Total Pageviews

Friday, February 17, 2012

ஏழு மணி நேரம் தான் ஸ்கூல் நடக்குது!!!




கணவன்: (மனைவியிடம்) இன்னிக்கு நீ ஒரு கருப்பு நாய்க்கு சோறு வச்சியா?

மனைவி: ஆமாங்க. ஏன் கேட்கிறீங்க? கணவன்: அதுவா.. தெரு ஓரத்தில ஒரு கருப்பு நாய் செத்துப்போய் கிடந்தது. அதனான் கேட்டேன். மனைவி: ???


"என்ன நம்ம தலைவரைக் கைது செய்ய வேற்று கிரகத்துலேர்ந்து பறக்கும் தட்டுல இங்க வந்திருக்காங்களா?"

 "பின்ன என்ன? செவ்வாய் கிரகத்துல போய் நில அபகரிப்பு செஞ்சா சும்மா விடுவாங்களா?"


நடிகர்: நான் நடித்த படம் நூறு நாள் ஓடும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கு. 

ரசிகன்: நூறு நாள் என்ன சார் நூறு நாள், ஐநூறு நாளே ஓடும்.

நடிகர்: என்னங்க காமெடி பண்றீங்க.... ரசிகன்: ங்கொய்யால.... முதல்ல யாரு காமெடி பண்ணினது...?


ஒருவன்: அந்த ரவுடிய இந்த ஏரியா விட்டு தொரத்தரதுக்கு ஒரு ஐடியா இருந்தா சொல்லுங்களேன்

அண்ணாச்சி... அண்ணாச்சி: அவன எம்எல்ஏவிற்கு நிற்க வைத்து ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சிடுங்க..

 ஒருவன்: அப்பிடி செஞ்சா... அண்ணாச்சி: அஞ்சு வருசத்துக்கு இந்த ஏரியா பக்கமே வரமாட்டான்...

டீச்சர்: படிக்கிற பசங்க ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் தூங்கினால் போதும்.

மாணவன்: அது எப்பிடி டீச்சர் முடியும். ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் தான் ஸ்கூல் நடக்குது!!!

No comments:

Post a Comment

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...