Total Pageviews

Monday, November 18, 2013

அடப்பாவி !




பக்தன் :இனிமே மனிதப்பிறவியே எடுக்காம இருக்க என்ன செய்யணும் சாமி?

கடவுள் : ஏன் அப்படி கேட்கிறாய் பக்தா?

பக்தன் : ஏழேழு ஜென்மத்துக்கும் எனக்கு மனைவியா வரணும்னு வேண்டிக்கிறாள் என்          மனைவி  அதுதான் !

-----------------------

என்ன சார் வீட்டு வாடகை ரொம்ப அதிகமா சொல்றீங்க?

பின்னே…அம்மி ஆட்டுக்கல் எல்லாம் வாங்கி போட்டிருக்கேனே  தம்பி!

------------------------

பக்தன் : கடவுளே..! நான் திருமணம் செஞ்சுக்கலாம்ன்னு இருக்கேன்.. எப்படிப்பட்ட பொண்ணை தேர்ந்தெடுக்கணும்..?

கடவுள் : நல்லா அழகானவளா,  நல்லா சமைக்கத் தெரிஞ்சவளா, நல்லா பணக்காரியா இருக்கணும். போதுமா ?

பக்தன் :  அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்.. மூணு பேரும் ஒருத்தரை ஒருத்தர் சந்திச்சுக்காம இருக்கணும்...!!!

கடவுள் :  அடப்பாவி !

---------------------------------------------

 "மாப்ளே... அந்தப் பிச்சைக்காரன் கேட்டதும் அஞ்சு ரூபாயை உடனே போட்டுட்டியே? ''

"எப்பிடி இருந்தாலும் நீ கேக்கப் போற?

 உனக்குக் கொடுக்கிறதை விட அவனுக்குப் போட்டா புண்ணியமாவது மிஞ்சும்''

----------------------------------------------------------


கணவன்: உங்க அப்பா சாமர்த்தியசாலிதான். எதுக்கும் பயன்படாததையெல்லாம் நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே!

மனைவி: உங்களுக்கு இன்னைக்குத்தான் அது தெரிஞ்சுதா?

கணவன்: அதை நம்ம கல்யாணத்தன்னைக்கே தெரிஞ்சுக்கிட்டேன்!

-----------------------------------------------------

No comments:

Post a Comment

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...