Post a Comment

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...