Total Pageviews

Monday, March 12, 2012

கேரட் இல்லை, முள்ளங்கி



ஏன்டா நாய் படம் வரைஞ்சுட்டு வாய் மட்டும் வரையாம வச்சு இருக்க?" 

"
ஏன்னா.. அது வாயில்லா பிராணி சார்!"

 

ஒருவன்: தொண்டர்களின் கன்னம் எல்லாம் வீங்கியிருக்கின்றதே.... ஏன்? 

தொண்டர்: தலைவர் "அறை" கூவல் விடுத்தார்ல அதான்.......

 
சிலந்தி 1: ஏன் அந்த சிலந்தி எல்லோருக்கும் இனிப்பு கொடுக்கின்றது? 
சிலந்தி 2: அது புதிதாய் வெப் சைட் ஆரம்பிச்சிருக்காம்


"நேற்று பெண் பார்க்கப் போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்டா...!" "பெண் அவ்வளவு அழகா?" "இல்லடா... விஷயம் தெரிஞ்சு என் மனைவியும் அங்கே வந்துட்டா...!"



தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. 
அவ்வளவு பாசமா மனைவி மேல?" 
"மாப்ளே! 
பாசம் மனைவி மேலே இல்லடா... 
பூக்காரி மேல!"

"கேரட் சாப்பிட்டா கண் நல்லா தெரியும்னு டாக்டர் சொல்லியிருக்காரு.. அதனால்தான் இப்ப நான் கேரட் சாப்பிடுகிறேன்.." 
"நீங்க சாப்பிடுறது கேரட் இல்லை, முள்ளங்கி


"என்ன டாக்டர் ஆபரேஷனுக்கு ஃபீஸ் வாங்கமாட்டீங்களா..?" 
"
ஆமாம். செய்கூலி இல்லை, ஆனா, சேதாரம் உண்டு


சுரேஷ் : "உலகத்தில் ரொம்ப பணம் கிடைக்கும் தொழில் எது?" 
சுந்தர் : "தெரியல....." 
சுரேஷ் : "பல் டாக்டருக்கு தான்."
சுந்தர் : "எப்படி?" 
சுரேஷ் : "அவர் தான் எல்லோர் 'சொத்தை'யும் பிடுங்கறாரே!


சுரேஷ் : "காக்காவுக்குப் பயங்கரக் கடன். உடனே தன்னோட குஞ்சை அடகு வச்சுது. 
சுந்தர் ஏன்?" "ஏன்?" 
சுரேஷ் : "காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சாச்சே.."


 


No comments:

Post a Comment

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...