Total Pageviews

Tuesday, November 19, 2013

ஏதாவது கவலையா?



இன்ஸ்பெக்டர்: என்னது 20 போலீஸ் போயி வெறும் 1000 ரூபா கள்ளச்சாராயத்த தான் அழிக்க முடிஞ்சுதா?

கான்ஸ்டபிள்கள் (கோரசாக)- எங்களால அதுக்கு மேல குடிக்க முடியல அய்யா!

----------------------------------------------

முதல் நபர் : ஏன் இப்படி இஷ்டத்துக்கு குடிக்கிறே? ஏதாவது கவலையா?

இரண்டாம் நபர் : என் பொண்டாட்டியை எவனோ ஒருத்தன் இழுத்துக்கிட்டு போயிட்டான்.

முதல் நபர் : நீ கவலைப் படறது நியாயம் தான் !

இரண்டாம் நபர் : அதுக்கு கவலைப்படலே ! எ‌ங்கே மறுபடியும் கொண்டு வந்து விட்டுடுவானோன்னுதா‌ன் பயமா இருக்கு ! அதான்!.

---------------------------------------------------------

கணவன்: எ‌ன்ன‌டி.. அ‌ந்த பா‌ர்ல குடிச்சிட்டுருக்கரவனை உனக்கு தெரியுமா? அவனையே பா‌ர்‌த்து‌க்‌கி‌ட்டு இருக்க?

மனைவி:: அவர் என்னை ஒரு தலையா காதலித்தவர் ! நான் கிடைக்கல்லங்கறதால தா‌ன்  குடிக்க ஆரம்பிச்சுட்டார் பாவம்!

கணவன்  : அப்ப நீ கிடைக்காம போனத நெனச்சு அவன் சந்தோஷத்துல குடிச்சு எஞ்சாய் பண்றான்னு சொல்லு !

---------------------------------------------------.

நகைகளை நிறைய போட்டிருக்கிற மாதிரி உன்ன படம் வரைஞ்சு பெரிசா மாட்டி வச்சிருக்கியே, ஏண்டி?

எப்படியும் நான் செத்தப்புறம் என் கணவர் 2வது கல்யாணம் செஞ்சுப்பார்.

அப்ப அந்த 2வது பொண்டாட்டி இந்த நகைகள் எங்க இருக்குன்னு பைத்தியம் மாதிரி தேடட்டுமே! அதுக்குத்தான்!!

____________________________
இன்ஸ்பெக்டர ஏன் ப‌ணி‌ நீ‌க்க‌ம் செஞ்சுட்டாங்க!

ஒரு கொலை வழ‌க்குல கொலை செய்யப்பட்டவன் உடலையு‌ம் காணோம், கொலை செஞ்சவனும் தலை மறைவாயிட்டான்..
.
அதுக்கு போயா இவர ப‌‌ணி ‌நீ‌க்க‌ம் செஞ்சாங்க?

இரண்டு பேரும் சமாதானமா போயிட்டாங்கன்னு எழுதி வழ‌க்கை மூடி‌ட்டா சும்மா விடுவாங்களா என்ன!

---------------------------------------------

No comments:

Post a Comment

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...