Total Pageviews

Thursday, January 19, 2012

எங்க ஆபிஸ் டைப்பிஸ்ட்..






மனைவி: அத்தான்... உங்களை கணவராக அடைய நான் நிறைய கொடுத்து வைத்தவள்...


கணவன்: உங்கப்பாகிட்ட வரதட்சணை வாங்கியதை இப்படிக் குத்திக் காட்டிப் பேசாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்.
-----------------------------------


"கணவன்: உன் போட்டோவா இது...எனக்கே சந்தேகமா இருக்கு...


மனைவி: என் மேலே இருக்கிற சந்தேகம் எப்பதான் உங்களுக்குத் தீரப் போகுதோ...
------------------------------


 "மனைவி: என்னங்க...உங்க சட்டையெல்லாம் எண்ணையா இருக்கு...?

கணவன்: ஆபிஸில தலைவலின்னு டைப்பிஸ்ட் என் மேலே கொஞ்சம் சாய்ந்திருந்தாள்."
------------------------------------


"மனைவி: கல்யாணம் ஆகி இந்த இருபது வருசத்தில நான் என்ன சுகத்தைக் கண்டேன்...?


கணவன்: மூணு மாசத்தைக் குறைத்து விட்டாயேடி...?


மனைவி: ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள். அதை ஏன் சேர்க்கறீங்க...


--------------------------------------------------------------------


"கணவன்: இந்த சேலை கட்டியிருக்கும் போது நீ மகாலட்சுமி மாதிரியே இருக்க...


மனைவி: யாருங்க அந்த மகாலட்சுமி ?


கணவன்: எங்க ஆபிஸ் டைப்பிஸ்ட்...!


-------------------------------------------------------------------------
"மனைவி: என்னங்க நம்ம கல்யாண நாளைக் கூட மறந்துட்டீங்களே...


கணவன்: உனக்குத்தான் தெரியுமே... நான் நல்ல விஷயத்தை மறக்க மாட்டேன்னு...
------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...