Total Pageviews
Saturday, November 28, 2015
Friday, November 27, 2015
விவசாயம் பண்ணப் போறேன்!
இளைஞன் : வன்முறை இல்லாத ஒரு தலைமுறையை உருவாக்க முடிவு பண்ணியிருக்கேன் சார்!
முதியவர் : வெரிகுட்! வெரிகுட்!! அதுக்கு நான் என்ன உதவி பண்ணனும்?
இளைஞன் : உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும். அவ்வளவு தான் சார்!
********************************
என்னடா மாப்ளே.... நம்ம தெரு ஜோசியருக்கு திடீர்னு மவசு கூடிருச்சு !!
எப்பவும் பெண்கள், கூட்டம் கூட்டமா போறாங்க !!! " அப்படி என்ன நல்லாவா குறி சொல்றாரு ???!! "
,
"ஆமாம் மச்சான்.. இப்பல்லாம் அவர் ஜோசியம் சொல்லிப்புட்டு கூடவே.. அடுத்த வாரம் மழை பெய்யுமா ? குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை உருவாகுமா ? இல்லையா ? மழை வருமா ? வராதான்னு ! சொல்லிப்புடுறாராம்!!!! ??? அதான் !
***********************************
சாப்பாட்டு பந்தியில் ராமு : “உங்களை நான் இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே…!”
சோமு : சாப்பாட்டை வாய்க்குள் திணித்துக் கொண்டே “அட, நீங்கள் ரெண்டாவது பந்தியில சாப்பிட்டுக் கொண்டிருந்த போது உங்க எதிர்ல உட்கார்ந்திருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேனே…” நாந்தான் அது !
ராமு : “ஏங்க..! நீங்க மொய் வைக்கலை…?” .
சோமு : அட… போங்க தம்பி ! மாப்பிள்ளைப் பய எனக்கு பத்திரிகையே வைக்கல… ! நான் ஏன் அவனுக்கு மொய் வைக்கணும்?”
ராமு : அடப்பாவிப்பயலே ஓசில சாப்பிட வந்தவனாடா நீ..
*********************************
காவல் துறை அதிகாரியிடம் பெண் ஒருவர் : என்னைக் கண்டபடி திட்டி வாரம் ஒரு முறை மொட்டைக்கடிதம் வருது சார்!”
“காவல் துறை அதிகாரி : உங்களுக்கு யார் மேலாவது சந்தேகமா இருக்கா ?”
“பெண் : நேர்ல திட்டுவதற்க்கு பயந்துகிட்டு ! என் புருசனே மொட்டை கடிதாசி எழுதுறாறோன்னு சந்தேகப்படறேன், சார்!”
***************************************
ராமு: மழை எப்போ நிக்கும்?
சோமு : ஏண்டா மாப்ள ! வயல்ல இறங்கி வேலை பார்க்க போறியா?
ராமு: இல்ல மாமு, மழை நின்னுடுச்சுன்னா, ரோட்ட உழுது விவசாயம் பண்ணப் போறேன்!
************************************
முப்பது வருஷம் இளமையா இருக்க வழி இருக்கா?" 300 வது நகைச்சுவை பதிவு !
பிரதமர் : கடையில் என் படங்களை மட்டும் விற்க்கின்றாயே ! ஏன்? மற்ற தேசத்தலைவர்கள் படங்களை எல்லாம் விற்க்க மாட்டாயா?
படம் விற்பவர் : தேசத்தலைவர்கள் / சினிமா நட்சத்திறங்கள் எல்லாப்படங்களும் விற்று தீர்ந்து விட்டது ! தங்கள் படத்தை தவிர !
*******************************************
வந்தவர் : உங்க கடைய இன்னும் எப்படி ஆக்ரமிப்புல இடிச்சு காலி பண்ணாம இருக்காங்க??
கடைக்காரர் : என்னய்யா சொல்றே??
வந்தவர் : ஆமாங்க.. நீங்கதானே சொன்னீங்க ! திருச்சி மெயின்ரோடுல கடை வச்சிருக்கேன்னு..! அதான் !
******************************************
ராஜா : என் பையன் பண்ண காரியத்துனால என்னால வெளியே தலை காட்ட முடியலை !
மந்திரி : அப்படி என்ன பண்ணிட்டான்..?"
"ராஜா : என்னோட விக்கை எடுத்து அவன் போட்டுக்கிட்டுப் போய்ட்டானே!
********************************
பேஷன்ட்: டாக்டர், நான் தெரியாம சாவியை முழுங்கிட்டேன்.
டாக்டர்: எப்போ நடந்தது?
பேஷன்ட்: அது ஆச்சு மூணு மாசம்.
டாக்டர் கோபமாக: இம்புட்டு நாள் என்ன செஞ்சீங்க?
பேஷன்ட்: டூப்ளிகேட் சாவி உபயோகப்படுத்தினேன்,
டாக்டர் கோபமாக : இப்ப ஏன் வந்தீங்க ?
பேஷன்ட்: இப்போ அதுவும் தொலைஞ்சி போச்சு !
***************************
நடிகை : இன்னும் முப்பது வருஷம் இளமையா இருக்க வழி இருக்கா?"
டாக்டர் : "எதுக்கு?"
நடிகை : ஒரு மெகா சீரியல்ல கதாநாயகி வாய்ப்பு கிடைச்சிருக்கு!
***********************************
Thursday, November 26, 2015
காந்தி படம் சேகரிக்கப் போறேன்.. !
நண்பர்1:நான் சாப்பிடாம என் மனைவி சாப்பிடவே மாட்டாடா மச்சி ! என் மேல அவ்ளோ பாசம் அவளுக்கு!
நண்பர் 2: சில பேரு காக்காவுக்கு சோறு வைக்காம கூடத்தான் சாப்பிட மாட்டாங்க...! அதுக்காக காக்கா மேல காதல்னு எடுத்துக்க முடியுமா?
நண்பர் 1: ???? ...
*************************************
ராமு: சோமு, அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி வருதில்ல... அதனால நான் காந்தி படமா சேகரிக்கப் போறேன்.. !
சோமு: நல்ல விஷயம்.. அதுக்கு நான் என்ன பண்ணனும்?
ராமு: உன்கிட்ட இருக்கற காந்தி படம் போட்ட 50, 100, 500, 1000 ரூபாய் நோட்டெல்லாம் எனக்குத் தந்தா ரொம்ப யூஸ் புல்லா இருக்கும்!
சோமு: !!!!
நண்பர் 2: சில பேரு காக்காவுக்கு சோறு வைக்காம கூடத்தான் சாப்பிட மாட்டாங்க...! அதுக்காக காக்கா மேல காதல்னு எடுத்துக்க முடியுமா?
நண்பர் 1: ???? ...
*************************************
ராமு: சோமு, அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி வருதில்ல... அதனால நான் காந்தி படமா சேகரிக்கப் போறேன்.. !
சோமு: நல்ல விஷயம்.. அதுக்கு நான் என்ன பண்ணனும்?
ராமு: உன்கிட்ட இருக்கற காந்தி படம் போட்ட 50, 100, 500, 1000 ரூபாய் நோட்டெல்லாம் எனக்குத் தந்தா ரொம்ப யூஸ் புல்லா இருக்கும்!
சோமு: !!!!
சந்தோஷம் தான்! ...
ஜோசியர் : உங்களுக்கு ஒரு தோஷம் இருக்கு...
கல்யாணம் ஆனா அது நிச்சயமா காணாமப் போயிடும் !
ராமு: அப்படி என்ன தோஷம்?
ஜோசியர்: வேறென்ன சந்தோஷம் தான்! ...
**************************************
ரமா: ஆனாலும் இந்த கீதாவுக்கு பணத் திமிர் அதிகம் தான்...
பாமா: ஏன் என்ன பண்ணினா?
ரமா: தீபாவளிக்கு ‘பருப்பு' வடை சுட்டு, எல்லா வீட்டுக்கும் கொடுத்து விட்ருக்கா... ...
பாமா: ஏன் ?
ரமா: பருப்பு ஒரு கிலோ 180/- உளூந்து ஓரு கிலோ 170/- நல்லெண்ய் 1 லிட்டர் 220/- ரூபாய்.
*****************************
நண்பர் 1: மனைவி, மழை - இந்த ரெண்டுக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா?
நண்பர் 2: தெரியலையேப்பா...
நண்பர் 1: இந்த ரெண்டுமே இல்லாதப்போ எப்ப வரும்ன்னு ஏங்குவோம்.... வந்தா ஏண்டா வந்ததுதுன்னு புலம்புவோம்....!
********************************
Wednesday, November 18, 2015
பென்சன் வாங்குறார் !
வேலைவாய்ப்பு அதிகாரி: நீ பதியறதுக்கு, உன்னோட அப்பா, தாத்தாவையும் கூட்டிட்டு வந்திருக்கியே! ஏன்?"
கல்லூரி மாணவர் : அப்பாவுக்குப் பதிவை புதுப்பிக்கணும் ! எங்க தாத்தாவுக்கு முதல் இண்டர்வியூ வந்திருக்கு!" அதான் !
---------------------------------------------------
அந்த ஆள் எப்பவும் மத்தவங்க கையைத் தான் எதிர்பார்ப்பாரு..."
"ஏன்...?"
"அவருதான் கைரேகை ஜோசியம் பார்க்கறவராச்சே...!"
***************************************
தரகர் : பொண்ணு புண்ணியம் பன்னியிருக்குங்க! "மாப்பிள்ளைப் பையனுக்கு மாத வருமானம் இருபதாயிரம் !.
மாப்பிள்ளை வீட்டை விட்டு எங்கேயும் போக வேண்டியதில்லை."
பெண்னின் தகப்பனார் : அப்படியா, என்ன வேலை?"
தரகர் : "ரிட்டயர்டு ஆகிப் பென்சன் வாங்குறார் !
*****************************
டாக்டர் இவ்வளவு மருந்தையும் ரெண்டே நாள்ல சாப்பிட்டு முடிக்கணும்னு சொல்றீங்களே, ஏன்?"
ரெண்டு நாளைக்கு அப்புறம் கெட்டு போயிடும்! எக்ஸ்ப்ரி டேட் முடிஞ்சுடும் !
-------------------------------------------------------------------------------------------
கல்லூரி மாணவர் : அப்பாவுக்குப் பதிவை புதுப்பிக்கணும் ! எங்க தாத்தாவுக்கு முதல் இண்டர்வியூ வந்திருக்கு!" அதான் !
---------------------------------------------------
அந்த ஆள் எப்பவும் மத்தவங்க கையைத் தான் எதிர்பார்ப்பாரு..."
"ஏன்...?"
"அவருதான் கைரேகை ஜோசியம் பார்க்கறவராச்சே...!"
***************************************
தரகர் : பொண்ணு புண்ணியம் பன்னியிருக்குங்க! "மாப்பிள்ளைப் பையனுக்கு மாத வருமானம் இருபதாயிரம் !.
மாப்பிள்ளை வீட்டை விட்டு எங்கேயும் போக வேண்டியதில்லை."
பெண்னின் தகப்பனார் : அப்படியா, என்ன வேலை?"
தரகர் : "ரிட்டயர்டு ஆகிப் பென்சன் வாங்குறார் !
*****************************
டாக்டர் இவ்வளவு மருந்தையும் ரெண்டே நாள்ல சாப்பிட்டு முடிக்கணும்னு சொல்றீங்களே, ஏன்?"
ரெண்டு நாளைக்கு அப்புறம் கெட்டு போயிடும்! எக்ஸ்ப்ரி டேட் முடிஞ்சுடும் !
-------------------------------------------------------------------------------------------
Tuesday, November 17, 2015
மழை விட்டு விட்டு பெய்யும் !
கணவன்: நமக்கு, டாக்டர் செலவு மட்டும் எனக்கு மாசம் 1000/- ரூபாய் ஆகுது.
மனைவி: டாக்டரோட செலவைப் போய் நீங்க ஏன் பண்றீங்க?
**************************************
எஜமானி: நம்ம ஊர்ல 24 மணி நேர LOCAL நியூஸ் சானல் வரப்போகுதாம்.......
வேலைக்காரி: அதுக்காக என்னைய வேலையை விட்டு நீக்கிவிடாதீங்கம்மா.... !
****************************************
பாலு : வெளிநாட்டிலிருந்து உன் பையன் என்ன வாங்கி வந்தான்"
சீனு : "நாலு செண்ட் தான்"
பாலு : "ஏன்..ஒரு ஏக்கர் வாங்கிட்டு வரச் சொல்லி இருக்கலாமே..!
************************************
ராமு : "டைம் இஸ் கோல்டுன்னு சொன்னா, நீ ஏன் ஒத்துக்க மாட்டேங்குற?"
சோமு: அதை அடமானம் வைக்க முடியாதே !
******************************************
கீதா: ஏன்டி.. டிவியில மழை விட்டு விட்டு பெய்யும்னு சொல்றாங்களே... ஏன் ? தொடர்ந்து பெய்யாதா?
சுதா: வானத்துல மழைத் தண்ணி கம்மியா இருக்காம் ! அதான் நம்ம ஊர்ல கரண்ட் விட்டு விட்டு வர்ற மாதிரி மழையையும் விட்டு விட்டு பெய்யுமாம் !
********************************************
.
Subscribe to:
Posts (Atom)
30 நாட்களும் முப்பது விதமான உப்புமா செய்வதெப்படி !
"வக்கீல் சார்... என்னய எம் பொண்டாட்டிட்டருந்து காப்பாத்துங்க சார்... காப்பாத்துங்க...!!" "ஏம்ப்பா... என்ன நடந்துச்சி...!...
-
"வக்கீல் சார்... என்னய எம் பொண்டாட்டிட்டருந்து காப்பாத்துங்க சார்... காப்பாத்துங்க...!!" "ஏம்ப்பா... என்ன நடந்துச்சி...!...
-
ஒருத்தர்க்கு அவர் மனைவி வளர்க்கிற நாயைக் கண்டாலே எரிச்சலா இருந்தது. ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிர...
-
டாக்டர் , எங்க தொட்டாலும் வலிக்குது" "எங்கே தொட்டாலுமா?" "ஆமாம், டாக்டர் " "எங்கே, இடது காலைத் தொடுங்க...








